
sivasenthil
@sivasenthil3183
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁அஞ்சைக்களம் முண்டீச்சரம் அண்ணாமலை மேயான்_
_🍁வஞ்சிக்கொடி போல்மெல்லிடை மலைமாதொரு பாகன்_
_🍁அஞ்சொற்கிளி பயிலும்பொழில் ஆடானையில் உறையும்_
_🍁நஞ்சைக்களம் அணிவான்கழல் நம்பித்தொழ நலமே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_திருவஞ்சைக்களம், திருமுண்டீச்சரம், திருவண்ணாமலை முதலிய தலங்களில் உறைபவன் !! வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிடையை உடைய மலைமங்கையை ஒரு பாகமாக உடையவன் !! அழகிய சொற்களைப் பேசும் கிளிகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறையும் விஷத்தைக் கண்டத்தில் அணிந்த பெருமானது திருவடியை விரும்பித் தொழும் அன்பர்களுக்கு என்றும் நன்மையே !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஆன்மீகம்
எங்களின் இமையாளா...
இச்சக ஒளிவேலா...
தங்கிடு குருநாதா...
தந்திர எழில்வேலா
ஓம் முருகா சரணம்
முருகா போற்றி
ஓம்சரவணபவ
*கந்தன் கருனையில் மலரும் இனிய காலை வணக்கம்*
🙏🪷🪷🪷🪷🪷🪷🙏 #🙏ஆன்மீகம்
*நமச்சிவாயம்*
தினம் ஒரு திருமுறை சிந்தனை - 1730
*சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீர் ஆகில் துயர் நீங்கி தூ நெறிக்கண் சேரலாமே*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*ஆறாம் திருமுறை* திருத்தாண்டகம்
93 வது திருப்பதிகம் - *பொது*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*பாடல் எண் : 5*
ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்
மாற்றுத் துறைவழி கொண்டோடா முன்னம்
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை யென்பீ ராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கட் சேர லாமே.
*விளக்கவுரை :*
*குறிப்பு :*
இத்திருத்தாண்டகம் திருப்பூந்துருத்தியில் அப்பர் சுவாமிகள் ஞாயிறும், திங்களும் தோயும் திருமடம் சமைத்து, உழவாரம் செய்து இருந்த போது அருளியப் பதிகங்களில் ஒன்றாகும்.
இத்திருப்பாடல் திருச்சோற்றுத்துறையை சிறப்பித்து எடுத்து நமக்காக அருளியது ஆகும்.
ஊற்றுத்துறை ஒன்பதுள் நின்று ஓரீர்
ஒக்க அடைக்கும் போது உணர மாட்டீர் :
ஓர்தல் - நினைத்தல்.
"உடலின் கழிவுகளான அழுக்குகள் ஊறி ஒழுகும் ஊற்றுத்துறைகள் ஒன்பதையும் உங்களது அந்திமக் காலத்தில் ஒருசேர அடைக்கும் போது அதனை உம்மால் உணர்ந்து கொள்ள முடியாது..."
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாய மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் :
மாற்றுத்துறை - மேற்குறிப்பிட்டதற்கு மாற்றாக உள்ள மற்றொரு துறை. அது உங்களுக்கு மரணமில்லா பெருவாழ்வை அளிக்கும் வகையை போதிக்கும் துறை.
"நீங்கள் இறந்த பின்னர் உங்களுடைய யாதனா சரீரத்தை எம தூதுவர்கள் கொண்டு போகும் முன்னம், மயக்கத்தை செய்யும் மாயா வாழ்க்கையை மெய்யென மகிழ்ந்து வாழும் அன்பர்களே..."
வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய :
வேற்றுத்தொழில் - பகைமையையுடைய வேற்றுச் செயல்.
"பகைமை பூண்டு வேறான செயலை செய்யும் முப்புரத்து அசுரர்களின் புரங்கள் மூன்றையும் வெவ்வழலில் மாட்டி எரித்து வீழ்த்திய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும்..."
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீர் ஆகில் துயர் நீங்கித் தூ நெறிக்கண் சேரலாமே :
"திருச்சோற்றுத்துறையை சோற்றுத்துறை சோற்றுத்துறை என்று சொல்லிப் பெருமானை நினைந்து போற்றுவீர் ஆகில், உங்களுடைய துன்பம் நீங்கித் தூயதான வீடுபேற்றை அளிக்கும் நன்நெறியினைச் சென்று நீங்கள் சேரலாமே..."
