ShareChat
click to see wallet page

உன்னை அனைத்து வழிகளிலும் குறி வைத்து இருக்கிறார்கள் என்று தோன்றுகிறதா? அதாவது குடும்பம், தொழில், வேலை, உறவினர், பழகியவர்கள், முகம் தெரியாதவர்கள் எல்லாரும் உன்னைப் பற்றி பேசுகிறார்கள் போல உணர்கிறாயா? உன்னைப் பற்றி பேசப்படுவது உன் பலவீனம் அல்ல ! அது உன் தாக்கத்தின் அடையாளம்.. ஒருவரை யாரும் கவனிக்கவில்லை என்றால், அவரைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள்.. ஆனால் , உன் செயல், உன் முன்னேற்றம், உன் தனித்தன்மை… இதெல்லாம் பிறரின் மனதில் ஓசை எழுப்புகிறது. அதுதான் , அவர்கள் உன்னை குறி வைக்கும் காரணம். பிரபஞ்சத்தின் விதி என்னவென்றால், நீ உயர உயர போனால், காற்று அதிகமாக எதிராக வீசும். ஆனால் , அந்த எதிர் காற்றே பறவைக்கு உயர பறக்க உதவுகிறது. அதுபோலவே, விமர்சனங்களும் தடைகளும் உன்னை தடுக்க அல்ல ! தள்ளி உயர்த்த தான் வருகிறது. யாராவது உன்னை குறி வைத்து பேசினால் பயப்படாதே.. யாராவது உன்னை குறை சொன்னால் உடைந்து போகாதே.. அவர்கள் உன்னை கவனிக்கிறார்கள் ! நீ சாதாரணமானவன் அல்ல என்பதற்கான சான்று.. நிழல் எப்போதும் ஒளி இருக்கும் இடத்தில்தான் தோன்றும். நீ ஒளியாக இரு. மற்றவை நிழலாகவே மறைந்து போகும். #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏

645 காட்சிகள்