இறந்தோருக்கும் பாடப்படுவது திருவாசகம் மட்டுமே. ஏனெனில், சுடுகாட்டிலும் உனக்கு துணையாக இருக்கும் ஒரே தெய்வம் சிவபெருமான் மட்டுமே. சிவபெருமான் தான் இறைவன். அவனே மெய். மெய்யை போற்றி பாடுவதே, திருவாசகம்.
இந்த பிறவியில், சிவபெருமான் தான் இறைவன் என்று உன்னால் உணர முடியவில்லை என்றால், உனக்கு மறுபிறவி நிச்சயம். சிவபெருமான் தான் இறைவன் என்று உணர்ந்தவருக்கு, இப்பிறவியே இறுதியாய் அமையும்..
நமக்கு வாழ்வு தந்த சிவமே மெய். நம்மை வாழ வைக்கும் சிவமே மெய். எதையோ நம்பி நீ வாழ்ந்தாலும், உன்னை வாழ வைப்பது சிவபெருமான் என்பதே மெய். மெய்யே சிவம்.
நாயன்மார்களும்
நால்வரும்
சித்தர்களும்
ஞானிகளும்
யோகிகளும்
மகான்களும்
அருளாளர்களும் சிவனை மட்டுமே வணங்கினர். சிவனடி சேர்ந்தனர். சிவனடி சேர, சிவனை நினைப்போம், சிவனை உரைப்போம், சிவனடி சேரவே சீவித்திருப்போம். சிவனை நினை. தீரும் நம் தீவினை
நமச்சிவாய வாழ்க...
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை
மாதம் ஒருமுறை சித்தர்கள் நாயன்மார்கள் வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயத்தில் மூலிகை நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது...
வாருங்கள் சிவனருளை பெறுவோம்.
வேண்டுவன அனைத்தும் கிடைக்கும் நம் சிவனாரிடம்.
எவன் அடி சேர்ந்தார்க்கும் அழிவுண்டாம் அழிவில்லை சிவன் அடி சேர்ந்தார்க்கு
சிவாயநம #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்