இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த கிராமவாசி
ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் இது உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்’ என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர், ‘நான் தூய்மை பெற்றுவிடுவேனா? இது நடக்கப் போவது இல்லை. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கிற சூடாகித் தகிக்கின்ற காய்ச்சல் ஆகும். இது அம் முதியவரை மண்ணறைகளைச் சந்திக்கவைக்கும் வரை (ஓயாது)’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், ஆம் நீர் நினைத்தது போன்றே நடக்கும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி)
(புகாரி: 5662)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️