ஓம் நமசிவாய 🙏
கண்கள் இரண்டும்
அவன் கழல் கண்டு
களிப்பன ஆகாதே
காரிகையார்கள்
தம் வாழ்வில் என் வாழ்வு
கடைபடும் ஆகாதே
மண்களில் வந்து
பிறந்திடுமாறு
மறந்திடும் ஆகாதே
மால் அறியா
மலர் பாதம் இரண்டும்
வணங்குதும் ஆகாதே
பண் களி கூர் தரு
பாடலொடு ஆடல்
பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான்
படை ஆட்சிகள்
பாடுதும் ஆகாதே
விண் களி கூர்வது
ஓர் வேதகம் வந்து
வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய
கானவன் வந்து
வெளிப்படும் ஆயிடிலே
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