ShareChat
click to see wallet page

#ராஜபாளையம் அருகே சேத்துரில் கஞ்சா போதையில் சிறுவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையில் புகார் அளித்தவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டி கஞ்சா போதையில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் அடித்தும் இழுத்தும் சென்றனர் 🤦🏻‍♀️ தீபாவளியன்று அப்பகுதியில் உள்ள பள்ளியில் பட்டாசு வெடித்த சிறுவர்களை கஞ்சா போதை ஆசாமிகள் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள்.. 📌 இது பற்றி பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் கஞ்சா போதை ஆசாமிகளை பிடித்த போலீசார் சரியாக விசாரிக்காமல் மறுநாள் விடுவித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்... 📌 காவல் நிலையத்தில் இருந்து வெளிவந்த போதை ஆசாமிகள் புகார் அளித்த 5குடும்பங்களையும் குறி வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி வெறி செயலில் ஈடுபட்டனர்.. 📌 வீடுகளை நாசம் செய்த போதை ஆசாமிகள் அருகில் இருந்து தண்ணீர் டேங்கயும் வெட்டி சேதப்படுத்தி சென்றனர்... 📌 தங்கள் பிள்ளைகளை தாக்கிய போது சேத்தூர் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் தங்கள் வீடுகளுக்கு இது போன்ற துயர சம்பவம் நடந்திருக்காது என்று காவல்துறையை கண்டித்து ராஜபாளையம் தென்காசி சாலை மறியலில் ஈடுபட்டனர்📌 அங்கு வந்த காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்துவது போல வந்து அனைவரையும் கைது செய்தனர்... 📌 தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் காவல்துறை மக்களுக்கானவர்கள் என்பதை கூற மறந்து விட்டார் போலும் தற்பொழுதெல்லாம் காவல்துறையே மக்களின் மீது வன்முறையில் ஈடுபடுகிறது 📌 #விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##dmkfails #ராஜபாளையம் #சேத்தூர்

612 ने देखा