#திருவாசகம்_எனும்_தேன்🙏
#ஓம்_நமசிவாய_வாழ்க 🙏
🙏வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப்பு இறப்புச் சிவம்
வேண்டார் தமை நாளும்
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு
திருப்பெருந்துறை இறை தாள்
பூண்டேன் புறம் போகேன் இனிப்
புறம் போகல் ஒட்டேனே .
#மாணிக்கவாசகர் 🙏
நிலை பெற்ற திருப்பெருந்துறை சிவனைச்
சென்று சேர்ந்தேன் . அவன் திருவடியே
துணையாகக் கொண்டேன் . அந்தத்
திருவடியை விட்டுப் புறம் போக மாட்டேன் .
என்னுள் அமர்ந்த இறைவனையும் எழுந்து
புறம் போக விடேன் . எனக்குப் புகழ்
வேண்டாம் . பொருள் வேண்டாம் . மண்ணுலக
விண்ணுலக ஆட்சியும் வேண்டாம் .
பிறப்பு இறப்பு இவையும் வேண்டாம் .
சிவத்தை விரும்பாத புறச் சமயமும் வேண்டாம் .
சிவத்தை வணங்காதார் இணக்கமும்
வேண்டாம் .
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி
என் மனத்தே , என்றும் வழுவாது இருக்க நீ
வரம் தர வேண்டும் . நான் ஒருவேளை
பிறக்க நேரிடில் , கருவுற்ற நாள் முதலாகவே
உன் திருவடி காண்பதற்கு என் உள்ளம்
உருக வேண்டும் . கருவாய்க் கிடக்கும்
போதும் உன் கழலே நினைந்து உன்றன்
நாமம் பயில வேண்டும் . உனது அருளால்
திருவாய் பொலியச் சிவாய நம என்று
நீறணிந்து உன் திருவடி சேரப் பணிக்க
வேண்டும் .
திருப்பெருந்துறையில் அன்று நீ பஞ்சாக்கிர
மந்திரத்தை உபதேசித்தாய் . நமச்சிவாயவே
ஞானமும் கல்வியும் , நமச்சிவாயவே
நன்னெறி காட்டும் , என்பதால் என் நா
நமச்சிவாயத்தை மறவாது சொன்னது .
எனவே என் சிந்தை மகிழச் சிவபுராணம்
தன்னை , என் முந்தை வினை முழுதும்
ஓய உரைப்பேன் . என் சிந்தை விட்டுச்
சிவன் எங்கும் புறம் போக விடேன் . சிவனை
விடுத்து நானும் புறம் போக மாட்டேன் .
திருந்து வார்பொழில் சூழ் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்தம் மேவிய சீர் இருந்தவாறு
எண்ணி ஏசறா நினைந்திட்டு , என்னுடை
எம்பிரான் என்றென்று , அருந்தவா உனை
நினைந்தே ஆதரித்து அழைத்தேன் .
அலைகடல் அதனுளே நின்று , கயிலை
புகு நெறி இது காண் , பொருந்த வா என்று
அருளிய பெருமானே ! இனி உன்னை
விட்டுப் புறம் போக மாட்டேன் .
பேதம் இல்லது ஓர் கற்பு அளித்த பெருந்துறைப்
பெரு வெள்ளமே ! ஏதிலார் எனை ஏதமே
முன்பு பேச , நீ எனை என் செய்தாய் .
சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனிச் சரண்
சரணாம் எனக் , காதலால் உனை ஓதக்
கழுக்குன்றில் உனைக் காட்டிச் சென்றாய் .
இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே
காரணமாய் , அந்தரமே திரிந்து போய் அரு
நரகில் வீழ்வேனைச் , சிந்தைதனைத்
தெளிவித்து , சிவம் ஆக்கி எனை ஆண்டு
அந்தம் இலா ஆனந்தம் அள்ளித் தந்த
அம்பலவா , உனை விட்டுப் புறம் போகேன் .
வினைப்பிறவி என்கின்ற வேதனையில்
அகப்பட்டு , உனைச் சிறிதும் உணராது
உலவுகின்ற வேளையிலே , எனைப்
பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த
இணையிலியை , கணப் பொழுதும் நான்
மறந்து இவ்வுலகில் இருப்பேனோ !
அனைத்து உலகும் தொழும் தில்லை
அம்பலவா , உனைத் தினமும் நான்
தொழுவேன் , ஒரு போதும் உனைப்
பிரியேன் .
உருத்தெரியா காலத்தே என் உள் புகுந்து என்
உளம் மன்னி , கருத்து இருத்தி கருணையினால்
ஆண்டு கொண்ட , திருத்துருத்தி
மேயானை , தித்திக்கும் சிவபதத்தை ,
நான் இனிப் புறம் போகல் ஒட்டேன்
என்கிறார் . #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏நமசிவாய ஓம்✨ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