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*முழுவதும் ஓர் தொகுப்பாக :*
உடலின் கழிவுகளான அழுக்குகள் ஊறி ஒழுகும் ஊற்றுத்துறைகள் ஒன்பதையும் உங்களது அந்திமக் காலத்தில் ஒருசேர அடைக்கும் போது அதனை உம்மால் உணர்ந்து கொள்ள முடியாது, நீங்கள் இறந்த பின்னர் உங்களுடைய யாதனா சரீரத்தை எம தூதுவர்கள் கொண்டு போகும் முன்னம், மயக்கத்தை செய்யும் மாயா வாழ்க்கையை மெய்யென மகிழ்ந்து வாழும் அன்பர்களே, பகைமை பூண்டு வேறான செயலை செய்யும் முப்புரத்து அசுரர்களின் புரங்கள் மூன்றையும் வெவ்வழலில் மாட்டி எரித்து வீழ்த்திய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும், திருச்சோற்றுத்துறையை சோற்றுத்துறை சோற்றுத்துறை என்று சொல்லிப் பெருமானை நினைந்து போற்றுவீர் ஆகில், உங்களுடைய துன்பம் நீங்கித் தூயதான வீடுபேற்றை அளிக்கும் நன்நெறியினைச் சென்று நீங்கள் சேரலாமே.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*சிவாயநம*
*தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது*
*பெட்டப் பிணமென்று பேரிட்டுக் கட்டி*
*எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே*
*நெடுங்களத்தான் பாதம் நினை.*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
திருச்சிற்றம்பலம் #🙏ஆன்மீகம்
நடப்பது நடக்கட்டும்.
ஒரு ராஜா.
அவர் மிகவும் நல்லவர். அதனால் குடிமக்கள் அனைவரும் அவருக்கு விசுவாசமாக இருந்தனர்.
இந்த ராஜாவின் ராஜ்ஜியத்தில்
ஒரு மீனவன் ராஜாவை மிகவும் நேசித்தான். அந்த ராஜாவுக்கு ஒரு குறிப்பிட்ட மீன் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரியும்.
ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக அந்தக் குறிப்பிட்ட மீன் அந்த மீனவனுக்கு கிடைத்தது. அந்த மீன் விலை மதிப்புமிக்கது என்றாலும், அதை விற்கவில்லை. அதற்குப் பதிலாகத் தன் மனம் கவர்ந்த மன்னனுக்கு அன்புப் பரிசாக வழங்குவது, என்று முடிவு செய்து அரண்மனைக்குப் புறப்பட்டான்.
அரண்மனை வாயிலில் உள்ளே அவன் அனுமதிக்கப்பட்டான். உள்ளே சென்ற மீனவன் மன்னனைப் பார்த்து தலை வணங்கி, தான் கொண்டு வந்த மீனை தட்டில் வைத்தான். அந்த மீனைக் கண்டதும் மன்னனின் முகம் மலர்ந்தது.
தலை வணங்கிய மீனவன் கூறினான், "ராஜா இன்று தான் இந்த மீனைப் பிடித்தேன், இதை உங்களுக்கு விருப்பமானால், தயவு செய்து என் அன்பின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றான்.
மன்னன் மனம் நெகிழ்ந்து ஏற்றுக்கொண்டான். தனது உதவியாளரை அழைத்து ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொண்டு வரச் சொன்னான். அந்தப் பையைத் திறந்து ஒரு வெள்ளித் தட்டில் கொட்டினான். அதில் ஒரு காசு மட்டும் தவறி விழுந்து உருண்டோடியது. அந்தக் காசு உருண்டோடி கீழே விழும் முன்பு அந்த மீனவன் ஓடிச் சென்று அதைப் பிடித்துக்கொண்டான்.
அதைக் கண்ட ராணி ராஜாவிடம்,
"இந்தப் பேராசை பிடித்தவனைப் பாருங்கள். நீங்கள் இவ்வளவு பொற்காசுகள் தரும்போது கேவலம் ஒரு காசுக்காக ஓடுகிறான்" என்றாள்.
ராஜாவுக்குக் கோபம் வந்தது.
