sivasenthil
ShareChat
click to see wallet page
@sivasenthil3183
sivasenthil3183
sivasenthil
@sivasenthil3183
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁முடைவெண்டலை ஏந்தித்திரி முதல்வன்சுரர் அசுரர்_ _🍁கடையுங்கடல் உமிழ்நஞ்சடை கண்டன்மழை மேகம்_ _🍁அடையும்மதில் சூழுந்திரு ஆடானையில் மழுவாட்_ _🍁படையும்தரி பரமன்கழல் பணிவார்வினை படுமே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_முடைநாற்றம் உடைய பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சையேற்றுத் திரியும் முதல்வன் !! தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடல் உமிழ்ந்த விஷத்தைக் கண்டத்தில் அடைத்தவன் !! மழைமுகில் அடைகின்ற உயர்ந்த மதில் சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற சூலம், மான், இவற்றோடு மழுவாளையும் ஏந்திய பரமனது திருவடியைப் பணியும் பக்தர்களது வினை அழியும் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
*காசியில் எந்த ஐந்து பேரை எரிக்க மாட்டார்கள் தெரியுமா?* 🌹 இந்துக்களின் புனித தளமான காசியில் இந்த ஐந்து பேரை எரிக்க மாட்டார்களாம். வாருங்கள் யார் யார் என்று பார்ப்போம். பாரத தேசத்தின் ஆன்மீகத் தலைநகராகவும், சிவபெருமானின் உறைவிடமாகவும் போற்றப்படும் காசி, இறையன்பு கொண்டோரின் இறுதிப் புகலிடமாக விளங்குகிறது. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த புனித ஸ்தலத்தில் உயிர் நீத்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது முக்தியை அளிக்கும் என்பது இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இருப்பினும், காசியில் சில குறிப்பிட்ட ஐந்து வகையான உடல்கள் தகனம் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரபுகளுக்குப் பின்னால் ஆன்மீக மற்றும் தத்துவ காரணங்கள் உள்ளன. முதலாவதாக, குழந்தைகள் தகனம் செய்யப்படுவதில்லை. 12 வயதிற்குள் மரணிக்கும் குழந்தைகள் தூய்மையான ஆத்மாக்களாகவும் கடவுளாகவும் கருதப்படுவதால், அவர்கள் மீண்டும் பிறவி எடுக்கத் தகுதியுடையவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களின் உடல்கள் கங்கையில் ஜலசமாதி செய்யப்படுகின்றன. இரண்டாவதாக, சாதுக்கள் மற்றும் துறவிகள் தகனம் செய்யப்படுவதில்லை. உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீக மார்க்கத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இவர்களின் உடல்கள் பூமிக்குள் சமாதி செய்யப்படுகின்றன. அவர்கள் ஏற்கனவே பந்தங்களிலிருந்து விடுபட்ட முக்தி நிலையை அடைந்துவிட்டதாக நம்பப்படுவதே இதற்குக் காரணம். மூன்றாவதாக, கர்ப்பிணிப் பெண்கள். இவர்களின் உடல்களும் கங்கையில் விடப்படுகின்றன. ஏனெனில், இவர்களை எரிப்பதால், வயிறு வெடிக்கும் என்பதால் எரிக்க மாட்டார்கள். நான்காவதாக, தொழுநோயாளிகள் மற்றும் சில குறிப்பிட்ட தொற்று நோய்களால் இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதில்லை. நோயின் தாக்கம் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கவும், சுகாதாரக் காரணங்களுக்காகவும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இவர்களின் உடல்களும் கங்கையில் விடப்படுகின்றன