உன்னை அனைத்து வழிகளிலும் குறி வைத்து இருக்கிறார்கள் என்று தோன்றுகிறதா?
அதாவது குடும்பம், தொழில், வேலை, உறவினர், பழகியவர்கள், முகம் தெரியாதவர்கள் எல்லாரும் உன்னைப் பற்றி பேசுகிறார்கள் போல உணர்கிறாயா?
உன்னைப் பற்றி பேசப்படுவது உன் பலவீனம் அல்ல !
அது உன் தாக்கத்தின் அடையாளம்..
ஒருவரை யாரும் கவனிக்கவில்லை என்றால், அவரைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள்..
ஆனால் , உன் செயல், உன் முன்னேற்றம், உன் தனித்தன்மை…
இதெல்லாம் பிறரின் மனதில் ஓசை எழுப்புகிறது.
அதுதான் , அவர்கள் உன்னை குறி வைக்கும் காரணம்.
பிரபஞ்சத்தின் விதி என்னவென்றால்,
நீ உயர உயர போனால், காற்று அதிகமாக எதிராக வீசும். ஆனால் , அந்த எதிர் காற்றே பறவைக்கு உயர பறக்க உதவுகிறது.
அதுபோலவே, விமர்சனங்களும் தடைகளும் உன்னை தடுக்க அல்ல ! தள்ளி உயர்த்த தான் வருகிறது.
யாராவது உன்னை குறி வைத்து பேசினால் பயப்படாதே..
யாராவது உன்னை குறை சொன்னால் உடைந்து போகாதே..
அவர்கள் உன்னை கவனிக்கிறார்கள் !
நீ சாதாரணமானவன் அல்ல என்பதற்கான சான்று..
நிழல் எப்போதும் ஒளி இருக்கும் இடத்தில்தான் தோன்றும்.
நீ ஒளியாக இரு.
மற்றவை நிழலாகவே மறைந்து போகும். #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