ShareChat
click to see wallet page

#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 9. ஆகாசப் பேறு* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்) திருமூலரால் அருளப்பட்ட சைவ சித்தாந்தத்தின் உச்சகட்ட ஞான நிலை, குருமட தரிசனம், பஞ்சாக்கர மந்திரங்கள், சிவனின் நடனங்கள், மற்றும் சமாதி நிலை பற்றிப் பேசுகிறது. இது ஆத்மா சிவத்தோடு கலக்கும் பரமானந்த நிலையையும், மெய்ஞான அனுபவங்களையும், பிரணவ மந்திரத்தின் நுட்பங்களையும் விளக்கும் உயரிய பகுதியாகும்.* *இந்த அதிகாரம் ஆன்மா பரவெளியாகிய சிதாகாசத்தில் (ஞான ஆகாயம்) இரண்டறக் கலந்து பெறும் பேரின்ப நிலையை விளக்குகிறது.* *சிதாகாச அனுபவம் : உள்ளத்துள்ளே 'ஓம்' எனும் பிரணவமாக விளங்கும் ஈசனை உணர்வதே ஆகாசப் பேறு.* *ஈசனின் இருப்பிடம் : இறைவன் பேரண்டமாகவும், அண்டங்களுக்கு அப்பால் உள்ள எல்லையற்ற வெளியாகவும் (சிதாகாசம்) விளங்குகிறான்.* *ஞான ஒளி : சிற்றறிவானது பேரறிவான அகண்ட ஒளியுடன் (அறிவுக்கு அறிவாய்) ஒன்றுபடுவதை இது குறிக்கிறது.* பாடல் வரிகள் : *9. ஆகாசப் பேறு* 2804 உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 1 2805 பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 2 2806 அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே. 3 2807 பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 4 2808 அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும் பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும் அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 5 2809 ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம் ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 6 2810 உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது குயில்கொண்ட பேதை குலாவி உலாவி வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 7 2811 நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி நணுகிய மின்னொளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே. 8 2812 புறத்துளா காசம் புவனம் உலகம் அகத்துளா காசம்எம் ஆதி அறிவு சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி சகத்துளா காசம் தானம்ச மாதியே. 9 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

605 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்