ShareChat
click to see wallet page

வா தோழா வா இப்படி வந்து உட்கார்... இது ஒரு புலம்பல் கவிதை... துயரத்தின் எல்லையை நீ சந்தித்ததில்லை என்று தான் நினைக்கிறேன்... சந்தித்து இருந்தால் நீ இப்படி சொல்லி இருக்க மாட்டாய்... கண்ணின் மையையும் வெளிச்சம் என்றாக்கும் இருட்டுக்குள் ஓர் இரவு வாழ்ந்திருக்கிறாயா நீ..? துடியாய் துடித்து சுக்கு நூறாய் சிதறியழியும் இதயத்தை வாரி அள்ளிக்கொண்டு திசை தெரியாமல் ஓடியிருக்கிறாயா... எங்கு ஓடியும் எந்த வழியும் தெரியாமல் விழுந்து புரண்டு வெடித்து வெடித்து கதறியிருக்கிறாயா நீ... ஒரு சில்லறையை சுண்டும் போது கூட தலையா பூவா என்ற எண்ணம் நமக்கு வெகு தூரத்திற்கு முன்னமேயே ஓடும்... ஒரு மரண தோல்வியின் எண்ண மின்னல்கள் எத்தனை திசையில் பாயும் என்று உனக்கு தெரியுமா... ஆற அமர்ந்து கதை கேட்பவர்களுக்கு நரக நெருப்பின் வேதனை தெரியாது... புலம்பலுக்கு இது தான் என்று நிர்ணயிக்கப்பட்ட திசை என்று ஒன்றும் கிடையாது... வா தோழா வா.. வழி தெரியாத வலி நிறைந்த வாழ்க்கையையே வாழ்ந்து தான் பார்க்கணும் சாதிக்கணும்...! S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖

4.5K ने देखा
7 दिन पहले