ஆன்மிக அடையாளமாக விளங்கும் 9 புனித விலங்குகள் – சனாதன தர்மத்தின் இயற்கை தத்துவம்
இந்த பூமி தோன்றிய காலத்திலேயே இயற்கை சார்ந்த வழிபாடுகளும் உருவாகிவிட்டன. மலை, நதி, மரம், காற்று, மண், விலங்கு, பறவை என அனைத்தையும் தெய்வீகமாகப் பார்த்த பாரம்பரியமே ஹிந்து தர்மம். இதுவே சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகிறது.
சனாதன தர்மம் மனிதனை மட்டும் மையமாகக் கொண்ட மதம் அல்ல. அது இயற்கையோடு இணைந்து வாழ்வதைக் கற்றுத் தரும் வாழ்க்கை முறை. பஞ்சபூதங்கள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்தையும் மதித்து பாதுகாப்பதே இந்த தர்மத்தின் அடிப்படை.
அதன் ஒரு பகுதியாகவே பல விலங்குகள் ஆன்மிகத்தில் புனிதமானவையாகப் போற்றப்படுகின்றன. அவை வெறும் உயிரினங்கள் அல்ல – தெய்வீக சக்தியின் அடையாளங்கள்.
இப்போது ஆன்மிகத்தில் மிக முக்கியமான 9 புனித விலங்குகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
🕉️ 1. பசு – தெய்வமாக போற்றப்படும் தாய்
இந்திய கலாச்சாரத்தில் பசுவிற்கு அளிக்கப்படும் மரியாதை மிக உயர்ந்தது.
பால் கொடுக்கும் பசு தாயாகவும், தெய்வமாகவும் கருதப்படுகிறது.
கேட்டதை தரும் காமதேனுவின் வடிவமாக பசு பார்க்கப்படுகிறது
பசுவின் உடலில் 33 கோடி தேவர்களும் வசிப்பதாக நம்பிக்கை
திருநீறு, ஊதுபத்தி போன்ற பூஜை பொருட்கள் பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன
கோமியம் புனித நீராக கருதப்படுகிறது
மேலும், பசுவின் ஆண் வடிவமான நந்தி சிவபெருமானின் வாகனமாக இருந்து ஆலயங்களில் முதன்மை இடம் பெற்றிருக்கிறது.
🐘 2. யானை – அறிவின் அடையாளம்
யானை இந்து மதத்தில் அறிவு, வலிமை, மகத்துவத்தின் அடையாளம்.
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு யானை முகம் இருப்பதால்:
ஆனைமுகன்
வேழ முகத்தான்
களப விநாயகர்
என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
யானை பல தெய்வங்களின் வாகனமாகவும் உள்ளது. குறிப்பாக இந்திரன் வெள்ளை யானையான ஐராவதத்தில் வலம் வருகிறார்.
🦁 3. சிங்கம் – தர்மத்தின் காவலன்
சிங்கம் வீரத்தையும் சக்தியையும் குறிக்கும் விலங்கு.
விஷ்ணு தர்மத்தை காக்க நரசிம்ம அவதாரம் எடுத்த போது சிங்க முகம் கொண்ட வடிவில் தோன்றினார்
நரசிம்மரின் வடிவமாக சிங்கம் மதிக்கப்படுகிறது
அம்பிகையின் வாகனமாகவும் சிங்கம் போற்றப்படுகிறது
இதனால் சிங்கம் ஆன்மிகத்தில் மகத்தான இடத்தைப் பெற்றுள்ளது.
🐅 4. புலி – அம்பிகையின் வாகனம்
புலி சக்தியின் குறியீடு.
துர்க்கை அம்மன் புலியின் மீது அமர்ந்து காட்சி தருகிறார்
வட இந்தியாவில் “ஷேராவாலி அம்பே” என்று அழைக்கப்படுகிறார்
புலி ஐயப்பனின் வாகனமாகவும் குறிப்பிடப்படுகிறது
புலி தைரியத்தையும் தெய்வீக ஆற்றலையும் வெளிப்படுத்தும் விலங்காகும்.
