
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
💐💐💐💐💐அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
💐💐💐 உலகத்தில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் என் இனிய
அன்னையர் தின நல்வாழ்த்துகள் கூறி அனைத்து அனைத்து அன்னையர்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 💐💐💐
அம்மா :
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை...!!
அம்மா :
இச்சொல்லில் புதைந்துள்ள
அர்த்தங்களும் தொணிகளும் ஆயிரமாயிரம்...!!
அம்மா :
அம்மாக்களின் மேன்மையை
எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது...!!
அம்மா :
உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother's Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை...!!
அம்மா :
பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன...!!
அம்மா :
தாயிற்சிறந்த கோவிலுமில்லை என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம் தாய்மையின் பெருமை தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும்...!!
அம்மா :
இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை...!!
அம்மா :
ஒரு பெண்ணானவள் மகளாக சகோதரியாக தாயாக தாரமாக தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக...!!
அம்மா :
இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது...!!
அம்மா :
தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது...!!
அம்மா :
அன்னையர் தினம் Mother's Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்...!!
அம்மா :
அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன...!!
அம்மா :
பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன...!!
அம்மா :
இதில் முக்கியமாக பெண் கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள்...!!
அம்மா :
இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும் முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வணங்கப்பட்டுள்ளது...!!
அம்மா :
வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது...!!
அம்மா :
இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது...!!
அம்மா :
வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர் அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும்...!!
அம்மா :
கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்...!!
அம்மா !!
எனவே அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம்...!!
அம்மா :
அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம்...!!
அம்மா :
ஏனெனில் அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது...!!
அம்மா :
அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என என்னுபவன் நான் அனைத்து உலக அன்னையர்களையும் வணங்கும்
உங்கள்:
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
🌹 இனிய காலை வணக்கம் 🌹
👉 பொறாமையும் ஒழுக்கமும் 👈
பொறாமை என்பது வேறேதுவுமில்லை, மற்றவர்களுடன் நம்மை ஒப்பீடு செய்துபார்ப்பதுதான்...!!
நம்மிடம் இல்லாத ஒன்று மற்றொருவரிடம் இருப்பதை பார்த்து ஆதங்கப்படுவது,..!!
இதில் இரண்டு பிரச்சனைகள் உண்டு
ஒன்று நம்மிடம் உள்ள நல்லவைகளை கவனிக்க தவறுகிறோம்...!!
மற்றொன்று நம்மிடம் இல்லாததை இருப்பது போல் காட்டுகிறோம்...!!
இதனால் பொறாமை குணம் உள்ளவர் வாழ்வில் நிம்மதி இருக்காது...!!
அதேபோல் ஒழுக்கம் என்பது ஒரு முதிர்ச்சியும் பக்குவத்தையும் தரும்...!!
ஒழுக்கமற்றவர் பக்குவமின்றியே இருப்பார்...!!
பக்குவமற்றவரிடம் என்ன பொருள் இருந்தாலும் பயனில்லை...!!
மாறாக ஒழுக்கமற்றவரிடம் உள்ள பொருள் ஒழுக்கக்கேடான செயல்களுக்கே பயன்படுத்துவார்...!!
ஒழுக்கமான வாழ்வில் தான் மகிழ்ச்சியும் உயர்வும் இருக்கும்
அது தான் வாழ்வில் உயர்ந்த செல்வம்...!!
ஒழுக்கமற்றவர் தன் வாழ்வை தானே அழித்துக்கொள்வார்
ஒழுக்கமற்ற வாழ்வில் உயர்வே இல்லை...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘
#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
🤩😍🤩 இது எப்படி இருக்கு 🤩😍🤩
🤩😍🤩 அடேய் சுதர்சன் இன்னடா இது இதுவாடா மோட்டிவேஷனா பேச சொன்னாள் இந்த பெண் இவன் என்ன செய்வானோ அதையே மோட்டிவேஷனாக கூறுகிறிறான்டா சுதர்சன் இதுகூட நல்லாதான்டா இருக்கு சுதர்சன் இன்னம்மோ போடா சுதர்சன் 🤩😍🤩
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
🤩😍🤩 அடேய் சுதர்சன் இன்னடா இது இதுவாடா கேள்வி எப்படி கேட்கிறதுனே தெரியாமல் கேள்வி கேட்டால் பதில் இப்படி தான்டா சுதர்சன் வரும் அதை சொல்லத்தான் இந்த பதிவு நகைச்சுவைக்கு மட்டுமேடா சுதர்சன் இன்னம்மோ போடா சுதர்சன் 🤩😍🤩
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 தெரிந்து அறிந்து கொள்வோம்👈
👉 பேய் ஆவி குறித்த தகவல்கள் 👈
1.பேய்கள் உறங்குவதில்லை தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்...!!
