முகநூலை திறந்தால் எப்ப பார்த்தாலும் நாய் பதிவுதான். முக்கியமாக இந்த திருட்டு அயோக்கிய மீடியாக்களுக்கு என்னதான் அஜெண்டானு எனக்கு தெரியல. முக்கியமா இந்த சன் நியூஸ் மற்றும் பாலிமர் டிவி இருவரும் எந்த நேரமும் நாய் அங்க அவன கடிச்சிருச்சு இங்க இவன கடிச்சிருச்சு என செய்திகளை பரப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
ஏய்யா இவ்வளவு வருசமா இந்த பூமி இயங்கிக்கிட்டு தான் இருக்கு இவ்வளவு வருசமா அங்கொன்றும் இங்கொன்றுமா கடிக்கிற நாய் மொத்தமா 2025 ஆகஸ்ட் மாதத்துல இவ்வளவு பேரை கடிக்கணும்னு கடிக்குதா ? ஏன் இவ்வளவு வெறியுடன் மிக வன்மமாக செய்தியை பரப்புறிங்க.
பாதி நாய்கள் ஜீவனே இல்லாமல் அமைதியா திரியுற நாய்கள் தான் எங்காவது ஒரு சில நாய்கள் வெறி பிடித்து திரியுது கடிக்குது என்பதற்காக தமிழ்நாட்டில் செகண்டுக்கு செகண்ட் யாரையாவது கடிச்சுட்டே போகுது என்பது போல செய்திகள் அதையும் நம்பி பரப்பும் மக்கள் என்ன சொல்றது.
ஒருவன் திரைப்பட தொழிலில் முதல் பாதி படங்களை மிகுந்த வன்முறை படங்களாகவும், பின் பாதியில் இயக்கிய படங்களை பெண்களை வைத்து மிக மோசமான ப்ளூபிலிம் ரேஞ்சுல படம் எடுப்பவன் அந்த வர்மா இயக்குனரதான் சொல்றேன், எந்த நேரமும் கடற்கரையில் டூ பீஸ் அழகிகளுடன் கிடப்பவன், இன்னொருத்தன் சோசியல் மீடியா மூலம் எந்த ஒரு திறமையும் இல்லாம தனது லுங்கியை தூக்கி காட்டி ஆபாச வார்த்தைகளை பேசி பிரபலமானவன் அந்த ஜிபி யை தான் சொல்றேன்.இவனுகள எல்லாம் ரெபரென்ஸா எடுத்து பேசும் உங்களை என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை
நேற்று கலாட்டா மீடியால ஒருத்தர் தெளிவா அழகா இந்த நாய் பிடிப்பதில் உள்ள பிரச்சினைகளை பேட்டி கொடுத்திருந்தார் அவரை போய்யும் என்ன சொல்றார்னு கேட்காம திட்டதான் செய்றிங்க. ஒரு நாய் ஆர்வலர் நிறைய தெரு நாய்களை பராமரிப்பவர், குட் நைட் படத்துல கூட அவர் நாய் நடிச்சிருக்குன்னு சொன்னார்ல அவர்தான் அந்த பேட்டி கொடுத்தவர். அவர் மிக அறிவுப்பூர்வமா நிறைய வாதங்களை எடுத்து வச்சார், இந்த இந்தியால இருக்குற மொத்தத்தையும் அப்படிலாம் செல்டர்ல அடைப்பது கஷ்டம் ஒண்ணுக்கொண்ணு அடிச்சுக்கிட்டு தான் சாகும், இதன் மூலம் தான் நிறைய நோய்கள் மனிதனுக்கும் பரவும்னு சொன்னாரு, அவர் சொல்றதை எல்லாம் எவனும் காது கொடுத்து கேட்க மாட்றான், உடனே போய் இந்த டெம்ப்ளேட் டயலாக்ஸ் சிலது இருக்கு , கார்ல போற உங்களுக்கு தெரியாது, நீ 10 நாயை எடுத்துட்டு போய் வளர்க்க வேண்டியது தானே, உன் குழந்தையை கடிச்சா தெரியும் என்பதுதான். அய்யா நாய்கடிப்பது விபத்து எப்போதும் எந்த நேரமும் நிகழ்ந்துகொண்டிருப்பதில்லை.
