Arab Tamil Daily
571 views
18 days ago
#BreakingNews || துபாய் கடற்கரையில் வைத்து ஈரானிய ட்ரோன்கள் 'அல் சல்மி' என்ற மிகப்பெரிய குவைத்தின் எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது: துபாய் துறைமுகம் அருகே வைத்து குவைத்தின் மிகப்பெரிய 'அல் சல்மி'(Al Salmi) என்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரானிய ட்ரோன்கள் குறிவைத்து பல தாக்குதல் நடத்தியதில் கப்பலின் வெளிப்புறப் பகுதியில் சேதம் ஏற்பட்டதுடன், தீ விபத்தும் மற்றும் எண்ணெய் கசிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய கப்பலான(VLCC) 'அல் சல்மி' மீது இன்று மார்ச்-31,2026 செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 12:10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பெட்ரோலியக் கழகம்(KPC) அறிவித்துள்ளது. துபாய் கடல் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 'அல் சல்மி' கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், அந்தக் கப்பல் முழுமையாக எண்ணெய் நிரப்பப்பட்ட நிலையில் இருந்ததாக KPC வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் விளைவாக,கப்பலின் வெளிப்புறப் பகுதி(Hull) சேதமடைந்ததுடன், கப்பலுக்குள் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாகவும்,சுற்றியுள்ள கடல் நீரில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது என்றும் KPC மேலும் தெரிவித்துள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️