"அல்ஹம்துலில்லாஹ் ரமளானின் கடைசி பத்து இரவுகளான ஒற்றைப்படை இரவுகளில் முதல் ஒற்றைப்படை இரவை அடையக்கூடிய பாக்கியத்தை வல்ல ரஹ்மான் உங்களுக்கும் எங்களுக்கும் தந்துள்ளான் அல்லாஹ் அக்பர் ஆயிரம் மாதங்கள் நம்மால் விழித்திருந்து அமல் செய்ய முடியுமா என்றால் கண்டிப்பாக இயலாத ஒன்று ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆயிரம் மாதம் அமல் செய்யும் நன்மைகளை ஒரே இரவில் வாரி வழங்கியுள்ளான் ஸுப்ஹானல்லாஹ் எனவே கவனமாக இந்த ஒற்றைப்படை இரவுகளை பயன்படுத்திக் கொள்வோம் இன் ஷா அல்லாஹ் எத்தனை எத்தனையோ வீணாக உலகக் காரியங்களுக்காக வீணுக்காக விழித்திருக்கிறோம் தீனுக்காக இந்த கடைசி இரவுகளில் விழுந்திருந்து உயிர்ப்பிப்போம் இத்தனை நாட்களில் காட்டாத ஈடுபாடுகளை வணக்க வழிபாடுகளில இந்தப் இறுதிப் பத்து நாட்களில் ஈடுபட்டுக்கொள்வோம் இன் ஷா அல்லாஹ் அந்த வாய்ப்பை வல்ல ரஹ்மான் ரப்புல் இஸ்ஸத் உங்களுக்கும் எங்களுக்கும் உலக முஸ்லிம்களுக்கும் நஸீபாக்கித் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் ❤️✨💫
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ
நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்.
(அல்குர்ஆன் : 97:1)
وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா?
(அல்குர்ஆன் : 97:2)
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 97:3)
تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 97:4)
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
(அல்குர்ஆன் : 97:5)
#🕌லைலத்துல் கத்ர்🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் ##ramadanreminder