ஆனால் தவறான முறையில் கஞ்சா , ,மது போதையில் வண்டி ஓட்டுபவன், வண்டியே ஓட்ட தெரியாத 2 கே கிட்ஸ், இன்னைக்கு கூட பல்லாவரத்துல 17 வயசு பையன் கேடிஎம் பைக் ஓட்டிட்டு போய் எதிர்த்தாப்ல ஸ்கூட்டில வந்த ஆட்களையும் சாய்ச்சு விட்டு இவனும் செத்துப்போயிட்டான், நாய் விபத்த விட சாலை விபத்து அதிகமா நடக்குது, நிமிடத்துக்கு நிமிடம் ஒரு அப்பாவி உயிர் போய்க்கொண்டிருக்கிறது. சாலை வசதியே சரி இல்லாத இந்தியா போன்ற நாட்டில் கேடிஎம் போன்ற பைக்கை ஏன் அரசு அனுமதிக்கிறது, இதன் மூலம் எத்தனை அப்பாவி பெண்கள், வயதானவர்கள், இது போல சிசி பைக்கை ஓட்டி வருபவர்களால் பலியாகிறார்கள். எவனாவது நாய் எதிர்ப்புக்கு நிமிடத்துக்கு பத்து போஸ்ட் போடுறவன் இது போல விபத்தை எதிர்த்தும் தவறாக போதையில் வண்டி ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும், சின்ன பசங்க அதிவேகமா வண்டி ஒட்டி பல அப்பாவி உயிர்களை காவு வாங்குவதை எதிர்த்து என்னைக்காவது போராடி இருக்கிங்களா? நீ அதிகம் போராட வேண்டியது இதுக்குத்தான். ஏண்டா கடந்த வாரம் கூட கன்னியாகுமரி இரணியலில் டியூசன்ல தன் சின்னக்குழந்தைகளை விட்டுட்டு வந்த ஒரு 25 வயசு பெண்மணிய வேகமா வந்த பைக் காரன் அடிச்சு தூக்கி அந்த பெண் ஸ்பாட்லயே அவுட்டு இதை எல்லாம் ஏன் நாய் எதிர்ப்பு அளவுக்கு கேட்க மாட்டேங்கிறிங்க? நாய்க்கு கருத்தடைக்கு கொடுக்கப்படுற பணம் எல்லாம் எங்கே போகுது அதை ஊழல் பண்ற அதிகாரிய எல்லாம் கேட்க மாட்றிங்க.
இந்த நாய் எதிர்ப்புல மட்டும் நான் பார்த்துட்டேன், ஹிந்து, முஸ்லீம், கிறித்துவர், திமுக, அதிமுக, பிஜேபினு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து செயல்படுறிங்க, இதுல எனக்கு தெரிந்து ஹிந்து மதம் பற்றி தெரியுமா அது எவ்வளவு உன்னதமானதுன்னு தெரியுமா இப்படிலாம் பேசிட்டு ஹிந்து மதத்தின் அடிப்படை தத்துவமான உயிர்களை நேசியுங்கள் என்ற தத்துவத்திற்கெதிராகவே செயல்படுறிங்க.
இதுல எனக்கு அதிக கோபம் வரவைக்கிறது என்னன்னா கோவிலில் எல்லா நேரமும் பூஜை செய்யும் பூஜகர்கள், உனக்கு அந்த தோஷம் இருக்கு இந்த தோஷம் இருக்குன்னு சொல்ற ஜோதிடர்கள் இவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், ஆனால் பாதி பேர் முடிச்சு விடு ஒழிச்சு விடுன்னுதான் பதிவு போட்டுக்கிட்டு திரியுறாங்க.
மதுரையில் ஒரு பிரபலமான ஜோதிடர் ஒருவர் நாய்களுக்கு எதிராக பதிவு போட்டு இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். கோரக்க சித்தர் தனது சந்திர ரேகை நூலில் கலியுகத்தில் பணம் ஒன்றுதான் பெரும்பாலான மனிதர்களிடம் வாய்மை என்பதே இருக்காது , தீயவற்றை எல்லாவற்றையும் ஆதரிப்பார்கள் அதனால் இந்த உலகம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என கூறி இருப்பார்.
அது உண்மைதான் என எல்லாவற்றையும் பார்க்கும்போது அறிய முடிகிறது. விரைவில் மழைகாலம் துவங்க இருக்கிறது, இந்த சென்னைபோன்ற பெரு நகரங்களில் இருப்பவர்கள் தொடர்ந்து நாய்க்கு எதிரா பொங்காம இந்த வருசம் மழையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என பாருங்க, எல்லா வசதிகளும் சரியா இருக்கான்னு நாய்க்கு போடுற பத்து போஸ்ட்ல ஒரு போஸ்ட்லயாவது இந்த வருச மழை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி கேளுங்க. ஒரு அப்பாவி வாயில்லா ஜீவனை அங்கொன்றும் இங்கொன்றுமா நடக்குற விபத்துக்களை வச்சு முற்றிலும் ஒழிச்சு கட்டணும் நினைக்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். ஒருவர் இன்னைக்கு ஒரு செய்தி கமெண்ட்ல சொல்லி இருந்தார். நாய்களை பிடித்து அடைப்பது என்பது வானத்துக்கு போர்வை போர்த்துவதுபோன்று என சொல்லி இருந்தார். அதுதான் உண்மை.
