ShareChat
click to see wallet page

♦️விக்னேஸ்வரா போற்றி... 🚩ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 🌹பொருள் விளக்கம்: ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன். 🔹ஐந்து கரங்களில் வலப்புறக் கைகளில் ஒன்று பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. 🔹மேல் வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது. இடப்புற மேல் கையில் பாச கயிறும், மற்றொ ரு இடக்கையில் மோதகமும் (கொழுக் க்ட்டை) வைத்தபடி விநாயகர்காட்சி தருகிறார். 🔹ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார். 🔹கொடியவர்களை ஒழிக்கும் ஆயுதமாக அங்கு சத்தையும், தம்மை வழிபடும் அடியவர்களுக் குத் துன்பம் தருவோரை தம் பாசக்கயிற்றால் அழிக்கவே அதனை கையில் ஏந்தியுள்ளார். 🔹மற்றொரு கையில் அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டையை வைத்துள்ளார். துதிக்கை யில் வைத்திருப்பது அமுதக் கலசம். 🔹அதாவது விநாயகரை மனமுருக வேண்டி வழி படுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும் என்பதை இது உணர்த்துகிறது. 🌹ஶ்ரீ கஜமுக பாத நமஸ்தே... #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐

638 காட்சிகள்
5 மணி நேரத்துக்கு முன்