ShareChat
click to see wallet page

🌹எமது இறைவனாகிய இனிய சிவபெருமானே ஆன்மாக்கள் கன்மங்களுக்கு ஈடாகச் சோபான முறையினின்று அவற்றை அனுபவித்துத் தொலைத்துச் சைவத்தில் வந்த முத்தி அடைதற்கு எல்லாச் சமயங்களையும் உண்டாக்கிய கருத்தன் ஆகலான். நாமும் பல பிறப்புக்களிலே இச்சோபான மார்க்கங்களினின்று அவ் அவற்றை உறுதியாகக் கொண்டு அனுஷ்டித்து வந்த பலத்தினால் தான் சைவத்தில் வந்திருக்கின்றோம். ஆதலால், நாம் சைவத்தில் வந்து விட்டோம் என்று எண்ணி மற்ற மதங்களை அழிக்கப் புகுந்தால் அழிக்கப்படாமை மாத்திரையே அன்றி, அவற்றை உண்டாக்கிய எமது இறைவன் கருத்திற்கு மாறுபட்டவர்களாய் அவனால் தண்டனையும் அடைவோம் என்பது தப்பாது. "தோல்வியும் வெற்றியும் தொன்மதங்கட்கு எலாம் கால பேதத்தின் உண்டு உந்தீபற கருத்தன் செயல் அது என்று உந்தீபற' "வாதிகள் தங்களுக்கு அல்லால் வலியின்மை ஓதார் மதங்களுக்கு உந்தீபற' என்பன ஈண்டே நோக்கற்பாலன. அங்ஙனமாயின் எல்லா மதங்களும் சமம் ஆவனவோ எனின், ஆகா. என்னை? பலவேறு வகைப்பட்ட சமயங்களும் அவ்வச் சமயப் பொருள்களும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டுக் கிடத்தலின் எது சரி எது பிழை என்று ஆராயப் புகின், இது சரி அது பிழை என்று கூறி ஒன்றையேனும் தள்ளிவிடாமல், எல்லாவற்றையும் உடன்படுத்தித் தனக்கு அங்கமாகக் கொண்டு, தான் அங்கியாய் நிற்கும் சமயம் எதுவோ அதுவே முடிந்த பேறாகிய பிறந்து இறவாப் பெருவாழ்வாகிய பேரின்பம் தரும் சிறந்த சமயமாகும். அது சைவ சமயமே என்று உணர்க. மேலே போந்த கருத்துப் பற்றியன்றே, "புறச்சமய நெறி நின்றும்" "ஓது சமயங்கள்' என்ற பாடல்கள் சிவஞான சித்தியில் கூறப்பட்டதூஉம் என்க. கிறிஸ்துமதம் முதலிய பல மதங்கள் ஏசு கிறிஸ்து முதலியோரால் உண்டாக்கப்பட்டன என்று அவ்வம்மத நூல்களிலே கூறப்பட்டனவாக, அவற்றைச் சிவபிரானே உண்டாக்கினார் என்றல் சாலாதாம் பிற எனின் அற்றன்று. அது சாலுமாறு கூறுதும்: வேத ஆகமங்களே முதல் நூல்கள் எனவும், அவற்றிலே எல்லா மதங்களும் எல்லாப் பொருள்களும் சூக்கும தூலமாகக் கூறப்பட்டன என்றும், ஒவ்வொரு கால விசேடத்திலே ஒவ்வொரு கன்ம விசேடம் பற்றி ஒவ்வோர் ஆன்மா, சிவபிரான் அருளால் அவ்வேத ஆகமங்களிலே "சமுத்திர கலச நியாயம்' பற்றித் தாம் அறிந்த அளவில் ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொண்டு "தர்க்க உத்தரங்களினால்' ஒவ்வொரு மதம் செய்து, தான் தான் செய்த மதமே மெய்ச் சமயம் என்று சாதியா நிற்கும். ஆகலான், அவன் அருளினால் செய்த நூலும் அவன் செய்த நூலேயாம். அவன் அருள் இன்றேல் அவ்வான்மாக்கள் செய்ய வல்லுநர் ஆகார் என்க. இக்கருத்துப் பற்றியன்றே, அருமறை ஆகம முதல்நூல் அனைத்தும் உரைக்கையினால் அளப்பரிதாம் அப்பொருளை அரன்அருளால் அணுக்கள் தருவர்கள்பின் தனித்தனியே தாம்அறிந்த அளவில் தர்க்கமொடு உத்தரங்களினால் சமயம் சாதித்து மிருதி