ஏடு தந்தானடி தில்லையிலே
அதைப் பாடவந்தேன் அவன் எல்லையிலே
இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட
ராஜராஜ சோழன் திரைப்படத்தில் தேவாரப் பாடல்களின் பெருமையைக் கூறும் இந்தப் பாடலை எஸ்.வரலட்சுமியின் குரலில் எல்லோரும் கேட்டிருப்போம்.
பழந்தமிழ் தெய்வீகப்பாடல்கள் என்றால் முதலில் தமிழர்தம் நாவில் வருவது தேவாரம் என்ற சொல்தான்.. 'நாவிற்கினியது தேவாரம்' என்போர் பெரியோர். ’நல்லோர் நாவில் நவில்வது தேவாரமே’ என்ற வாசகத்தை தென்னாட்டில் சில சிவன் கோவில்களில் எழுதி வைத்திருப்பதைக் காணலாம். தேவாரப்பாடல் எல்லாமே ‘பண்ணோடு’ கிடைத்திருப்பதால் இசையோடு கலந்த தேவாரப்பாடல்களே தமிழகத்தின் ஆதி இசைப்பாடல் என்று கூட சொல்லலாம். ஒருமுறை திருவானைக்கா ஜம்புகேசுவரர் சன்னிதியில் ஒரு பெண்மணி தனியாக ஒரு மூலையில் கண்ணீர் பெருக தேவாரம் பாடிக்கொண்டு இருந்ததை நெகிழ்ச்சியாகப் பார்த்ததுண்டு. தேவாரம் பாடும்போதே அதன் பொருளை உணர்ந்துகொண்டு பாடினோமேயானால் இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான கட்டங்களை நாமும் அனுபவிப்போம். தேவாரப் பாடல்களில் பல பாடல்கள் இன்னின்ன பலன்களைத் தருகின்றன என்று பட்டியலே இடலாம். தமிழகத்தில் பலர் இல்லத் திருமணங்களில் இப்படிப் பலன் தரக்கூடிய தேவாரப் பாடல்கள் சிறு சிறு புத்தகங்களாக அச்சடிக்கப்பட்டு திருமணத்தில் பங்கு பெறுவோருக்கு இலவசமாகத் தருவதைப் பார்த்திருக்கிறோம். #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎬 சினிமா