நடப்பது நடக்கட்டும்.
ஒரு ராஜா.
அவர் மிகவும் நல்லவர். அதனால் குடிமக்கள் அனைவரும் அவருக்கு விசுவாசமாக இருந்தனர்.
இந்த ராஜாவின் ராஜ்ஜியத்தில்
ஒரு மீனவன் ராஜாவை மிகவும் நேசித்தான். அந்த ராஜாவுக்கு ஒரு குறிப்பிட்ட மீன் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரியும்.
ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக அந்தக் குறிப்பிட்ட மீன் அந்த மீனவனுக்கு கிடைத்தது. அந்த மீன் விலை மதிப்புமிக்கது என்றாலும், அதை விற்கவில்லை. அதற்குப் பதிலாகத் தன் மனம் கவர்ந்த மன்னனுக்கு அன்புப் பரிசாக வழங்குவது, என்று முடிவு செய்து அரண்மனைக்குப் புறப்பட்டான்.
அரண்மனை வாயிலில் உள்ளே அவன் அனுமதிக்கப்பட்டான். உள்ளே சென்ற மீனவன் மன்னனைப் பார்த்து தலை வணங்கி, தான் கொண்டு வந்த மீனை தட்டில் வைத்தான். அந்த மீனைக் கண்டதும் மன்னனின் முகம் மலர்ந்தது.
தலை வணங்கிய மீனவன் கூறினான், "ராஜா இன்று தான் இந்த மீனைப் பிடித்தேன், இதை உங்களுக்கு விருப்பமானால், தயவு செய்து என் அன்பின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றான்.
மன்னன் மனம் நெகிழ்ந்து ஏற்றுக்கொண்டான். தனது உதவியாளரை அழைத்து ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொண்டு வரச் சொன்னான். அந்தப் பையைத் திறந்து ஒரு வெள்ளித் தட்டில் கொட்டினான். அதில் ஒரு காசு மட்டும் தவறி விழுந்து உருண்டோடியது. அந்தக் காசு உருண்டோடி கீழே விழும் முன்பு அந்த மீனவன் ஓடிச் சென்று அதைப் பிடித்துக்கொண்டான்.
அதைக் கண்ட ராணி ராஜாவிடம்,
"இந்தப் பேராசை பிடித்தவனைப் பாருங்கள். நீங்கள் இவ்வளவு பொற்காசுகள் தரும்போது கேவலம் ஒரு காசுக்காக ஓடுகிறான்" என்றாள்.
ராஜாவுக்குக் கோபம் வந்தது.
"பேராசை பிடித்தவனே, நான் உனக்கு நூறு தங்கக் காசுகள் தருகிறேன். ஆனால் நான் இருக்கும்போதே நீ ஒரு காசுக்காகத் துரத்தி ஓடுகிறாய். உன் பேராசைக்கு அளவே இல்லையா"
இதைக் கேட்டவுடன்
திடுக்கிட்ட அந்த மீனவன் வருத்தத்துடன் கூறினான்.
என் மனம் கவர்ந்த ராஜாவுக்கு இந்த மீனைப் பரிசாகத்தான் கொண்டு வந்தேன். எதையும் பதிலாகப் பெறுவதற்கல்ல." இப்படிக் கூறிவிட்டு அவன் கீழிருந்து எடுத்த நாணயத்தை வெள்ளித் தட்டில் வைத்துவிட்டுக் கூறினான்.
"ராஜா இந்த நாணயத்தைப்
பாருங்கள். இதில் உள்ளது யாருடைய உருவம்"
அதற்கு மன்னன் எரிச்சலுடன், "ஏன் கேட்கிறாய் இதில் என் உருவம் இருப்பது தெரியவில்லையா" என்றான்.
"உங்கள் உருவம் அதில்
இருப்பதால்தான் அதைத் துரத்தி ஓடினேன். என் ராஜாவின் பிம்பம் தரையில் வீழ்வதை நான் பார்க்க விரும்பவில்லை" என்று கூறிவிட்டு தலைவணங்கி விடைபெற்றான்.
தன் தவறுக்கு வருந்திய ராஜா ஒரு தூதுவனை அனுப்பினான். எங்கே தான் தண்டிக்கப்படப் போகிறோமோ என்று மீனவன் பயந்தான். ஆனால், மன்னன் அவனுக்கு இரண்டு கை தங்கக் காசுகளைக் கொடுத்து அனுப்பினான்.
இதுதான் கசிந்துருகச் செய்யும் அன்பு. இதயத்தின் தலைசிறந்த இந்த அன்புதான் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான திறவுகோல்.
வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள். மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்திற்கான ஆரம்பம்.
மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது. எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் பிறரிடம் போராடும் நிலையில் இருந்து விடுபடலாம்.
எவரிடமும் விவாதிக்காமல் இருந்தால் பிரச்சினைகள் உருவாகாது. வாழ்வு சில காலம் நடப்பது நடக்கட்டும் என்பதை உணர்ந்தால் அமைதிக்கும் பஞ்சம் இருக்காது.
_*கல்வி என்னும் கரடு முரடான மலையை கடப்பது கொஞ்சம் கடினம்தான்....*_
_*இந்த கரடு முரடான மலையை "நீ "கடந்து விட்டால்*_
_*எந்த விலங்குகளாலும் உன்னை வேட்டையாட முடியாது...*_
_*கல்வி.....*_
_*ஓழுக்கம் என்பது*_
_*கவனிக்கும் போது இருப்பதல்ல.....*_
_*கவனிக்காத போதும் தொடர்வதே. *_
_*இலையுதிர் காலம்
எனினும் சருகாவதில்லை வேர்கள்.*_
_*ஆகையால் கனவுகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்து இருங்கள்.*_
_*அதுதான் உங்களின் இலக்குகளை அடைவதற்கு மனவலிமை தரும்.*_
_*பணத்தை விட நேரம் சிறந்தது.*_
_*கடந்துபோன நேரத்தை எங்கும் எப்போதும் வாங்க முடியாது.*_
_*நேரத்தை வீணாக்காமல் நேர்த்தியுடன் பயன் படுத்துவோம்.*_ #🙏ஆன்மீகம்