ShareChat
click to see wallet page

🌹இனிய சிவனே என்றிருப்பது என்றால்... நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 1)மனம் அமைதியாக இருப்பது என்று பொருள் 2)வீணான எண்ணங்களிலிருந்து விடுபட்டிருப்பது என்று பொருள் 3)கவலையிலிருந்து விடுபட்டிருப்பது என்று பொருள் 4)எல்லாப் பொறுப்பையும் அவரிடம் கொடுத்தாகிவிட்டது என்று பொருள் 5)எல்லாம் நன்மைக்கே என்று பொருள் 6)எதனாலும் குழப்பமடையாத நிலை என்று பொருள் 7)ஆடாத,அசையாத நிச்சய புத்தி உடைய மனம் என்று பொருள் 8)மனம் லேசாகவும், முகம் மலர்ந்திருக்க வேண்டும் என்பது பொருள் 9)எந்த ஒரு சூழ்நிலையிலும் திருப்தியாக இருப்பது என்று பொருள் 10)தன்னிடம் வருபவர்களின் மனதை அமைதி அடைய வைப்பது என்பது பொருள் 11)ஏகாந்தத்தை அனுபவிப்பது என பொருள் 12)சதாகாலம் அவரையே நினைத்திருப்பது என்பது பொருள் 13)எந்த ஒரு சூழ்நிலையிலும் நிம்மதியாக இருப்பது என்று பொருள் 14)தன்னால் பிறரும் பிறரால் தானும் துக்கமடையாத நிலை என பொருள்... 15)உலகீய பொருட்களில் சாரமில்லை சிவமே இன்பம் என நிலைத்திருப்பதாக பொருள்... இப்படி பரம்பொருளான தந்தை ஈசனை என்றும் நினைத்து அவர் சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது ஒன்றே சிவனே என்றிருப்பது. என பொருள்படும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவ #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏

1K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்