2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும் எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன...!!
3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும் உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்...!!
4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும்...!!
5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்...!!
6 பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவர்கள்தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்...!!
7 பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்...!!
8 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும் சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்...!!
9 நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்...!!
10 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது எப்பவுமே கோவில்கள் சர்ச்சுகள் மசூதிகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்...!!
11 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு ஆனால் உணர (sense) முடியாது...!!
12 பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்...!!
13 பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது ஆனால் ஒருவன் தன்னை தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு...!!
14 பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும் கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்...!!
15 பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்...!!
16 பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்...!!
17 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு...!!
18 பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும் மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்...!!
குறிப்பு :
இவை முற்றிலும் உண்மையின் அடிப்படையில் ஆராய்ந்து கண்டறியபட்ட உண்மை தான் இதை படித்த (ஆண்கள் பெண்கள்)
ஒரு பயபுள்ளைகளும் தூங்க கூடாது...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
☀️ வெயில் ☀️
வெயில்
ஒரு அடாவடிக் காரன்தான்
ஆனால் நல்லது குளிர் பனி மழை தென்றல் போல் வெயிலுக்கு யாரும்
கவிதை செய்யவதில்லை காதலர்களால் பேற்றப்படுவதில்லை அவர்கள் ஊடல் காலங்கள் போல...!!
வெயில்
அதிகாலையில் கொஞ்சமும்
நன்பகலில் கோபமாகவும்
பின் மாலையிலிருந்து
கொஞ்சமென களவாடிக் கொள்கிறது...!!
வெயில்
தினந்தோரும் வெப்பத்தை
மாற்றிக் கொண்டிருக்கும்
ஒரு விளையாட்டுச் சிறுவனின்
வேடிக்கை பொய்களைப் போல...!!
வெயில்
கத்திரி வெய்யில்
கண்டிப்பான தகப்பனைப் போல
அதிகாரம் தூள் பறக்கும்
அடங்கித்தான் போக வேண்டும் நாம்...!!
வெயில்
மழை காலங்களில்
நாம் அலட்சியப் படுத்தும்
நீரின் ஒவ்வொரு துளியின்
அவசியத்தையும் வெயிலே உணர்த்துகிறது அது...!!
வெயில்
வெயில் நல்லது
கண்டிப்பான தகப்பனுக்குத்
தெரியாமல் பிள்ளைக்கு சகாயம் செய்யும் தாயைப் போல...!!
குறிப்பு :
வெயில்
இன்று அடிக்கும் வெயில் நமக்கு மிகவும் நல்லது வெயில் நமக்கு இன்றியமையாத ஒன்று வெயில் (கதிரவனை) வணங்குவோம் வந்து போன கொரானாவை போல இனி ஏதேனும் ஒரு வைரஸ் உருவாக்கினாலும் அதை அழிக்கும் வல்லமை இந்த வெயிலுக்கு (கதிரவனுக்கு) உண்டு என்பதை மறக்கவேண்டாம்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜 🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 நான் நானாக இருக்கிறேன் 👈
நான் நானாக இருக்கிறேன்
தங்கம் விலை அதிகம்தான்
தகரம் மலிவு தான்
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது
அதனால் தகரம் மட்டமில்லை
தங்கமும் உயர்ந்ததில்லை
எனவே நான் நானாக இருக்கிறேன்
கங்கை நீர் புனிதம் தான்
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன
கிணறாகயிருந்தால் என்ன
நான் நானாக இருக்கிறேன்
காகம் மயில் போல் அழகில்லை தான்
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான்
நான் நானாக இருக்கிறேன்
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான்
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான்
நான் நானாக இருக்கிறேன்
பட்டு போல் பருத்தி இல்லை தான்
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான்
நான் நானாக இருக்கிறேன்
ஆகாசம் போல் பூமி இல்லைதான்
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான்
நான் நானாக இருக்கிறேன்
நேற்று போல் இன்றில்லை
இன்று போல் நாளையில்லை
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான்
எனவே நான் நானாக இருக்கிறேன்
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை
அதில் பாவம் ஏதுமில்லை
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை
என்னை உரசிப் பார்
என்னை சரி செய்து கொண்டே வா
நான் நானாக இருக்கிறேன்
உலகம் ஒரு நாள்
என்னைப் போல் வாழ ஆசைப்படும்
நான் நானாக இருக்கிறேன்
உலகம் ஒரு நாள்
என்னை உதாரணமாகக் கொள்ளும்
நான் நானாக இருக்கிறேன்
உலகம் ஒரு நாள்
என்னைப் பாடமாக ஏற்கும்
நான் நானாக இருக்கிறேன்
உலகம் ஒரு நாள்
என் வழி நடக்கும்
நான் நானாகவே இருக்கிறேன்
உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது எனவே தான் அது நம் கண்ணீர்லும் இருக்கிறது கடலிலும் இருக்கிறது...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 ஒருவர் சார் கல்வி பெரிசா செல்வம் பெரிசா வீரம் பெரிசா 👈
👍 அறிவு தான் பெருசு புரிந்துக்கொள் 👍
எப்படி :
உன் பாக்கெட்ல ஒரு பத்து பைசாவாச்சும் இருக்கா...!!
