எப்பவும்
என் கூட இருன்னு
சொல்லல
எப்பல்லாம் யாரும் இல்லைன்னு
மனசு வலியுணரும்போது
அப்ப நீ உன் இருப்பை
எனக்குள் நிகழ்த்துற மாதிரி
ஒரு சின்ன செய்கை
ஆதுர சொல்
இப்ப என்ன செய்யுற
சாப்பிட்டியா
பாட்டு கேக்குறியா
உன் நெனப்பு திடீர்னு வேலையில்
இருக்கும்போது சதா உன்முகம்
அதா கூப்பிட்டேன்
ஏதாவது வேணுமா
அட பேசித்தொலையேன்
சொன்னாத் தானே தெரியும்னு
மிரட்டிப் பேசுற மாதிரி
கண்ணுல தண்ணீர் நிக்க
ஒண்ணுமில்லப்பான்னு சொல்லி
போனை வச்சிட்டு ஓன்னு
யாருக்கும் தெரியாது அழுதுமுடிச்சிட்டு
திருநீறு நெத்திக்கிட்டுட்டு
திரும்பவும் தேடற சாமி முகம்போல
உன்னுது
இப்படி ஓர் உறவு போதும்
வாழ்ந்து தீர்க்க #அவள்