ShareChat
click to see wallet page

வாழ்க்கை உன்னை தள்ளுவது போலத் தோன்றும் ! ஆனால் , உண்மையில் பிரபஞ்சம் உன்னை சரியான இடத்துக்கு நகர்த்திக்கொண்டிருக்கும். நீ மூடப்பட்ட கதவுகளைப் பார்த்து “என் வாழ்க்கை முடிந்தது” என நினைப்பாய்.. ஆனால் , அதே நேரத்தில் உன் பின்னால் ஒரு கதவு அமைதியாக திறக்கப்பட்டிருக்கும்.. அதைப் பார்க்கும் மனநிலையில்லை அவ்வளவுதான் ! கர்மா என்பது பழிவாங்கும் சட்டம் அல்ல.. அது சமநிலை ஏற்படுத்தும் விதி... நீ அதிகமாக பொறுத்திருந்தால் ஒரு நாள் வாழ்க்கை உனக்கு அதிகமாகத் தரும். நீ யாரையும் காயப்படுத்தாமல் முன்னேறினால் உன் முன்னேற்றம் நிலைத்திருக்கும். இதுதான் ஆழம் ! நீ கேள்வி கேட்டபோது பிரபஞ்சம் அமைதியாக இருந்தது. நீ ஏற்றுக்கொண்டபோது அது வேலை செய்யத் தொடங்கியது. எதுவும் நடக்காத நாட்களில் நம்பிக்கையை விடாதே. அந்த நாட்களில்தான் உன் கர்மாவின் பழைய பாக்கிகள் முடிக்கப்படுகின்றன ! ஒரு நாள் நீ பின்னால் திரும்பிப் பார்த்தால் உனக்கே ஆச்சரியம் வரும் ! “நான் நினைத்ததைவிட என்னை வாழ்க்கை நன்றாகவே நடத்தி இருக்கிறதே” என்று ! #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻

2.8K காட்சிகள்