வார்த்தைகள்
உனக்காய்
நெய்யப்படுபவை
மருந்தென
விருந்து சொற்கள்
பந்தியிலிடத் தெரியாது
பீடத்தின் காணிக்கை
நீ சொல்வதே
பலியிட்ட பின்னும்
நோன்பு பாத்திரம்
குறையாது இருப்பது
காலவதை
நான் இருக்கிறேன்
என்பதாய்
கேட்டுக்கொள்ள
சொல்லிக்கொள்ள
இதுவரையிலும் ஓருயிரை சம்பாதிக்கவில்லை
என்பதென் வறுமைப்பிணி
இப்போது உன்நிழலை
வரைவதென்றால்
எந்தப்புள்ளியில்
ஆரம்பிப்பது நான்
என் சிலுவைகளில்
எத்தனை ஆணிகள்
எண்ணிக்கொள்
பின் உயிர்த்தெழும்
நாளுக்கான
என் பாடுகளை
நீயே வரைந்துவிடு
நாளை வெள்ளிக்கு
உன் வானத்தில்
உன் அண்மையில்
நீ சிமிட்ட ஒருபுள்ளி
நட்சத்திரமாய்
உனக்காய் ஆகிப்போகிறேன்..💔💔💔 #💞Feel My Love💖