சிவனை அடைவது சித்தாந்தம்…!
நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல் சித்தாந்தமே.
விளக்கம்:-
சிவனைச் சிந்தையில் இருத்த வேண்டும். சத்தம் முதலிய ஐந்து புலன்களில் இருந்து விடுபட வேண்டும். சுத்த மாயை அசுத்த மாயைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். இங்கனம் அனைத்தையும் கடந்து தலைவனான முழு முதற் பொருளை அடைவதே சித்தாந்தம்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்