என் நிசங்களை எல்லாம்
தட்டிப் பறித்து விட்டு
உன் நினைவுகளைப் புகுத்திக் கொண்டே இருக்கிறாய்....
நிசத்திற்கும் நினைவுக்குக் இடையே கடிகார முட்களாய் நில்லாது ஓடுகிறது இந்த காதல்....
விழுங்கியது போதும்
விநோதா
உமிழ்ந்து விடு என் நிசங்களை
உணர்வுகளோடு கொஞ்சம் உயிர்ப்பிக்கிறேன்...
சில நாழியாவது
உறைந்து கிடக்கட்டும் இந்த காதல்...
உன் காயங்களுக்கு மருந்திட நினைத்தேன்
எப்படி மறந்து போனேன்? ~ உன்னால்
என்னுள் வளரும் காயங்களை....
மறக்காமல் கொடுக்கிறது
மறதியை இந்த காதல்....
மௌனத்தை நீ மொழி கொண்டு வீழ்த்துகிறாய்...
உள்ளமதை உளிகொண்டு
செதுக்குகிறாய்...
வலியில் மலர்கிறது
வழிதேடியே
முடிவறியாக் என் காதல்.....💔💔💔 #💞Feel My Love💖