#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
*எட்டாம் தந்திரத்தில் 27-வது அதிகாரமாக விளங்குவது "முப்பாழ்" ஆகும். இது ஆன்மா இறைவனை அடையும் பாதையில் கடக்க வேண்டிய மூன்று நிலைகளைக் குறிக்கிறது*.
*முப்பாழ் - விளக்கம் :
ஆன்மா முக்தியடைவதற்கு, தன்னைச் சூழ்ந்துள்ள மூன்று விதமான "பாழ்" நிலைகளைக் கடக்க வேண்டும் என திருமூலர் விளக்குகிறார்*:
மாயப் பாழ் : உலகப் பொருட்கள் மற்றும் மாயையினால் உண்டாகும் பற்றுகள் நீங்குதல். இது காரியப் பாழ் என்றும் அழைக்கப்படும்.
போதப் பாழ் (ஆன்மப் பாழ்) : "நான் அறிகிறேன்" என்ற ஆன்மாவின் முனைப்பு அல்லது அறிவு நீங்குதல். இது காரணப் பாழ் என்றும் குறிப்பிடப்படும்.
உபசாந்தப் பாழ் (சிவப்பாழ்): மேற்கண்ட இரண்டு நிலைகளும் நீங்கிய பின், சிவசக்தியில் ஆன்மா ஒன்றிப்போகும் நிலை. இங்குச் சீவன் பரத்தோடு கலந்து அடங்கும்.
பாடல் வரிகள் :
*27. முப்பாழ்*
2495 காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. 1
2496 மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே. 2
2497 எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. 3
2498 துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே. 4
2499 ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. 5
2500 உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 6
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