🐒 5. குரங்கு – பக்தியின் உச்சம்
குரங்கு என்றால் உடனே நினைவுக்கு வருவது அனுமன்.
ராம அவதாரத்தில் விஷ்ணுவிற்கு துணையாக பிறந்தார்
வலிமை, பக்தி, நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறார்
ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் அனுமன் இருப்பார் என நம்பப்படுகிறது
இன்றும் அனுமன் சிரஞ்சீவியாக உலகில் வாழ்ந்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.
🐕 6. நாய் – நன்றியின் அடையாளம்
நாய் நன்றியுள்ள விலங்கின் அடையாளம்.
தீய சக்திகளை கண்டறியும் தன்மை கொண்டதாக மக்கள் நம்புகிறார்கள்
சிவபெருமானின் காலபைரவரின் வாகனமாக நாய் விளங்குகிறது
பல கிராமங்களில் நாய்களுக்கு தனியாக கோயில்களும் உள்ளன
ஆன்மிகத்தில் நாய் பாதுகாப்பு சக்தியின் குறியீடாக கருதப்படுகிறது.
🐗 7. வராகம் – பூமியை காத்த தெய்வ வடிவம்
வராகம் என்பது விஷ்ணுவின் முக்கிய அவதாரம்.
அசுரன் ஹிரண்யாட்சன் பூமியை மறைத்த போது
விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டார்
அதேபோல், சப்த மாதர்களில் ஒருவரான வராகி அம்மன் வராக முகத்துடன் காட்சி தருகிறார்.
🐻 8. கரடி – புராணங்களில் உதவிய வீரன்
கரடி விலங்கு ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
கரடிகளின் தலைவன் ஜாம்பவான்
ராமருக்கு இலங்கை போரில் உதவி செய்தார்
கிருஷ்ணருக்கு தனது மகள் ஜாம்பவதியை மணமுடித்து வைத்தார்
இதனால் கரடியும் ஆன்மிகத்தில் மதிக்கப்படும் உயிரினமாக விளங்குகிறது.
🐎 9. குதிரை – ஞானத்தின் சின்னம்
குதிரை அறிவு மற்றும் வேகத்தின் குறியீடு.
குதிரை முகத்துடன் ஹயக்ரீவர் கல்விக் கடவுளாக போற்றப்படுகிறார்
அவர் சரஸ்வதி தேவிக்கு ஞானத்தை போதித்தவர்
மகாவிஷ்ணுவின் இறுதி அவதாரமான கல்கி அவதாரத்தில் குதிரை வாகனமாக இருக்கும்
அதனால் குதிரை ஆன்மிகத்தில் மிக உயர்ந்த இடம் பெற்றுள்ளது.
🌿 ஆன்மிகத்தின் அடிப்படை செய்தி
இந்த 9 விலங்குகளும் தெய்வத்தின் வடிவமாகவும் அல்லது வாகனமாகவும் போற்றப்படுவதற்குக் காரணம் ஒன்றே:
மனிதர்கள் ஒவ்வொரு உயிரினத்தையும் மதித்து, பாதுகாத்து, தீங்கு செய்யாமல் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
இயற்கையை காக்கும் வழியையே சனாதன தர்மம் ஆன்மிகமாக கற்றுத் தருகிறது.
🕊️ முடிவுச் சிந்தனை
விலங்குகள் வெறும் உயிரினங்கள் அல்ல –
அவை தெய்வீக சக்தியின் பிரதிபலிப்புகள்.
இயற்கையை மதித்து வாழும் வாழ்க்கையே உண்மையான ஆன்மிக வாழ்க்கை #🙏ஆன்மீகம் .
அதுவே நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லித் தந்த உயர்ந்த பாடம்.
சிவன் – உண்மை என்ன?
ஒருமுறை ஒரு அகந்தை கொண்ட அரசன்
சிவபெருமானை காண வேண்டும் என்று
கைலாயம் சென்றான்.
அங்கு சிவன் ஒரு சாதாரண
யோகியாக மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அரசன் கேட்டான்:
“நீங்கள் தான் சிவனா?