"பேராசை பிடித்தவனே, நான் உனக்கு நூறு தங்கக் காசுகள் தருகிறேன். ஆனால் நான் இருக்கும்போதே நீ ஒரு காசுக்காகத் துரத்தி ஓடுகிறாய். உன் பேராசைக்கு அளவே இல்லையா"
இதைக் கேட்டவுடன்
திடுக்கிட்ட அந்த மீனவன் வருத்தத்துடன் கூறினான்.
என் மனம் கவர்ந்த ராஜாவுக்கு இந்த மீனைப் பரிசாகத்தான் கொண்டு வந்தேன். எதையும் பதிலாகப் பெறுவதற்கல்ல." இப்படிக் கூறிவிட்டு அவன் கீழிருந்து எடுத்த நாணயத்தை வெள்ளித் தட்டில் வைத்துவிட்டுக் கூறினான்.
"ராஜா இந்த நாணயத்தைப்
பாருங்கள். இதில் உள்ளது யாருடைய உருவம்"
அதற்கு மன்னன் எரிச்சலுடன், "ஏன் கேட்கிறாய் இதில் என் உருவம் இருப்பது தெரியவில்லையா" என்றான்.
"உங்கள் உருவம் அதில்
இருப்பதால்தான் அதைத் துரத்தி ஓடினேன். என் ராஜாவின் பிம்பம் தரையில் வீழ்வதை நான் பார்க்க விரும்பவில்லை" என்று கூறிவிட்டு தலைவணங்கி விடைபெற்றான்.
தன் தவறுக்கு வருந்திய ராஜா ஒரு தூதுவனை அனுப்பினான். எங்கே தான் தண்டிக்கப்படப் போகிறோமோ என்று மீனவன் பயந்தான். ஆனால், மன்னன் அவனுக்கு இரண்டு கை தங்கக் காசுகளைக் கொடுத்து அனுப்பினான்.
இதுதான் கசிந்துருகச் செய்யும் அன்பு. இதயத்தின் தலைசிறந்த இந்த அன்புதான் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான திறவுகோல்.
வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள். மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்திற்கான ஆரம்பம்.
மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது. எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் பிறரிடம் போராடும் நிலையில் இருந்து விடுபடலாம்.
எவரிடமும் விவாதிக்காமல் இருந்தால் பிரச்சினைகள் உருவாகாது. வாழ்வு சில காலம் நடப்பது நடக்கட்டும் என்பதை உணர்ந்தால் அமைதிக்கும் பஞ்சம் இருக்காது.
_*கல்வி என்னும் கரடு முரடான மலையை கடப்பது கொஞ்சம் கடினம்தான்....*_
_*இந்த கரடு முரடான மலையை "நீ "கடந்து விட்டால்*_
_*எந்த விலங்குகளாலும் உன்னை வேட்டையாட முடியாது...*_
_*கல்வி.....*_
_*ஓழுக்கம் என்பது*_
_*கவனிக்கும் போது இருப்பதல்ல.....*_
_*கவனிக்காத போதும் தொடர்வதே. *_
_*இலையுதிர் காலம்
எனினும் சருகாவதில்லை வேர்கள்.*_
_*ஆகையால் கனவுகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்து இருங்கள்.*_
_*அதுதான் உங்களின் இலக்குகளை அடைவதற்கு மனவலிமை தரும்.*_
_*பணத்தை விட நேரம் சிறந்தது.*_
_*கடந்துபோன நேரத்தை எங்கும் எப்போதும் வாங்க முடியாது.*_
_*நேரத்தை வீணாக்காமல் நேர்த்தியுடன் பயன் படுத்துவோம்.*_ #🙏ஆன்மீகம்
ஆதி சங்கரர் அருளிய வைராக்ய ஸ்லோகங்கள்
ஒரு காவல்காரன் வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''ஜாக்கிரதை'' என்று கத்திக்கொண்டே போவான்
ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்யவேண்டியதாயிற்று
அவன் பிள்ளை முன் ஜன்மத்தில் ஒரு #வேதமறிந்த பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்கிரதை சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான் அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான் அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான் ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து
விட்டானோ,இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவானோ காவல் காரன் நடுங்கினான் ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான் எதற்காக முதல் நாள் இரவு பையன் ''ஜாக்கிரதை. ஜாக்கிரதை '' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது.அந்த நீதி வாக்யங்கள் இவைதான்
#ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில
(1)மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதராஅர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”
அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,
(2)ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந: சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”
பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ நடக்கும் துயரம், வாழ்வே சோகம்,மாயம்,
விழித்துக்கொள் ஜாக்ரதை
(3)காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா
ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா .உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை
(4)ஆசாயா பத்யதே ஜந்து கர்மணா பஹு சிந்தயா ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”
ஆசையெல்லாம் தோசை தான் மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா நாம், மனக்கோட்டை கட்டுபவர்கள் அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ளவேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.