அல்லது அடக்கம் செய்யப்படுகின்றன. ஐந்தாவதாக, பாம்பு கடித்து இறந்தவர்கள் தகனம் செய்யப்படுவதில்லை. ஏனெனில், இவர்களின் மூளை 21 நாட்களுக்கு உயிரோடு இருக்குமாம். இவர்களை தண்ணீரில் விட்டால், மீண்டும் உயிரித்தெழ வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு, காசியில் இந்த ஐந்து வகையான நபர்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமல், கங்கையில் விடப்படுவது அல்லது அடக்கம் செய்யப்படுவது பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு தனித்துவமான மரபாகும். இந்த மரபுகள் ஆன்மீக, தத்துவ மற்றும் சமூகக் கண்ணோட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளன.🌹 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - காசியில் எந்த ஐந்து பேரை எரிக்க மாட்டார்கள் தெரியுமா? காசியில் எந்த ஐந்து பேரை எரிக்க மாட்டார்கள் தெரியுமா? - ShareChat
ஓம் நமசிவாய 🙏 பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரமாய்க் கோலம் குளிர்ந்துள்ளம் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்நெறியாம் அந்நெறியை போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - SHIVAYA NAMAH M SHIVAYA NAMAH M - ShareChat
திருச்சிற்றம்பலம் "அத்தன் அடியவனை ஆதரித்தான், முற்பிறவிப்பயனாய் ; கொத்தாகக் கொன்றைதனைக் குடுமியிலே சூடியவன் , வித்தாகச் சிவநெறியை விதைத்திட்டான் வாழ்வுதனில் : எத்தனையோ பிறவிகளாய் ஏங்கியதைக் கைக்கொண்டேன்!" சிந்தையில் அமர்ந்த சிவன் -2 பாடல் -923 சுசர்ல வெங்கடரமணி #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
திருப்புவனம் மயிலாடுதுறை செல்லும் வழியில் #சரபேஸ்வரர் மற்றும் கம்பேஸ்வரர் கோவில் உள்ளது! #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
01:06
🔱 🔥 🐚 சிவனுக்கு சங்கு நாதம் ஏன் இவ்வளவு பிடிக்கும்? - நீங்கள் அறியாத ஆழமான ரகசியங்கள்! 🔱✨ சிவாலயங்களில் பூஜையின் போதும், பிரதோஷ காலங்களிலும் சங்கு முழங்குவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், ஈசனுக்கு சங்கு நாதம் மிகவும் விருப்பமானதாக இருப்பதற்குப் பின்னால் பல ஆழமான தத்துவங்களும், பிரபஞ்ச உண்மைகளும் மறைந்துள்ளன: 👇 * நாத-விந்து தத்துவம் (சிவசக்தி ஐக்கியம்): 🕉️ சிவாகமங்களின்படி, நாதம் என்பது சிவபெருமானையும், விந்து என்பது பராசக்தியையும் குறிக்கும். சங்கிலிருந்து வெளிவரும் ஒலி ‘நாதம்’, சங்கு என்ற பொருள் ‘விந்து’. எனவே, சங்கு முழங்கும் போது அங்கு சிவசக்தி ஐக்கியம் நிகழ்வதாக ஐதீகம். 🙏 * பிரபஞ்சத்தின் ஆதி ஒலி (ஓம்): 🌌 சங்கை ஊதும் போது வெளிவரும் ஒலி, பிரபஞ்சத்தின் ஆதி ஒலியான "ஓம்" என்னும் பிரணவ ஒலியாகும். ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியான சிவபெருமானுக்கு, தன்னை உணர்த்தும் அந்த நாதம் மிகவும் பிரியமானது! 💫 * ஆணவத்தை அழிக்கும் பேரொலி: 🗡️ மனிதர்களின் மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழிக்கும் வல்லமை சங்கு நாதத்திற்கு உண்டு. சங்கு முழங்கும் போது ஏற்படும் அதிர்வுகள் நம் அகங்காரத்தை சுக்குநூறாக்கி, ஈசனின் திருவடிகளை சிந்திக்கச் செய்கிறது. 