ShareChat
click to see wallet page

#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பெருந்தேவபாணி* *நக்கீரதேவ நாயனார் அருளிய பெருந்தேவபாணி என்பது சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான சிற்றிலக்கிய நூலாகும். சிவபெருமானின் தோற்றம், வீரம், அருள்சுரக்கும் பண்புகள் மற்றும் அவனது பல்வேறு வடிவங்களை (சூலபாணி, நீலகண்டன், நெற்றிக்கண்ணன்) விவரித்து போற்றும் வகையில் இதன் பாடல்கள் அமைந்துள்ளன. 'தேவபாணி' என்றால் கடவுளைப் போற்றிப் பாடும் வாழ்த்துப் பாடல் என்று பொருள். தேவர்களுக்கெல்லாம் தேவனான 'பெருந்தேவன்' ஆகிய சிவபெருமானின் பெருமைகளைத் துதித்துப் பாடுவதால் இது 'பெருந்தேவபாணி' என அழைக்கப்படுகிறது.* பாடல் வரிகள் : *நக்கீரதேவ நாயனார் அருளிய பெருந்தேவபாணி* சூல பாணியை சுடர்தரு வடிவனை நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை பால்வெண் ணீற்றனை பரம யோகியை காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை கோல மேனியை கொக்கரைப் பாடலை வேலுடைக் கையனை விண்தோய் முடியனை ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை தேவ தேவனை திருமறு மார்பனை கால மாகிய கடிகமழ் தாரனை வேத கீதனை வெண்தலை ஏந்தியை பாவ நாசனை பரமேச் சுவரனை கீதம் பாடியை கிளர்பொறி அரவனை போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை சாதி வானவர் தம்பெரு மான்தனை வேத விச்சையை விடையுடை அண்ணலை ஓத வண்ணனை உலகத் தொருவனை நாத னாகிய நன்னெறிப் பொருளினை மாலை தானெரி மயானத் தாடியை வேலை நஞ்சினை மிகஅமு தாக்கியை வேத வேள்வியை விண்ணவர் தலைவனை ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை ஆயிர நூறுக் கறிவரி யானை பேயுருவு தந்த பிறையணி சடையனை மாசறு சோதியை மலைமகள் கொழுநனை கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச் சீரிய அடியாற் செற்ற ருள் சிவனை பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை பீடுடை யாற்றை பிராணி தலைவனை நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை ஈசனை இறைவனை ஈறில் பெருமையை நேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை தாதணி மலரனை தருமனை பிரமனை காதணி குழையனை களிற்றின் உரியனை சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை வித்தக விதியனை தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை பிரமன் பெருந்தலை நிறைய தாகக் கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும் உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த ஆர்வமுண் நஞ்சம் அமுத மாக்கினை ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை திக்கமர் தேவருந் திருந்தாச் செய்கைத் தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை வேதமும் நீயே வேள்வியும் நீயே நீதியும் நீயே நிமலன் நீயே புண்ணியம் நீயே புனிதன் நீயே பண்ணியல் நீயே பழம்பொருள் நீயே ஊழியும் நீயே உலகமும் நீயே வாழியும் நீயே வரதனும் நீயே தேவரும் நீயே தீர்த்தமும் நீயே மூவரும் நீயே முன்னெறி நீயே மால்வரை நீயே மறிகடல் நீயே இன்பமும் நீயே துன்பமும் நீயே தாயும் நீயே தந்தையும் நீயே விண்முதற் பூதம் ஐந்தவை நீயே புத்தியும் நீயே முத்தியும் நீயே சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே, அதனால் கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ தறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன் ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ்நின்று வேண்டு மதுவினி வேண்டுவன் விரைந்தே. வெண்பா விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல் சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதி தேவனே ஆற்றவுநீ செய்யும் அருள். திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

2.4K காட்சிகள்
11 நாட்களுக்கு முன்