இது ஆப்பிரிக்காவின் வறண்ட நிலமோ அல்லது இந்தியாவின் பாலைவன மாநிலமான ராஜஸ்தானோ அல்ல. ஒருவரின் அக்கவுண்டில் 5000 ரூபாய் செலுத்தப்பட்டதாக பெருமை பேசப்படும் ஆட்சியின் கீழ் இருக்கும் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, மருதநல்லூர் கிராமம். இந்த ஒரு கிராமத்தின் கதையல்ல இது. கிட்டத்தட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இதே தாகம், இதே துயரம், இதே காத்திருப்பு. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், நெல்லை மாவட்டம் திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் என பல இடங்களில் மக்கள் இன்னும் தண்ணீருக்காக வானத்தை நோக்கி நிற்கிறார்கள், சில இடங்களில் ஒரு குடம் தண்ணீர் 8 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள். #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