உலகத்தை ஆளும் சக்தி உங்களிடம் இருக்கிறதா?” சிவன் அமைதியாக
ஒரு பிடி சாம்பலை எடுத்தார்
மற்றும் சொன்னார்:
“நீ எதை சேர்த்தாய், அதையெல்லாம்
இது ஒரு கணத்தில் ஆக்கும்.” அந்த சாம்பலை பார்த்த அரசன் தன் ஆட்சி,
தன் செல்வம், தன் அகங்காரம் எல்லாம்
நிலையற்றது என்பதை உணர்ந்தான்.
அரசன் தலை வணங்கி கேட்டான்:
“அப்படியானால் நிலையானது என்ன?”
சிவன் பதிலளித்தார்:
“அகங்காரம் இல்லாத உள்ளம்,
ஆசை இல்லாத வாழ்க்கை,
அதுவே உண்மை.” அன்று முதல்
அரசன் ஆட்சி செய்தான்,
ஆனால் அடிமையாக அல்ல —
ஒரு பணிவுள்ள சேவகனாக. #🙏ஆன்மீகம்
*கும்பகோணம் பாணபுரீஸ்வரர் திருக்கோவில்*
உலகமே நீரில் மூழ்கிய ஊழிக்காலங்கள் பல முறை ஏற்பட்டதாகவும், அப்போதெல்லாம் சிவபெருமான் மீண்டும் உலகில் உயிர்களை தோன்ற செய்ததாகவும் பழங்கால தமிழ் ஆன்மீக இலக்கியங்கள் கூறுகின்றது. அப்படியான ஒரு ஊழிக்காலத்தில் சிவபெருமானின் மகிமையால் உருவான ஒரு கோவில் தான் “கும்பகோணம் அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில்”.
இக்கோவிலின் விஷேஷ அம்சம் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். பாணபுரீஸ்வரர் திருக்கோவில் வரலாறு மிகவும் புராதனமான கோவிலாக பாணபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான சிவபெருமான் பாணபுரீஸ்வரர் எனவும், அம்பாள் சோமகலாம்பாள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். சோழ மன்னர்கள் காலத்தில் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இத்தல புராணத்தின் படி உலகமே நீரில் மூழ்கிய ஊழிக்காலத்தில் பிரம்மன் மிதக்கவிட்ட கும்பம் இப்பகுதிக்கு மிதந்து வந்த போது, கயிலையிலிருந்து வேடன் வடிவில் வந்த சிவபெருமான், தனது வில்லிலிருந்து ஒரு பாணத்தை செலுத்தி அந்த கும்பத்தை உடைத்தார்.
அக்கும்பத்தில் இருந்த அமிர்தம் வழிந்தோடி மகாமக குளமாக உருவானது. இத்தலத்தில் பாணத்தை கொண்டு கும்பத்தை உடைந்ததால் இங்கு கோவில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு பாணபுரீஸ்வரர் என்கிற பெயர் உண்டாயிற்று. நந்தி தேவரிடம் பெற்ற சாபம் நீங்க, மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்தில் தங்கி சிவனை வழிபட்டு தனது சாபத்தை தீர்த்துக்கொண்டார் வியாச பகவான். அவர் இங்கு ஸ்தாபித்த லிங்கம் வியாச லிங்கம் என அழைக்கப்படுகிறது. வங்காள நாட்டு மன்னன் சூரியசேனன் தனது மனைவி காந்திமதியின் நோய் தீர இத்தலத்தில் தங்கி, இக்கோவிலுக்கு திருப்பணி செய்து மனைவியின் நோய் நீங்கியதோடு, சிறந்த புத்திர பாக்கியத்தையும் பெற்றான். பாணபுரீஸ்வரர் தல சிறப்பு இந்த தலத்தில் சிவபெருமான் அமிர்த கலசத்தை உடைத்ததால் இங்கு வந்து பாணபுரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், பொருள் அபிவிருத்தியும், மங்காத புகழும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் இந்த ஆலயத்தின் இறைவியான சோமகாலம்பாளை வழிபடுபவர்களுக்கு உடல் மற்றும் மனதில் இருக்கும் சோம்பல்தனம் நீங்கி மிகுந்த சுறுசுறுப்பு ஏற்படும் என்றும், சிறந்த முகபொலிவும் உண்டாகும் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்காகும்.
அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் கும்பகோணம் நகரில் பாணத்துறை என்கிற பகுதியில் அமைந்திருக்கிறது. பாணத்துறை செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.
அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில், பாணத்துறை கும்பகோணம், #🙏ஆன்மீகம்
மலையைக் குடைந்து பாதை அமைப்பேன்... இருளைக் கிழித்து ஒளி கொடுப்பேன்!
நீ நடக்கும் பாதை கடினம்...
ஆனால் முடியும் இடம் சிகரம்!
*🤲கந்தன் கருணையுடன்*
*இன்றைய இரவும் நாளைய பொழுது நலம் தரும்* *விடியலாக அமையட்டும்.* #🙏ஆன்மீகம்
ஓம் நமசிவாய 🙏
தேனைப் பாலைக்
கன்னலின் தெளியை
ஒளியைத்
தெளிந்தார் தம்
ஊனை உருக்கும்
உடையானை
உம்பரானை
வம்பனேன்
நான் நின் அடியேன்
நீ என்னை
ஆண்டாய் என்றால்
அடியேற்குத் தானும்
சிரித்தே அருளலாம்
தன்மையாம்
என் தன்மையே
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏 #🙏ஆன்மீகம்
*#சிவயோகிநாதர் #கோவில்*
பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
*ரிஷப ராசியினருக்கு உரிய திருவிசநல்லூரில் சிவயோகிநாதர் கோவில்*
திருவிசலூர் எனும் திருவிசநல்லூரில் சவுந்திரநாயகி சமேத சிவயோகிநாதர் கோவில் அமைந்துள்ளது.
இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலமாகும். பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர், சிறந்த சிவபக்தர். இவர் தினமும் காலையில் சிவயோகநாதரை வணங்குவது வழக்கம். ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினத்தன்று, தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார்.
மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு வந்து பசிக்கு உணவு வேண்டி நின்றார்.
அவரை வாட்டமான முகத்தைக் கண்டு மனம் இரங்கிய வெங்கடேச தீட்சிதர், சிரார்த்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த உணவை, பசித்து வந்தவருக்கு வழங்கினார்.
இதைக் கண்ட வேதியர்கள் சிலர், இப்படிச் செய்தது சாஸ்திர விரோதம் என்றும், இதற்கு பரிகாரமாக காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லையெனில் அவரை ஊரை விட்டு விலக்கி வைப்பதும், சிரார்த்தமும் செய்ய மாட்டோம் என்றனர்.
வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா?
கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள் அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே என்று வெங்கடேச தீட்சிதர் வருந்தினார். மனமுருகி ‘கங்காஷ்டகம்’ என்னும் துதி பாடினார்.
அவர் பாடி முடித்ததும் அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பொங்கியது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக் காடானது.
இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரை வணங்கி, கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அந்தக் கிணற்றிலேயே நிலைத்தது. பின்னர் அந்தணர்கள் திதி கொடுத்தனர்.
அன்றைய தினம் மாலை வேளையில் திருவிசநல்லூர் ஈசன் கருவறையில், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில் ‘இன்று மதியம் ஸ்ரீதர வெங்கடேசன் வீட்டின் திதியில் உணவருந்தியதால் இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று எழுதியிருந்தது.
தாழ்த்தப்பட்டவராக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் வீட்டிற்கு வந்து உணவருந்திச் சென்றது சிவபெருமான் என்பதை உணர்ந்த அனைவரும், அவரைப் போற்றிப் பணிந்தனர்.
இந்த அற்புத நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று, ‘கங்கா பூஜை நீராடல்’ எனும் விழாவாக திருவிசநல்லூர் மகான் ஸ்ரீதர வெங்கடேச திருமடத்தில் நிகழ்கிறது. மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில்,‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்த கிணற்றிலுள்ள தீர்த்தம், எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே.
இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
விழா நாட்களில் தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று கங்கை கிணற்றில் பொங்குகிறது.
அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு அங்கிருந்து தீர்த்தம் கொண்டுவந்து கிணற்றில் விடுவார்கள்.
பின்னர் கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். இது மிகப்பெரும் பாக்கியமாகும்.
ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்றே’ என்று மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசநல்லூர் ஈசனை காலையில் வழிபட்டு விட்டு, அருகில் உள்ள திருவிடைமருதூருக்குச் சென்று மாலை வேளையில் மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.
திருவிசநல்லூரில் இருந்து திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார்.
ஒரு நாள் வீரசோழன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரால் ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர் மகாலிங்க சுவாமியை தரிசிக்காமல் திரும்பியதை நினைத்து கவலையடைந்தார்.
அந்த கவலையில் உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார்.
திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடை மழையில் யார் கதவைத் தட்டுவது?’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்! திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.
“அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண இரவு பூஜைக்கு உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன்.
சுவாமியை தரிசிக்காமல் இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே தான் திருக்கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்” என்றார் அர்ச்சகர்.
பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார்.
அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார்.
பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணிவிட்டு, விடிந்ததும் விடியாததுமாக அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார்.
அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது.
அர்ச்சகரிடம் சென்ற ஸ்ரீதர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, “சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!” என்று வருத்தப்பட்டார்.
அர்ச்ககர் திகைத்தவாறே, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன். கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே” என்றார்.
பேசியபடியே அவர் கோவில் கருவறை கதவை திறந்த போது, ஸ்ரீதர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது.
அப்போதுதான் அர்ச்சகருக்குத் தெரிந்தது, ‘நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் ஸ்ரீதர வெங்கடேசர் வீட்டுக்குச் சென்று, பிரசாதம் உண்ணக்கொடுத்து அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே’ என்பது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.
பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த மகான் ஸ்ரீதர வெங்கடேசர், திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார்.
*அமைவிடம்*
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவிடைமருதூர் திருத்தலம் அமைந்து உள்ளது. திருவிடைமருதூரில் இருந்து வடமேற்கில் 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் அமைந்து உள்ளது. #🙏ஆன்மீகம்
🔔இல்லற யோகி கருமாரிபட்டி சுவாமிகள் 🔔
திருவண்ணாமலை அருகே உள்ள கருமாரிபட்டி கிராமத்தில் வாழ்ந்து, அங்கேயே ஜீவசமாதி அடைந்தவர், ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள். (கருமாரிபட்டி சுவாமிகள்)
சுவாமிகள் 1927-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருமாரிபட்டி கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெள்ளையன்.
சிறு வயது முதலே சிவன் மற்றும் கிருஷ்ணர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது தீராத பக்தி கொண்டு, பல ஆண்டுகள் கடும் தவம் மற்றும் தியானத்தில் ஈடுபட்டார். இவர் ஒரு இல்லற யோகியாக வாழ்ந்தவர்.
சுவாமிகளின் மனைவியின் பெயர் அமிர்தம்மாள்.
இவருக்கு இரண்டு மகன்கள். இவரது இரண்டாவது மகன் தவராஜி 1969-ஆம் ஆண்டு பிறந்தார். 1970-ஆம் ஆண்டு, தனது ஆன்மீகத் தேடலால் உந்தப்பட்ட சுவாமிகள், தனது மனைவியிடம், "நான் இனி ஓரிடத்தில் அமர்ந்து தவம் செய்யப் போகிறேன், என்னையும் உன்னையும் உள்ளத்திலிருக்கும் கடவுள் காப்பார்" என்று கூறி தவம் இருக்கத் தொடங்கினார்.
சுவாமிகள் தவம் செய்த காலங்களில், அவரது மனைவி அமிர்தம்மாள் அவருக்கு ஒரு சிறிய மேடையை அமைத்துக் கொடுத்தார். சுவாமிகளின் மூத்த மகன் தனது 10 வயதில் (5-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது) படிப்பை நிறுத்திவிட்டு, தனது தந்தையை கவனித்துக் கொள்வதிலும் விவசாயத்திலும் ஈடுபட்டார்.
