ShareChat
click to see wallet page

எவ்வாறு ஆராய்ந்து பார்த்தாலும் இந்த ஊன் உடம்பு நிலையற்றது புழுக்களும் நோயும் நிறைந்து வாழும் குடிசை இதை நல்லோர் அறிந்து தாமரை இலை தண்ணீரில் வாழ்ந்தாலும் அதனுடன் ஒட்டாது வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வர் இந்த உண்மையை உணராதவரிடம் இதைப் பற்றி பேச மாட்டார்கள். // அனைத்து சமயங்கலும் நிலையாமையைக் கூறி பிறர்க்கு கொடுப்பதையும் ஆசையை விடுவதையுமே தலையாய கடமையாக சொல்வதற்கு அடிப்படை காரணம் பற்றறுக்கவே. பற்றறுத்தால் மட்டுமே இறைவன் பால் நெருங்க முடியும் இல்லையேல் ஆசை நமை இவ்வுலக வாழ்வு பிறவி சுழர்ச்சியில் அமிழ்த்துவிடும் // வெண்பா எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு *சிவ சிவ* 🔥 *திரு அம்பலத்தரசன் திருவடி நிழலில் என்றும் உன் அடியேன்*! #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய

629 காட்சிகள்