நான் எதையும் யோசித்து நேர்மையுடனும் வாய்மையுடனும் பேசுபவன் என்னிடம் வந்து உங்க வழக்கமான பழைய டெம்ப்ளேட்ஸ் பதில்களை எடுத்து வந்து பதில் பேசிக்கொண்டிருக்காதீர்கள். அப்புறம் என்னுடைய பதில்கள் வேறமாதிரி இருக்கும். நியாயமான முறையில் தர்க்கம் செய்பவர்கள் வாங்க பேசலாம். தெரு நாய பிடிக்கணும்னு சொல்லிட்டு வெறி நாய் மாதிரி குலைக்கிறவங்க வராதிங்க.
ஏன்னா காலையில் எழுந்தது முதல் 24 மணி நேரமும் வேலையில்லாமல் நாய்க்கு எதிராகவே எப்போ பார்த்தாலும் பதிவுகள் போட்டு நெகட்டிவா செய்து கொண்டிருந்த நாலு பேர அன்ப்ரண்ட் செஞ்சு ப்ளாக் பண்ணி விட்டுட்டுதான் வந்திருக்கேன்.
உனக்கு தகுதியான நபர்களுடன் மோதுவதை விட்டுட்டு ரோட்ல போடுற மிச்ச மீசாதிய தின்னு அதுபாட்ல செவனேனு உயிர் வாழ்ந்துக்கிட்ருக்கு அதை போய் போட்டுத்தள்ளனும்னு வெறி கொண்டு திரியுறிங்களே நாய் நாய்னு போங்கயா பேய்களா.
கடவுளோ இயற்கையோ யார் படைச்சாங்களோ அவங்க அழிச்சுக்குவாங்க, இந்த உலகம் வாடகை வீடு மாதிரி நீ வாழ வந்திருக்க, ஏதோ ஒரு பிள்ளைய கடிக்குதுனு ஜிபி முத்து சொல்றதெல்லாம் கேட்டுட்டு அப்பாவி உயிரினத்தை ஒழித்துக்கட்ட இவ்வளவு மெனக்கெட்டினா, நீ போய் சேர்ந்துருவ உன் குழந்தை குட்டிதான் அந்த கர்மாவை தாங்கி கடுமையான கஷ்டங்களுடன் இந்த உலகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும்.
எனக்கு தெரிந்த ஆன்மிகவாதி ஒருத்தர் சொல்லிருக்கார், அடுத்தவங்களை பத்தி தேவை இல்லாம பேசுறதே தவறுன்னு அதன் மூலம் பல்வேறு கர்மாக்களை இழுத்துக்கொண்டிருக்கிறோம் என்று, அது நடைமுறை வாழ்வுக்கு சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் அதுவே பாவம் என்றால் ஒரு ஒட்டுமொத்த இனத்தையே மனித இனம் வாழ்வதற்காக அழிப்பதும் அதற்கு ஆதரவா பேசுவதும் எவ்வளவு பெரிய பாவம்.
என்னவோ அய்யா பைரவா, தேய்பிறை அஷ்டமி அது இதுன்னு உனக்கு வடை மாலை சாத்திட்டு இன்னொரு பக்கம் நாய்களுக்கு எதிரான மன நிலைல பல பேர் இருக்காங்க, எல்லாரையும் கண்ணு வச்சு பார்த்துக்க, உனக்கு தெரியாதது எதுவும் இல்லை. நீ நாயை ஒழிச்சாலும் சரி, செல்டர்ல போட்டு அடைச்சாலும் சரி சுப்ரீம் கோர்ட்டோ ஹை கோர்ட்டோ உன் நீதிமன்றம் முன் எந்த நீதிமன்றமும் செல்லாது நீயே நல்ல முடிவா எடுத்து என்னத்தையோ பண்ணிட்டு போ. #நாய்கள் #நாய்கள் திறமை #நாட்டு நாய்கள் #😍 அகில இந்திய நாய்கள் கண்காட்சி 2023 சேலம் 😍