🕊️ * பஞ்சபூத தத்துவம்: 🌊 சங்கு கடலில் பிறந்தது (நீர் தத்துவம் - வருண பகவான்), அதிலிருந்து வெளிவருவது நாதம் (ஆகாய தத்துவம்). இது சிவபெருமானின் அஷ்டமூர்த்த தத்துவத்தோடு முழுமையாக ஒன்றியுள்ளது. சங்கில் ஊற்றப்படும் நீர் கங்கை நீருக்குச் சமமான புனிதத்தைப் பெறுகிறது. 💧 * விஞ்ஞானமும் மெய்ஞானமும்: 🧬 சங்கின் உட்புற அமைப்பு (Spiral Shape) பிரபஞ்சத்தின் சுழற்சியைக் குறிக்கிறது. சங்கை ஊதும் போது உருவாகும் அதிர்வலைகள் (Vibrations) காற்றில் உள்ள கிருமிகளை அழித்து, பிராணவாயுவை (Oxygen) தூண்டுகிறது. இது அந்த இடத்தையே நேர்மறை ஆற்றலால் (Positive Energy) நிரப்புகிறது. 🌿 * கர்ம வினைகளைத் தீர்க்கும் சங்காபிஷேகம்: 🌺 கார்த்திகை சோமவாரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிவனுக்கு 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி 'சங்காபிஷேகம்' செய்வது மிகவும் விசேஷம். சங்கு குபேரனின் அடையாளம். சங்கில் உள்ள பிரபஞ்ச சக்தி தீர்த்தத்தில் கலந்து ஈசனை குளிர்விப்பதால், நம் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் யாவும் அழிந்து வறுமை நீங்கும் என்பது திண்ணம். 💰✨ "கயிலாய மலையில் சிவகணங்கள் எப்பொழுதும் சங்கு முழங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பது சிவபுராண நம்பிக்கை. எனவே, சிவாலயத்தில் எழும் சங்கு நாதம் ஈசனுக்கு தன் கயிலாயத்தையே நினைவூட்டுகிறது!" 🏔️ ஓம் நமசிவாய! 🧘‍♂️📿 இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்! 🔱 ஓம் நமசிவாய வாழ்க! 🔥 #🙏ஆன்மீகம் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
🙏ஆன்மீகம் - சிவனுக்கு சங்கு ஏன் பிடிக்கும் ? நாதம் a @O17 ` ( MAHADINEM [A DMINE VE சிவனுக்கு சங்கு ஏன் பிடிக்கும் ? நாதம் a @O17 ` ( MAHADINEM [A DMINE VE - ShareChat
*சிவ சிவ* *சுடுகாட்டில் சிவன் அமர்ந்திருப்பது ஏன்?* *சுடுகாடு, மயானம் என்றால் அனைவருக்குமே ஒரு பயம், ஒருவித தயக்கம், கலக்கம் இருக்கும். ஆனால் சிவனோ சுடுகாட்டிலேயே சென்று அமர்ந்து கொண்டார். அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்* *இன்று மனிதர்கள் பலரிடம் தீவிரம் இருப்பதில்லை. பலரின் வாழ்வில் மரணம் நெருங்கும் அந்தக் கணம், அல்லது கிட்டத்தட்ட மரணம் நிகழ்ந்திருக்கக் கூடிய அந்த நொடி தான், அவர்கள் வாழ்விலேயே மிகத் தீவிரமான நேரமாக இருக்கிறது. இந்தத் தீவிரத்தை அவர்களின் வாழ்நாளில் வேறு எப்போதுமே அவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள்* *அன்பு, நேசம், பாசம், காதல், சிரிப்பு, சந்தோஷம், சோகம், துக்கம் என எதிலுமே அவர்களிடம் இந்த அளவிற்குத் தீவிரம் தென்படுவதில்லை – மரணத்தைத் தவிர. நீங்கள், நீங்கள் வாழும் வாழ்க்கை, வாழ்க்கை என்ற பெயரில் ஊரெல்லாம் நடக்கும் நாடகம் ஆகிய முட்டாள்த்தனங்களில் அலுப்படைந்த சிவன், ஷ்மஷானத்தில் அமர்ந்தார். இதனால் தான் சிவன் மயானத்தில் சென்றமர்ந்தார்* *மயானத்தை ‘காயந்த்த’ என்றழைப்பார்கள். ‘காயா’ என்றால் உடல். ‘அந்த்த’ என்றால் முடிவு* *அதாவது