(5)நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை வாலிபம் நிரந்தரமல்ல நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை,
(6)சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளி நம் வாழ்வு, சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பிகம், பேர் புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் . ஜாக்ரதை ஜாக்ரதை
(7)சாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும்.தலை ஆட்டும் நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு.அப்புறம் வேறென்ன, தொடரும் கதை தான்.இதில் என்ன யோசிக்க இருக்கிறது.மேடையில் ஏறியாயிற்று, வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை
“இதைத் தான் கவியரசு அண்ணனென்னடா தம்பி என்னடா அதிசயமான உலகத்திலே” என்று எழுதினாரோ! #🙏ஆன்மீகம்
🌟🪔 மகம் நட்சத்திரம் (Magha Nakshatra) – விளக்கம் 🪔🌟
✨ 27 நட்சத்திரங்களில் மிகவும் பெருமை, மரபு, அரச குணம் கொண்ட நட்சத்திரமாக மகம் கருதப்படுகிறது. இது பித்ருக்கள் (முன்னோர்கள்) ஆசீர்வாதம் பெற்ற நட்சத்திரம் என்று வேத ஜோதிடம் கூறுகிறது.
🔱 மகம் நட்சத்திரத்தின் முக்கிய அம்சங்கள்:
🔸 👑 1. அரச குணம்:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைத்துவம் கொண்டவர்கள். மரியாதை மற்றும் கௌரவத்தை விரும்புவார்கள்.
🔸 🪔 2. முன்னோர்கள் ஆசீர்வாதம்:
இந்த நட்சத்திரத்தின் அதிபதி பித்ருக்கள் (முன்னோர்கள்). அதனால் முன்னோர்களின் ஆசீர்வாதம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.
🔸 🔥 3. தன்னம்பிக்கை அதிகம்:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியம், தன்னம்பிக்கை மற்றும் உறுதியான மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
🔸 💎 4. மரபு மற்றும் பாரம்பரியம்:
குடும்ப மரபு, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் குணம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.
🔸 🌟 5. தலைமை திறன்:
மற்றவர்களை வழிநடத்தும் திறன் இவர்களுக்கு இருக்கும். சமூகத்தில் ஒரு முக்கிய இடத்தை அடைய முயற்சி செய்வார்கள்.
🔸 🪷 6. பக்தி மற்றும் தர்மம்:
இவர்கள் பக்தி உணர்வு கொண்டவர்கள். கோவில், தர்மம், புண்ணியம் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள்.
🔸 ⚡ 7. சுய மரியாதை:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் சுயமரியாதையை மிகவும் மதிப்பார்கள். யாரிடமும் எளிதில் தாழ்ந்து பேச மாட்டார்கள்.
🔸 🌞 8. செல்வாக்கு:
இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு அதிகாரமும் செல்வாக்கும் இருக்கும். பலர் இவர்களை மதித்து பார்ப்பார்கள்.
🔸 🌺 9. உதவி மனப்பான்மை:
மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மனம் இவர்களிடம் இருக்கும்.
🔸 ✨ 10. ஆன்மீக முன்னேற்றம்:
மகம் நட்சத்திரம் ஆன்மீக வளர்ச்சிக்கும் வழிகாட்டும் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.
🌼 சுருக்கமாக:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரச குணம், மரபு மதிப்பு, தன்னம்பிக்கை, பக்தி ஆகியவற்றால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
#🙏ஆன்மீகம்
மனதின் தாகத்தை பொறுத்தே.....!!
நமக்கு மிக பெரிய தண்ணீர் தாகம்..இருக்கிறது..என்ன செய்வோம்..
முதலில்...கடுமையாக நீரை தேடி ஓடுவோம்...அல்லவா...
