இன்று தை கிருத்திகை
முருகப்பெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதமாகும். 2026-ஆம் ஆண்டு தை கிருத்திகை ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை
கிருத்திகை வருவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
அதிகாலையிலேயே எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து முருகனை வழிபட வேண்டும்.
நாள் முழுவதும் உபவாசம் (பட்டினி) இருப்பது சிறந்தது. முழுமையாக இருக்க முடியாத வர்கள் பால், பழங்கள் மட்டும் உட்கொள்ளலாம். ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்பவர் கள் மதிய உணவை தவிர்த்து, இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம்.
வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு அல்லது சிலைக்கு செவ்வரளி மற்றும் மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்து, தீபமேற்ற வேண்டும்.
மந்திரம்: "ஓம் சரவணபவ" அல்லது "ஓம் முருகா" என்ற மந்திரத்தை 108 முறை அல்லது உங்களால் இயன்ற அளவு ஜபிக்க வேண்டும். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் அல்லது கந்த குரு கவசம் படிப்பது மிகுந்த பலனைத் தரும்.
மாலை வேளையில் முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சிறப்பு. குறிப்பாக செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவது கடன் தொல்லைகள் மற்றும் செவ்வாய் தோஷ நீக்கத்திற்கு உதவும்.
மாலையில் முருகனை வழிபட்டு தீபாராதனை காட்டிய பிறகு, எளிமையான உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்
தை கிருத்திகை விரதம் இருப்பதால் குடும்பத்தில் அமைதி, செல்வச் செழிப்பு மற்றும் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நன்றி #🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