உடல் முடியும் இடம். கவனிக்க, இதை ‘ஜீவந்த்த’ என்று சொல்லாமல் ‘காயந்த்த’ என்றே சொல்கிறார்கள்* *அதாவது, இது உயிர் முடியும் இடமல்ல; உடல் மட்டும் முடிவுறும் இடம். இந்த மண்ணில் இருந்து நீங்கள் எடுத்து சேர்த்த அனைத்தையும் இங்கேயே விட்டுவிட வேண்டும்* *வாழ்பவர்களிடம் தேவையான அளவிற்கு தீவிரம் இருப்பதில்லை. நீங்கள், நீங்கள் வாழும் வாழ்க்கை, வாழ்க்கை என்ற பெயரில் ஊரெல்லாம் நடக்கும் நாடகம் ஆகிய முட்டாள்த்தனங்களில் அலுப்படைந்த சிவன், ஷ்மஷானத்தில் அமர்ந்தார். ஊரெங்கும் நடக்கும் பலவற்றுள், ‘உண்மை’யாக நடக்கும் ஒன்றே ஒன்று அதுவும் மயானத்தில் தான் நடக்கிறது* *அதனால் சிவன் தன் இருப்பிடத்தை ‘ஷ்மஷான்’ த்திற்கு (மயானம்) மாற்றிக் கொண்டார். ‘ஷ்ம’ என்றால் சவம், இறந்தவரின் உடல். ‘ஷான்’ என்றால் படுக்கை வாழ்பவர்களின் மத்தியில் இருப்பது நேர விரயம் என்றுணர்ந்த சிவன், இறந்தவர்களின் உடல் இருக்கும் இடத்திற்கு வசிக்கச் சென்றார் எந்த இடத்தில் வாழ்க்கையின் அர்த்தம் மிகத் தெளிவாக விளங்குமோ, அவ்விடத்திலே சிவன் அமர்ந்தார்* *யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அவரின் நெருங்கியவர்கள் அவரின் உடல் மேல் அழுது, புலம்பி, முத்தம் வைத்து, கட்டி அணைத்து, எப்படியேனும் அவரை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்ய, இன்னும் ஏதேதோ செய்வார்கள்* *ஆனால் அந்த உடலிற்கு நெருப்பு வைத்துவிட்டால், அதனருகில் சென்று யாரும் நெருப்பை கட்டியணைக்க முயலமாட்டார்கள். அவர்களின் ‘சுய-பாதுகாப்பு’க் கவசம் அதை எப்படியும் தடுத்திடும். இங்கு வாழும் பலரை, நீங்கள் ஊசி வைத்துக் குத்தி தான் சோகமாக்க வேண்டும் என்றில்லை* *அவர்களை சும்மா தனியே விட்டாலே, அவர்கள் துயரத்தில் ஆழ்ந்து விடுவார்கள். அவர்களின் சுய-பாதுகாப்புக் கவசம் அளவுகடந்து அதிகரித்திருப்பதால், அதன் இறுக்கம் வாழ்க்கை என்ற ஒன்று நடப்பதையே தடுக்கும் வகையில் அமைந்துவிட்டது* *இந்த உடலில் இரண்டு விதமான அடிப்படை சக்திகள் செயல்படுகின்றன. ஒன்று, பிழைப்பைத் தூண்டுவது. மற்றொன்று எல்லையில்லாமல் விரிவதற்கு உந்துவது. பிழைப்பைத் தூண்டும் சக்திக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் அது மிதமான தீவிரத்திலேயே உங்களைச் செலுத்தும்* *பிழைப்பு என்றால் பாதுகாப்பாய், ஜாக்கிரதையாய், ஆபத்து நேர்ந்திடாமல் செயல்பட வேண்டுமே* *ஆனால் இதுவே எல்லையில்லாமல் விரிய நீங்கள் எண்ணிவிட்டால், உங்கள் முழு சக்தியும் ஒருநோக்காய் அதிலே பாயும்போது, வாழ்க்கை அதன் முழு தீவிரத்தில் நிகழும். எது நமக்குச் சரியாகப் புரியவில்லையோ, அது தான் நமக்கு பயத்தைக் கொடுக்கும்* *பயத்திற்குக் கட்டுப்பட்டால், பாதியோ, அல்லது அதற்கும் குறைவான வாழ்க்கை தான் வாழமுடியும். பாதி வாழ்க்கை வாழ்வதில் என்ன பயன்?* *அதனால் தான் வாழ்வை அதன் முழு தீவிரத்தில் உணர எண்ணிய சிவன், நாடகங்கள் ஏதும் நிகழா ‘உண்மை’ விளங்கும் இடமான மயானத்தில் அமர்ந்திருந்தார்* *சிவ சிவ* *நமசிவாயம் வாழ்க* #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
