👉 நான் நானாக இருக்கிறேன் 👈
நான் நானாக இருக்கிறேன்
தங்கம் விலை அதிகம்தான்
தகரம் மலிவு தான்
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது
அதனால் தகரம் மட்டமில்லை
தங்கமும் உயர்ந்ததில்லை
எனவே நான் நானாக இருக்கிறேன்
கங்கை நீர் புனிதம் தான்
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன
கிணறாகயிருந்தால் என்ன
நான் நானாக இருக்கிறேன்
காகம் மயில் போல் அழகில்லை தான்
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான்
நான் நானாக இருக்கிறேன்
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான்
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான்
நான் நானாக இருக்கிறேன்
பட்டு போல் பருத்தி இல்லை தான்
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான்
நான் நானாக இருக்கிறேன்
ஆகாசம் போல் பூமி இல்லைதான்
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான்
நான் நானாக இருக்கிறேன்
நேற்று போல் இன்றில்லை
இன்று போல் நாளையில்லை
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான்
எனவே நான் நானாக இருக்கிறேன்
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை
அதில் பாவம் ஏதுமில்லை
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை
என்னை உரசிப் பார்
என்னை சரி செய்து கொண்டே வா
நான் நானாக இருக்கிறேன்
உலகம் ஒரு நாள்
என்னைப் போல் வாழ ஆசைப்படும்
நான் நானாக இருக்கிறேன்
உலகம் ஒரு நாள்
என்னை உதாரணமாகக் கொள்ளும்
நான் நானாக இருக்கிறேன்
உலகம் ஒரு நாள்
என்னைப் பாடமாக ஏற்கும்
நான் நானாக இருக்கிறேன்
உலகம் ஒரு நாள்
என் வழி நடக்கும்
நான் நானாகவே இருக்கிறேன்
உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது எனவே தான் அது நம் கண்ணீர்லும் இருக்கிறது கடலிலும் இருக்கிறது...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