நில்லாது ஓடும்
மேகங்களே
என் நினைவினை
அவளிடம் சேருங்கள்
ஜில்லெனவீசும்
பூங்காற்றே
அவள் வாசத்தை
என்னிடம் சேருங்கள்
பறந்து திரியும்
பறவைகளே
என் புலம்பலை
அவளிடம் பாடுங்கள்
எவ்வளவு தூரம் தள்ளி
வாழ்ந்தாலும்
என் கண்கள் தேடுவது
அவளைதான்
செல்லரித்து போகும்
கனவுகளை
நான் சொல்லி தீர்க்கிறேன்
கவிதையிலே
காகிதம் மட்டுமே
தீருதடி
கனவுகள் ஏனோ நீளுதடி!!!💔💔💔 #உனக்காகத்தான்