ShareChat
click to see wallet page

இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து, தேச விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று. தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக முதல் போர் குரல் எழுப்பிய மாவீரர்கள் மருது சகோதரர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் பிறப்பித்த ஜம்புத்தீவு போர்ப் பிரகடனம், என்றும் அவர்கள் வீரத்துக்குச் சாட்சி. ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய சிவகங்கைச் சீமையை மீட்டு, ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர வைத்த பெருமைக்குரியவர்கள். வீரத்தில் மட்டுமல்லாது, ஆன்மீகத் திருப்பணிகளிலும் சிறந்து விளங்கியவர்கள். காளையார் கோவில், மானாமதுரை, திருமோகூர், குன்றக்குடி என பல ஆலயங்களைப் புனரமைத்தவர்கள். மாவீரர்கள் மருது சகோதரர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.#💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #👉🔰Mukkulathor Sandiyar group🔰👈 #thevar #maruthu maruthu

73.5K ने देखा