🔥சிவயோகம்*
சிவயோகம்
அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
பொதுவாக இனிய சிவன் என்றாலே
நமக்கு நினைவுக்கு வருவது...
ருத்ராட்ச மாலையும், அரையுடையும், கையிலே உடுக்கையும், சூலமும், தலையிலே கங்கையும், பூதகணங்கள் சூழ இமய மலையில் வாசம் செய்யும் ஒரு அற்புத தெய்வீக உருவம்.இது பக்தி மார்க்கத்தில்.....
ஞான மார்க்கத்தில் சிவம் என்பது ஆதி, அநாதி,வெட்ட வெளி, சூன்யம் ஒன்றுமில்லாத ஒன்று அநாகதம் பேராற்றல் பேரறிவு, தெய்வம், இறை நிலை etc etc.
உருவம் இல்லை. சிவத்தன்மை மட்டுமே.
தியான நிலையில் அறிவே தெய்வம்
என்ற தெளிவுமலர்ந்தால்..
அறிந்தது சிவம்
மலர்ந்தது அன்பு....
அப்பொழுது அன்பு என்பது எது?
சிவத்தின் செயலே....
தன்னுள் இருக்கும் அறிவே... தெய்வம், சிவம், என்ற நிலையை நம் அறிவே உணர்ந்தால், சிவமே செயல்படும் போது அன்பாக மலர்கிறது என்று புரியும்.
அன்பும் கருணையுமே சிவத்தன்மையின் வெளிப்பாடு.
இறையின் தன்மாற்ற சரித்திரம் புரிந்தால்....
எந்தப் பொருளிலும் சிவனைக் காணலாம்.
எந்த நிலையிலும் சிவனாக இருக்கலாம்.
சிவனோடு உறவாக இருக்கலாம்...
உறைந்து இருக்கலாம்.
உடலால் நாம் எல்லோரும் வேறுபட்டு இருந்தாலும், உள்ளத்தால், அறிவால், இறைவனோடும் உயிர்களோடும் ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம்.
சிவயோகம் என்றால் என்ன???
நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் மனதில் உறுதி பூண்டு,உணர்ந்து, மதித்து,அனைவரோடும் அன்பும் கருணையோடும் உறவு கொண்டு கடமையாற்றி வந்தால்....
அதுவே சிவயோகம்.
அறிவோம், தெளிவோம், உயர்வோம்.
இறையே குருவே சரணம் சரணம்....
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏ஆன்மீகம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ 🦜 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்