INSTALL
Your browser does not support the video tag.
A Mohan Raj
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 8.4 பொற்பதிக் கூத்து* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்) திருமூலரால் அருளப்பட்ட சைவ சித்தாந்தத்தின் உச்சகட்ட ஞான நிலை, குருமட தரிசனம், பஞ்சாக்கர மந்திரங்கள், சிவனின் நடனங்கள், மற்றும் சமாதி நிலை பற்றிப் பேசுகிறது. இது ஆத்மா சிவத்தோடு கலக்கும் பரமானந்த நிலையையும், மெய்ஞான அனுபவங்களையும், பிரணவ மந்திரத்தின் நுட்பங்களையும் விளக்கும் உயரிய பகுதியாகும்.* *ஒன்பதாம் தந்திரத்தில் 8.4 பொற்பதிக் கூத்து (பொற்பதிக் கூத்து - பொன்னம்பலக் கூத்து) பற்றி விளக்கப்பட்டுள்ளது. பொற்பதிக் கூத்து, சிவனின் திருவடிகளைப் போற்றி, அன்புடன் வணங்கும் பக்தர்களின் உள்ளத்தில் நிகழும், ஆன்மாவை சிவமாக்கும் நடனம் எனப்படுகிறது. ஆறு ஆதாரங்களின் ஒளிகளும் ஒன்றாகச் சேர்ந்து, நெற்றிக்கு நேரே விளங்கும் பொன் ஒளியில் ஆடும் கூத்து, பொன் தில்லைக் கூத்து அல்லது பொற்பதிக் கூத்து ஆகும்.* பாடல் வரிகள் : 8.4 பொற்பதிக் கூத்து 2739 தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில் அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும் ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 18 2740 அடிஆர் பவரே அடியவர் ஆமால் அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர் அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். 19 2741 அடங்காத என்னை அடக்கி அடிவைத்து இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன் படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 20 2742 உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 21 2743 மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 22 2744 விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும் தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 23 2745 தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. 24 2746 காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக் கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 25 2747 மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல் கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும் சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. 26 2748 பூதல மேருப் புறத்தான தெக்கணம் ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம் பாதி மதியோன் பயில்திரு அம்பலம் ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 27 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
881 காட்சிகள்
12 மணி நேரத்துக்கு முன்
22
17
கருத்து
Your browser does not support JavaScript!