தாகம் இல்லாதவர் ..நீரை பற்றிய எண்ணம்,கருத்து..எதுவுமே இருக்காது....
அது போல...தான்.
ஒரு மனிதனுக்கு இறைவன் பற்றிய அல்லது தன் ஆன்மா...பற்றிய உண்மைகளை பற்றிய தேடல்கள்
இருந்தால் மட்டுமே..
ஆன்மீக தாகம் இருந்தால் மட்டுமே....
அந்த மனிதர்கள். தேடலுக்கு ஏற்ப்ப.அந்த கால கட்டத்தில்..இறைவன் உலக வாழ்வு உண்மையை..புரிய வைத்து..
தெளிய வைத்து..
உணர்த்தி விடுவார்..
இந்த வாழ்வின் உண்மை தன்மையை...
காலம்..என்பது..தன் தாகத்தை பொறுத்தது...
நம் தாகம்.....வெளி உலக விசயத்தில் இருக்கும் போது....
இறை..இறைவனை உணர்வது சாத்தியம் இல்லாமல் ..
ஏன் பிறவியே கழிந்து விடுகிறது....
தான் யார்..என ஆன்மீக தாகத்தில்..தேடாதவர்கள்,நினைக்காதவர்கள்..
இறைவன் அவர்கள்..பக்குவப்பட்டு...அனுபவத்தில்.. வரட்டும்...என காலம் தாழ்த்தி..
தொடர் வினைக்கு தகுந்த பிறவிக்கு விட்டு விடுகிறார்..
சில பேருக்கு
சிறு வயதிலே...ஆன்மீக தாகம் அமைந்து விடும்..
சில பேருக்கு
அந்த பிறவியிலே..பட்ட அனுபவத்தில் விளைவில்..நல்ல வயது அடைந்த பின்னரும்..ஆன்மீக தாகம்..ஏற்ப்பட்டு விடும்..
பல பேருக்கு..இந்த பிறவி முழுவதும் ஆன்மீக தாகம் இல்லாமல்..மறைந்து விடுபவர்களும்..உண்டு..
ஆன்மீக..இறைவன்.அடைவது..எல்லாம்..நம் தாகத்தை..பொறுத்தது..
இப்போது.. நம் தாகம்..எதை நோக்கி இருக்கிறது.
என ..நமக்கு நாமே பரிசோதனை செய்து கொள்ளலாம்.....
ஓம் ஸ்ரீ சாக்கடை சித்தர்..குருவே சரணம்...
ஓம் முருகா சரணம்..... #🙏ஆன்மீகம்
பெண்கள் காலையில் சமையலறைக்கு சென்றதும் எதை முதலில் சமைக்க வேண்டும்? என்பது பற்றிய விளக்கம்*
*சாஸ்திரம் என்ன சொல்கிறது ?.
பெண்கள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, சமையலறைக்கு சென்று, சமையலறையை சுத்தம் செய்த பின்பு, எதை சமைப்பார்கள்!
அதாவது சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, சில பேரது வீட்டில் வளர்ந்து வரும் நவ நாகரீக சூழ்நிலைக்கு ஏற்ப பலகாரங்கள் கூட செய்யப்படும். அதாவது இட்லி, தோசை, பூரி, பொங்கல் இவைகள் கூட செய்யலாம். ஆனால் நம்முடைய பாரம்பரியப்படி அந்த காலங்களில் எல்லாம் நம் முன்னோர்கள் எந்த முறையை பின்பற்றி வந்தார்கள்?.
அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஒரு சிறிய புராண கதை.
காரைக்கால் அம்மையாரை பற்றிய கதைதான் இது. இந்த காரைக்கால் அம்மையாரை பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.
சிவபெருமானை காண்பதற்கு கைலாயம் சென்றபோது, ‘கைலாயம் என்பது சிவன் வசிக்கும் இடம்’. அந்த இடத்தை காலால் எப்படி மிதிப்பது? என்று, தன்னுடைய தலையால் நடந்து சென்று சிவபெருமானை தரிசனம் செய்த பெருமை இவருக்கு உண்டு.
ஒருநாள் காரைக்கால் அம்மையாரது வீட்டிற்கு சன்னியாசி வேடத்தில் வருகை தந்தார் ‘ஈசன்’.
