ShareChat
click to see wallet page

#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 24-வது அதிகாரமான முச்சொரூபம், ஆன்மா அடையும் மூன்று நிலைகளான சீவசொரூபம், பரசொரூபம், மற்றும் சிவசொரூபம் ஆகியவற்றை விளக்குகிறது*. இவ்வதிகாரத்தில் உள்ள முக்கிய கருத்துக்கள் : பொருள் விளக்கம் : "முச்சொரூபம்" என்பது ஆன்மா தனது தளைகளிலிருந்து (மலங்கள்) விடுபட்டு, படிப்படியாக உயர்ந்து அடையும் மூன்று நிலைகளைக் குறிக்கும். சீவசொரூபம் : சீவன் (ஆன்மா) தன்னை உணரும் நிலை. பரசொரூபம் : பரம்பொருளின் தன்மையை உணரும் நிலை. சிவசொரூபம் : சிவனோடு இரண்டறக் கலக்கும் பேரின்ப நிலை. பாடல் வரிகள் : *24. முச்சொரூபம்* 2478 ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே. 1 2479 மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. 2 2480 உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆரறி வாரே. 3 2481 பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருவுரு வாகிக் குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. 4 2482 மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத் தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே. 5 2483 கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும் சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. 6 2484 உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ் விடம்தரு வாசலை மேல்திற வீரே. 7 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

641 காட்சிகள்