சுமார் 15 ஆண்டுகள் உணவின்றி தவம் செய்த சுவாமிகள், 1979-இல் பூண்டி மகான் சமாதி அடைந்த செய்தியை அறிந்ததும், தனது மனைவி அமிர்தம்மாளிடம் கம்பு கூழ் கேட்டுப் பருகி தனது விரதத்தை முடித்துக் கொண்டார்.
இவர் புகழ்பெற்ற பூண்டி மகான் அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர். சுவாமிகள் தனது பக்தர்களின் கர்ம வினைகளையும், தீய சக்திகளின் பாதிப்புகளையும் நீக்குவதில் வல்லவராகக் கருதப்பட்டார்.
தன்னைத் தேடி வரும் பக்தர்கள் என்ன கோரிக்கையுடன் வருகிறார்கள் என்பதையும், அவர்கள் பையில் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதையும் அவர்கள் பேசும் முன்பே சொல்லும் ஞானம் பெற்றிருந்தார்.
தீராத வியாதிகளுடன் வருபவர்களுக்குத் திருநீறு வழங்கி, அவர்களின் உடல் மற்றும் மனப் பிணிகளைத் தீர்த்ததாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.
"தெய்வத்தை நம்புங்கள், அது உங்களை ஒருபோதும் கைவிடாது" என்பதே அவரது முதன்மையான போதனையாக இருந்தது.
ஒரு யோகியாக இருந்தாலும், ஆடம்பரமின்றி மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.
இல்லறத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்துகொண்டே இறைவனை அடைய முடியும் என்பதற்கு அவரே ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்.
இவரது தோற்றமே ஓருவித ஆன்மீக அதிர்வை ஏற்படுத்தும். தனது நீண்ட ஜடாமுடி மற்றும் நகங்களுடன் ஓர் பழுத்த யோகியாக காட்சியளிப்பார்.
சுவாமிகள் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி (ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரம்) அன்று ஜீவசமாதி அடைந்தார். தற்போது இவரது ஜீவசமாதி பீடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் உள்ள மங்கலம் கிராமத்திற்கு அருகில் உள்ள கருமாரிபட்டி கிராமத்தில் இவரது தியான ஆசிரமம் மற்றும் ஜீவசமாதி அமைந்துள்ளது.
சுவாமிகள் மறைந்த ஐப்பசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் மகா குருபூஜை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் சுவாமிகளின் சமாதிக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமிகளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு வந்து மனமுருகி வேண்டினால் நினைத்த காரியங்கள் கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை🔔 #🙏ஆன்மீகம்
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁ஓடு தனையேந்தி ஊணுக் குழல்வானைப்_
_🍁பாடு வன்றொண்டர் தேடு பொன்னீந்த_
_🍁ஆடும் பெருமானை ஆரூர் மேயானை_
_🍁மாடும் தருவானை மறவேல் மடநெஞ்சே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரிபவனை !! புகழ்பாடி இறைஞ்சிய சுந்தரருக்குக் குளத்தில் அவர் தேடிய பொன்னைத் தந்த கூத்தனை !! திருவாரூரில் உறைகின்றவனை !! முக்தி அருள்வதோடு இம்மையில் செல்வமும் தருபவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஆன்மீகம்
திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தி மூலம் விதியையும் மாற்றும் வழிபாடு
ஒரு மனிதனுடைய தலைச் சுழியில் அமைக்கப்படும் இந்த பஞ்ச பூத தத்துவ அமைப்பை விவிதத்ரயம் என்று அழைக்கிறார்கள்.
இவ்வாறு விவிதத்ரய சக்திகள் பரிணமிக்கும் மூர்த்திகளை வணங்குவதால் நமது பஞ்ச பூத ரகசிய அமைப்பு முறையாகப் பாதுகாக்கப்பட்டு எந்த வித பில்லி சூன்ய சக்திகளும் நம்மை அண்டாது பாதுகாத்துக் கொள்ளலாம்.
திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தி, விழுப்புரம் அருகே திருவக்கரை ஸ்ரீசந்திர சேகர மூர்த்தி, சென்னை அருகே சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் போன்ற மூர்த்திகள் இத்தகைய விவிதத்ரய சக்திகளை வாரி வழங்கும் தெய்வ மூர்த்திகள்.
உரிய வழிபாடுகளுடன் இத்தகைய மூர்த்திகளை வணங்கி செய்வினைத் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இந்த விவிதத்ரய சக்திகளைக் கிரகிக்க வல்ல குருமார்கள் தங்கள் சீடர்களின் தலைச் சுழி இரகசியங்களை உணர்ந்து அவர்களை முறையாக வழி நடத்தி இப்பிறப்பிலும் இனி வரும் பிறவிகளிலும் அவர்களுக்கு உயர்ந்த வாழ்க்கையைத் தேடித் தருவார்கள்.
எனவே, இதுவரை இத்தகைய குருமார்கள் அமையப் பெறாதோர் இனி வரும் பிறவிகளிலாவது அந்தக் குருமார்களைப் பெற திருஅண்ணமலையைத் தொடர்ந்து கிரிவலம் வந்து பிரார்த்தனை செய்யவும்.
அதுவரை விவிதத்ரய சக்திகளை வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலிப்பவரே திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தி ஆவார்
வளர் பஞ்சமி திதியில் திருவாசியில் அமைந்துள்ள சகஸ்ரலிங்க மூர்த்தியின் முன் அமர்ந்து தங்கள் பெயரை வாய்விட்டு ஓதுதலால் தங்கள் பிறவி பற்றிய இரகசியங்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கனிந்து வரும்.
இவ்வாறு தொடர்ந்து திருவாசி திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்ற முடியாவிட்டாலும் முதலில் திருவாசி சகஸ்ரலிங்க மூர்த்தியின் முன் அமர்ந்து தங்கள் பெயரையே திரும்ப திரும்ப வாய் விட்டு ஒலித்து பின்னர் தங்கள் இல்லத்திலோ அல்லது தங்கள் சொந்த ஊரில் உள்ள திருத்தலங்களிலோ வழிபாடுகளைத் தொடரலாம். #🙏ஆன்மீகம்
புராணப் பின்னணி (கண்களை மூடும் லீலை)
இந்தச் சிற்பம் அன்னை பார்வதி தேவி, விளையாட்டாகச் சிவபெருமானின் இரு கண்களையும் தன் கரங்களால் மூடும் காட்சியைச் சித்தரிக்கிறது. புராணங்களின்படி, சிவபெருமானின் இரு கண்கள் சூரியன் மற்றும் சந்திரன் ஆகும். அன்னை அவற்றை மூடியதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்ததாகவும், அதன்பின் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து உலகிற்கு ஒளியூட்டியதாகவும் கூறப்படுகிறது.
2. சிற்பத்தின் அமைப்பு
மத்திய நாயகன்: சிவபெருமான் கம்பீரமாக அமர்ந்த நிலையில் (சுகாசனத்தில்) காட்சியளிக்கிறார்.
அன்னை பார்வதி: சிவபெருமானின் பின்னால் நின்றபடி, அவரது திருக்கண்களை மூடும் கோலத்தில் மிக மென்மையாகச் செதுக்கப்பட்டுள்ளார்.
கீழே உள்ள உருவங்கள்: பீடத்தின் கீழே முனிவர்களோ அல்லது தேவர்களோ இந்த தெய்வீகக் காட்சியை வணங்கியபடி அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.
3. கலையம்சம்
இது பெரும்பாலும் தென்னிந்தியக் கோயில் தூண்களில் (குறிப்பாகப் பல்லவர் அல்லது சோழர் காலக் கலைப்பாணியில்) காணப்படும் ஒரு நுணுக்கமான புடைப்புச் சிற்பமாகும். கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தில், இறைவனின் ஆபரணங்கள் மற்றும் மேனியின் வளைவுகள் மிக நேர்த்தியாகக் காட்டப்பட்டுள்ளன. #🙏ஆன்மீகம்