அந்த காலங்களில் எல்லாம் பிச்சை கேட்டு வரும் அடியார்களுக்கு எதுவும் இல்லை என்று சொல்லாமல் உபச்சாரம் செய்வது என்பது நம்முடைய பாரம்பரியமாக இருந்து வந்தது.
அந்த சன்னியாசி பிச்சை கேட்டு வந்த அந்த நேரத்தில், காரைக்காலம்மையார் வீட்டில் வெறும் சாப்பாடு மட்டுமே இருந்தது. சாப்பாட்டுடன் சேர்த்து இரண்டு மாம்பழங்களும் இருந்தன. சாதத்திற்கு குழம்பு எதுவும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாத அம்மையார், ஒரு பாத்திரத்தில் சாதத்தையும் மாம்பழத்தையும் மட்டும் போட்டு தன் வீட்டிற்குப் பிச்சை கேட்டு வந்த அந்த சன்னியாசிக்கு கொடுத்துவிட்டார்.
ஆனால் சன்னியாசி வேடத்தில் வந்திருக்கும் அந்த முனிவர் சிவன் தான், என்ற உண்மை காரைக்கால் அம்மையாருக்கு தெரியாது.
காலை வேலையில், வெறும் சாதத்தை மட்டுமாவது வடித்து வைத்திருந்ததால் தான், பசியோடு வந்த அடியாருக்கு தன் வீட்டில் இருந்த சாதத்தை மட்டுமாவது, காரைக்கால் அம்மையாரால், உணவாக தர முடிந்தது.
அன்று மட்டும் காரைக்காலம்மையார் முதலில் சாதத்தை வடிக்காமல், குழம்பு மட்டுமே வைத்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? சிந்திக்க வேண்டிய விஷயம் தான் இது.
காரைக்கால் அம்மையார் சிவபெருமானை சரண் அடைந்ததற்கு, இதுவும் ஒரு காரணமாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இப்போது தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கான பதில், நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் !.
இதோடு மட்டுமல்லாமல் காலையில் வடித்த சாதத்தோடு சிறிது நெய் சேர்த்து இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கும் பழக்கத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்ததும் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் சமைக்கலாம். ஆனால், அதையெல்லாம் சமைப்பதற்கு முன்பாக முதலில் சாதத்தை வடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த சாதத்தை நெய் விட்டு இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து விட்டு, அதன்பின்பு அந்த நாளைத் தொடங்கிப் பாருங்கள். நிச்சயமாக வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். அந்த காலமாக இருந்தாலும், இந்த காலமாக இருந்தாலும், நம்முடைய சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயம் எதுவுமே பொய்யாகாது.
காரணமில்லாமல் எந்த ஒரு செயலையும் நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
##### வாழ்க வளமுடன் 🙏 #🙏ஆன்மீகம்
🌹*திருத்தணி: உள்ளத்தின் சினம் தணிக்கும் உன்னத* *மலை! ⛰️ ஐந்தாம் படை வீட்டின் பேரமைதி! ✨* 🌹
🦚🦚
போர்க்களத்தின் வேகம் மறைந்து, அமைதி தவழும் திருத்தணிகை! நம் மனக்கவலைகளைப் போக்கி சாந்தம் அளிக்கும் கந்தனின் சிறப்புகள் இதோ... 👇
சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்த பிறகு, முருகப் பெருமானின் சினம் (கோபம்) தணிந்த இடம் இதுவே. அதனால் தான் இதற்கு 'திருத்தணிகை' என்று பெயர் வந்தது.
முருகப் பெருமான் வேடர் குலப் பெண்ணான அன்னை வள்ளியை மணம் முடித்துக் கொண்டு வந்து தங்கிய தலம் இது. இன்றும் வள்ளியம்மை திருமண விழா இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
அலைகடலில் சூரனை அழித்த வேலவன், தன் சினம் தணிந்து அன்னை வள்ளியுடன் அமர்ந்து அருள்பாலிக்கும் இடம். இது ஒரு காதல் மற்றும் மங்கலத் தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு சென்றாலே நம் கோபமும், கவலைகளும் மறைந்துவிடும்!
மலையின் உச்சியில் இருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல 365 படிகள் உள்ளன. இவை ஒரு வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கின்றன. இந்தப் படிகளில் ஏறிச் செல்வது வருடம் முழுமைக்கும் நமக்கு நிம்மதியையும் பாதுகாப்பையும் தரும் என்பது நம்பிக்கை.