புராணம் கலைகள் மற்றும் எல்லாம் மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம் வேதஅங்கம் சுருதி சிவாகமம் ஒழியச் சொல்லுவது ஒன்று இல்லை சொல்லுவார் தமக்கு அறையோ சொல் ஒணாதே எனவும், வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள் வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள் எனவும் போந்த பிரமாணங்கள் சிவஞான சித்தியுள் எழுந்ததூஉம் என்க. இன்னும் அவாந்தர சிருட்டி ஆரம்ப காலத்திலே, ஆன்மாக்கள் மீது முகிழ்த்த பெரும் கருணையாலே, சிவபிரான் அருளிச் செய்த வேத ஆகமங்களிலே, சூக்குமமாகச் சொல்லப்பட்ட புறமதங்களையே பிற்காலத்து ஒவ்வோர் ஆன்மா வேறு பிரித்தெடுத்துக் கொண்டு சொன்னபடியால், முதற்கண் சொன்னவரே அதற்குக் கருத்தர் என்பதும் ஒரு பொருள். சமணக் கடவுள் புத்தக் கடவுள் செய்தது என்று அவ்வச் சமயத்தார் கூறும் சமண நூல் புத்த நூல்கள், வேத ஆகமத்தில் சுருக்கிக் கூறப்பட்டமை நோக்கியன்றே, சிவபிரான் அவற்றைச் செய்தனர் என்று திருஞானசம்பந்தப் பிள்ளையார், இணையில் இரும்பூளை இடம் கொண்ட ஈசன் அணைவில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே எனவும், அப்பர் சுவாமிகள், பரிதியானைப் பல்வேறு சமயங்கள் கருதியானை எனவும், விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் எனவும் ஓதி அருளியதூஉம் என்க. தொன்னூல் பரசமயம் தோறும் அது அதுவே நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து என்று அருளிச் செய்த குமரகுருபர சுவாமிகள் கருத்தும் அதுவே. ஈண்டு தொன்னூல் பரசமயம் என்றது பண்டு தொட்டுப் பயின்று வரும் வேத ஆகமங்களில் கூறப்பட்ட புறச்சமயம். எல்லாச் சமயங்களையும் உண்டாக்கிய கருத்தாவுக்கு அவ்வச் சமயப் பற்று வைத்து, அவ்வச் சமய நூல் விதிப்படி ஒழுகுபவர்க்கு அது அதற்கேற்ற பயன் கொடுத்தலும் இன்றியமையாத கடப்பாடு ஆதலின் அன்றே, யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர் எனச் சித்தியுள் கூறப்பட்டதூஉம் என்க. இக்கருத்துப் பற்றியே பிறரும், எவ்வெவர் தம்மையேனும் யாவரே எனினும் போற்றின் அவ்வர் இடமாக் கொண்டே அவர்க்கு அருள் தருவாய் போற்றி எனக் கூறியதூஉம் என்க. திருநெல்வேலி பேட்டையில், கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், திருஞானசம்பந்தர் திருவருட்கழகம் என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. இக்கழகத்தின் நான்காவது ஆண்டு விழாவில்(1931ஆம் ஆண்டாக இருக்கலாம்), ஈழத்துச் சைவப் பெரியார் சிவஸ்ரீ சுவாமிநாத பண்டிதர் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரையில் இருந்து ஒரு பகுதி. அக்காலகட்டத்தில் சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த சித்தாந்தம் இதழில், பண்டிதரது உரை வெளியானது. 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி 🦜 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்

9.1K ने देखा