RamaswamyAnnamali
877 views
#ஆன்மீக #பத்தி #தெரிந்து கொள்வோம் கும்பாபிஷேகம், சபரிமலையில் திரு ஆபரண பெட்டி ஊர்வலம், திருச்செந்தூர் சூரசம்ஹாரம் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளின் போது வானத்தில் கருடன் வட்டமிடுகிறது. இதற்கான காரணத்தை கேட்டால், கூட்டம் எங்கு அதிகம் இருக்கிறதோ, அங்கு கருடன் வட்டம் இடுவது வழக்கம் தானே என்பார்கள் பகுத்தறிவுவாதிகள். ஆனால் கருடாழ்வாருக்கு ஒரு முக்கிய குணம் உண்டு. இது போன்ற விழாக்கள் நடக்கும் இடங்களில் வேத மந்திரம் ஒலிக்கும். எங்கு வேத மந்திரம் ஒலிக்கிறதோ, அந்த இடத்தைத் தேடி கருடாழ்வார் வந்துவிடுவார். அவரது பார்வை பட்டாலே சனி தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் இன்னும் எந்த தோஷமாக இருந்தாலும் நம்மை விட்டு பறந்து விடும். இதனால் தான் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஏராளமாக பக்தர் கூட்டம் கூடுகிறது. ஆனால், இக்காலத்தில் இது போன்ற விழாக்களில், கட்டுப்பாடு குறைவாக இருக்கிறது. கூட்டத்தில் மற்றவர்களை இடித்துக்கொண்டு நிற்பது, சத்தம் போடுவது, குடும்ப கதை பேசுவது, மற்றவர்கள் என்ன டிரெஸ் அணிந்து வந்திருக்கிறார்கள் என நோட்டமிடுவது என கவனிச் சிதறல் ஏற்படுகிறது. இப்படி இருந்தால் கடவுள் நமது பக்தியை எப்படி ஏற்பார்? சிலர் வீட்டுக்கு போனதும், ஏதாவது சோதனை வந்து விட்டால் போதும். உடனே கடவுளை நோக்கி, "நான் உன்னை வணங்க வந்தேனே! என்னை ஏன் சோதிக்கிறாய்?"என்று புலம்ப ஆரம்பித்து விடுவோம். கோவிலுக்கு செல்வது இறைவனை மனப்பூர்வமாக வணங்குவதற்கு மட்டுமே. நாம் எந்த வேலைக்கு சென்றோமோ, அந்த வேலையில் கவனம் செலுத்தி இருந்தால், இது போன்ற சோதனைகள் வந்திருக்காது. இனியாவது, இது போன்ற விழாக்களுக்கு செல்பவர்கள், தன்னிலை மறந்து இறைவனை வணங்க வேண்டுமே தவிர பக்திக்கு புறம்பான காரியங்களில் இறங்கக்கூடாது.