புகழ்பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், இங்கு முருகன் வாயில் கற்கண்டு போடப் பெற்ற பின்னரே தனது முதல் கீர்த்தனையை இயற்றியதாக வரலாறு கூறுகிறது.
திருத்தணி முருகனின் அழகு சொல்லில் அடங்காது. ரத்தினங்கள் இழைத்த கிரீடத்துடன் அவர் காட்சி தரும் அழகைப் பார்க்க இரு கண்கள் போதாது!
"வாழ்க்கையில் எவ்வளவு வெற்றிகள் பெற்றாலும், இறுதியில் தேவையானது 'அமைதி' மட்டுமே - என்பதைச் சொல்வதே திருத்தணி!" ✍️🦚 #🙏ஆன்மீகம்
சித்தர்கள் போற்றும் பொன் ஊதிமலை - அருள்மிகு உத்தண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில் சிறப்புகள்! 🔱✨
ஓம் முருகா! 🙏
கொங்கு நாட்டின் ஆன்மீகப் பொக்கிஷங்களில் ஒன்றான, திருப்பூர் மாவட்டம் (பழைய கோவை மாவட்டம்) காங்கேயம் அருகே அமைந்துள்ள ஊதியூர் மலை பல அதிசயங்களையும், சித்தர்களின் இரகசியங்களையும் தன்னுள் கொண்டது. இத்தலத்தின் சிறப்புகளை இன்று காண்போம்.
📍 தல வரலாறு & பெயர்க்காரணம்:
பதினெண் சித்தர்களில் ஒருவரான கொங்கணச் சித்தர், இங்கிருந்த மூலிகைகளைக் கொண்டு நெருப்பு ஊதி 'பொன்' தயாரித்ததால் இத்தலம் "பொன் ஊதிமலை" என்று அழைக்கப்படுகிறது. அனுமன் தூக்கிச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இங்கே விழுந்ததாகக் கருதப்படுவதால், இது ஒரு 'சஞ்சீவி மலை' என்றும் போற்றப்படுகிறது. 🌿
🕉️ மூலவரின் சிறப்பு:
இக்கோயிலின் மூலவர் உத்தண்ட வேலாயுதசுவாமி, கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்தபடி, வெற்றி வேலுடன் கம்பீரமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கொங்கணச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழைய விக்ரகம் திப்பு சுல்தான் படையெடுப்பின் போது பின்னமடைந்தாலும், இன்றும் அது மகாமண்டபத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
🧘 சித்தர்களின் இருப்பிடம்:
மலைப்பகுதியில் கொங்கணச் சித்தருக்குத் தனிச் சன்னதி உள்ளது. அவர் வடக்கு நோக்கி யோக நிஷ்டையில் அமர்ந்திருப்பதை இன்றும் நாம் தரிசிக்கலாம். இன்றும் கூட பௌர்ணமி மற்றும் விசேஷ காலங்களில் சித்தர்கள் ஒளி வடிவில் வந்து முருகனை வணங்கிச் செல்வதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். ✨
🙏 வேண்டுதலும் பலன்களும்:
சுப காரியங்கள்: இந்தப் பகுதி மக்கள் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பும், இந்த முருகனிடம் 'உத்தரவு' கேட்ட பின்னரே தொடங்குகின்றனர். அப்படிச் செய்தால் காரியம் தடையின்றி வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
செவ்வாய் வழிபாடு: திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிட்டவும் தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் முருகனுக்கு அபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நற்பலன் நிச்சயம்! 🕯️
🎊 முக்கிய திருவிழாக்கள்:
தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி விழாக்கள் இங்கே மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
ஆடி விசாகத்தன்று நடைபெறும் 'படிபூஜை' காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 🪔
🚶 எப்படிச் செல்வது?
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திலிருந்து பழநி செல்லும் சாலையில் சுமார் 13 கி.மீ தொலைவில் ஊதியூர் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து 156 படிகள் ஏறினால் மலைக்கோயிலை அடையலாம்.
கோயில் திறக்கும் நேரம்:
⏰ காலை 9:00 - மதியம் 12:00
⏰ மாலை 5:00 - 6:00
முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்க இந்தப் பதிவைப் பகிருங்கள்
#🙏ஆன்மீகம்











