♦️விக்னேஸ்வரா போற்றி...
🚩ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
🌹பொருள் விளக்கம்: ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
🔹ஐந்து கரங்களில் வலப்புறக் கைகளில் ஒன்று பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது.
🔹மேல் வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது. இடப்புற மேல் கையில் பாச கயிறும், மற்றொ ரு இடக்கையில் மோதகமும் (கொழுக் க்ட்டை) வைத்தபடி விநாயகர்காட்சி தருகிறார்.
🔹ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
🔹கொடியவர்களை ஒழிக்கும் ஆயுதமாக அங்கு சத்தையும், தம்மை வழிபடும் அடியவர்களுக் குத் துன்பம் தருவோரை தம் பாசக்கயிற்றால் அழிக்கவே அதனை கையில் ஏந்தியுள்ளார்.
🔹மற்றொரு கையில் அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டையை வைத்துள்ளார். துதிக்கை யில் வைத்திருப்பது அமுதக் கலசம்.
🔹அதாவது விநாயகரை மனமுருக வேண்டி வழி படுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும் என்பதை இது உணர்த்துகிறது.
🌹ஶ்ரீ கஜமுக பாத நமஸ்தே...
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