நூறு ரூபாயே இருக்கு கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்...!!
ஏன்யா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா...!!
சார் வார்த்தையை அளந்து பேசுங்க அப்புறம் நானும் திருப்பிக் கேப்பேன் தாங்க மாட்டீங்க...!!
பாத்தியா காசு இருக்கான்னு கேட்டப்ப வராத கோபம் அறிவிருக்கான்னு கேட்டதும் எவ்வளவு வந்துச்சு...!!
இப்ப சொல்லு கல்வி பெரிசா செல்வம் பெரிசா வீரம் பெரிசா (அறிவு தான் பெருசு) புரிந்துக்கொள் நண்பா...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘
#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 தமிழ் + நான் = தமிழன் 👈
💘என் தமிழிடம் நான் கேட்டேன்💘
நான் கேட்டேன்:
உனக்கு என்னிடம் பிடித்தது எவை
தமிழாக (நீயா)
பொருளாகவா
வார்த்தைகளாகவா
வடிவங்களாகவா
இலக்கணமாகவா
உட்கருவாகவா
எழுத்துக்களாகவா
எண்ணங்களாகவா
கருத்துக்களாகவா
உணர்வுகளாகவா
வலிகளாகவா
ரணங்களாகவா
மருந்தாகவா
என் எழுத்துகளில் புகுந்த உனக்கு
எதுவாக என்னை பிடித்தது சொல் என்றேன்...!!
தமிழ் கூறியது:
இவை எல்லாம் சேர்ந்த
உன்னில் கலந்து
நான் உன்
உயிராகிப் போனேன்
காதலாய்
உன்னிடம்
உன்னிடம் என்னை
பிரித்துப்பார்க்க
முடியவில்லை தெரியவில்லை
என்றது...!!
நான்:
அன்பே ஆருயிரே என்னுயிரே என்னவளே வா என்னுடன் இன்னும் நாம் இருவரும் இணைந்து பல கவிதைகள் பாடல்கள் காவியங்கள் படைப்போம் என்றேன்...!!
தமிழ்:
உன் சம்மதம் என் சுவாசம் உன் எழுத்துக்கள் என் உயிர் உன் உடலே என் பெயர் (தமிழ்) என்றது...!!
குறிப்பு:
என்னையும் என் தமிழையும் போற்றி வாசிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நானும் என் தமிழும் இணைந்து கைகூப்பி வணங்கிக் கொள்கிறோம்...!!
இங்ஙனம்:
நானும் என் தமிழும்
குறிப்பு:
உங்களுக்கு விருப்பம் இருந்தால் விரும்பினால் இந்த பதிவை அனைவருமே பகிர்ந்துக் கொள்ளலாம்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💐 நேற்று உழைப்பாளர் தினம் அனைவருக்கும் உழைப்பாளர் தின #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
நல்வாழ்த்துக்கள் 💐
முதலாளி யார் தொழிலாளி யார்
வேலை செய்தவர்களின் வியர்வை உணரும் முன் கூலியைக் கொடுப்பவனே
உண்மையான முதலாளி...!!
வாங்கும் கூலிக்கு தகுந்த உழைப்பைக் கொடுப்பவனே உண்மைத் தொழிலாளி...!!
தொழிலாளி போல தானும் உழைக்கத் தயங்காத முதலாளி என்றும் தோல்வி காணமாட்டார்...!!
முதல் தொழிலாளியாக முதலாளி இருக்க வேண்டும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘


