#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - திருவேரகம்.*
*நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படையில் நான்காம் படைவீடாகத் திகழ்வது திருவேரகம் ஆகும். இது சுவாமிமலை என்று தற்போது அழைக்கப்படுகிறது. தந்தை சிவபெருமானுக்கு முருகன் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த தலம் இதுவாகும். அந்தணர்கள் முறைப்படி வேள்விகள் செய்து முருகனை வணங்கும் இடமாகத் திருவேரகம் திகழ்கிறது.*
பாடல் வரிகள் :
*பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - திருவேரகம்*
இருமூன்று எய்திய
இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய
பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி
இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய
அறன்நவில் கொள்கை (180)
மூன்றுவகைக் குறித்த
முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர்
பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட
மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம்
புலர உடீஇ
உச்சிக் கூப்பிய
கையினர் தற்புகழ்ந்து (185)
ஆறெழுத் தடக்கிய
அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கின்
நவிலப் பாடி,
விரையுறு நறுமலர்
ஏந்திப் பெரிதுவந்து
ஏரகத் துறைதலும் உரியன்,
அதா அன்று 4
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