*எம்பிரான் திருநாவுக்கரசர் பெருமான் அருளிச் செய்த தேவாரம் - தொடர் முற்றோதல்* *அருட் குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிகர் சுவாமிகள் திருவாய் மலர்ந்து அருளியது.* *12.03.2026 – வியாழக்கிழமை* *திருநாவுக்கரசர் புராணம்* திருநாவுக்கரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ, வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ், பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில், ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன். *01.கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமைபல* *அருளியவர் : திருநாவுக்கரசர்* *திருமுறை : நான்காம் திருமுறை* *பண்: கொல்லி* *நாடு: நடு நாடு* *தலம் : திருஅதிகைவீரட்டானம்* கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 1 நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 2 பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 3 முன்னம்மடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கட னாவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 5 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவில் மறந்தறியேன் உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 6 உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவலி லாமையினால் வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் பயந்தேயென் வயிற்றின கம்படியே பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னாத்துறை அம்மானே. 7 வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மன மொன்று மிலாமையினாற் சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் கலித்தேயென் வயிற்றி னகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 8 பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமற் றுரந்து கரந்துமிடீர் என்போலிக ளும்மை இனித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில் அன்பேஅமை யும்மதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 9 போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 10 சுவாமி : வீரட்டானேஸ்வரர்; அம்பாள் : திரிபுரசுந்தரி. இப்பதிகம் சூலை நோய் தீர ஓதியருளியது. *திருச்சிற்றம்பலம்* #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - 3.35 ff 011  ೦ LiE1 55% 46+ தாயினும் சிறந்த தயாபரன் ம 3.35 ff 011  ೦ LiE1 55% 46+ தாயினும் சிறந்த தயாபரன் ம - ShareChat
#🙏ஆன்மீகம் *தினம் ஒரு திருமுறை* *12.03.2026 - வியாழக்கிழமை* *அருளியவர் :* திருஞானசம்பந்தர் *திருமுறை :* முதல் திருமுறை *கரத்தான் மலி சிரத்தான் கரி உரித்தாய* *பாடல் விளக்கம்:* *பிரமகபாலம் பொருந்திய திருக்கரத்தினன். யானையை உரித்ததால் கிடைத்ததொரு மேற்போர்வையினன். முப்புர அசுரர் அழியத் தன்னடி பணிந்த அம்முப்புரத்தலைவர் மூவர்கட்கும் மிக்க வரங்களை அளித்தவன். அப்பெருமானது இடம், வளர்ந்தோங்கிய புன்னை மரங்கள் முத்துக்கள் போல் அரும்பி மலர்ந்து பொன்தாதுக்களை ஈன்று பச்சை மணிகளைப்போல் காய்த்து அழகு செய்கின்ற திருவீழிமிழலையாகும்..*
🙏ஆன்மீகம் - 83 83 - ShareChat