ShareChat
click to see wallet page

#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம், இது சைவ சமயத்தின் பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும், குறிப்பாக அக வழிபாட்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. இது "உட் சமயம்" (அக வழிபாடு) மூலம் இறைவனை அடையும் வழிமுறைகள், யோகம், சன்மார்க்கம் போன்றவற்றை விளக்குகிறது*... *"சன்மார்க்கம்" என்பது உண்மை மற்றும் இறைவனைப் பற்றிய தத்துவத்தை உணரும் உண்மையான பாதையாகும். இந்த நெறியை நந்திதேவர் உலக மக்களுக்கு அருளியுள்ளார். இது சிவபெருமானின் அருள் வழி, இறைவனையும், தன்னை அறிவதையும் குறிக்கிறது, மேலும் குருபக்தி மூலம் முக்தி அடைய உதவுகிறது*. பாடல் வரிகள் : *9. சன்மார்க்கம்* 1477 சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. 1 1478 சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. 2 1479 தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே. 3 1480 தெளிவறி யாதார் சிவனை யறியார் தெளிவறி யாதார் சீவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. 4 1481 தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந் தாவை னாயுறலானசன் மார்க்கமே. 5 1482 சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ் சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ் சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. 6 1483 சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே. 7 1484 சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப் பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால் நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே. 8 1485 அன்னிய பாசமும் ஆகுங் கருமமும் முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந் தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே. 9 1486 பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப் கசியாத நெஞ்சங் கசியக் கசிவித் தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற் றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே. 10 1487 மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர் மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே. 11 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

2K காட்சிகள்
10 நாட்களுக்கு முன்