திருநீற்றுச் சுவடு
622 views
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #பக்தி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 கார்த்திகை திருநாள்.. *************************************************** வைணவத்திலும் கார்த்திகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். காரணம் திருமங்கை ஆழ்வார் ஜன்ம நட்சத்திரம் கார்த்திகை. பெரும்பாலான பெருமாள் கோயில் களில் திருமங்கையாழ்வார் சன்னதி இருக்கும். அங்கே இன்று திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும். திருமங்கையாழ்வாரின் வேறு பெயர்கள் ---------------------------------------------------------------------------------- ஆழ்வார் பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் அறியப்பட்டார். திருமங்கையாழ்வார் ஆன்மிகப் பணிகள் ---------------------------------------------------------------------------------- திவ்யதேச யாத்திரை திருமங்கை ஆழ்வார் பல வைணைவ தலங்களுக்கு பயணம் சென்று தலத்தையும், அங்கு கோவில் கொண்ட பெருமாளையும் மங்களாசாசனம் ( போற்றிப் பாடுதல்) செய்தார். இமயமலையிலுள்ள பத்ரிநாத், நைமிசாரண்யம் தொடங்கி திருக்குறுங்குடி வரை 86 திவ்ய தேசங்களைப் பாடியிருக்கிறார். பல சிறிய தலங்களின் அழகிய தமிழ்ப்பெயர்கள் அவரது பாசுரங்களில் காணக் கிடைக்கின்றன (திருக்காவளம்பாடி, திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளியம்பாடி, திருப்புள்ளம்பூதங்குடி, திருநாங்கூர் செம்பொன்சேய்கோயில், திருநந்திபுரவிண்ணகரம்). கேரள மாநிலத்தின் திருவெள்ளா தலத்தை திருவல்லவாழ் என்று குறிப்பிடுகிறார். திருநிறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம் போன்ற தலங்களை அதிகம் பாடியிருக்கிறார். திருவரங்கத்தில் திருப்பணிகள் ---------------------------------------------------------------------------------- திவ்ய தேசப் பயணத்திற்குப்பின் திருவரங்கம் வந்து அங்குள்ள பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளனுக்கும் விமானம், மண்டபம், திருத்தளிகை, திருமதில், கோபுரம் முதலியவற்றை அமைத்தார். தொண்டரடிப்பொடி ஆழ்வார், மலர் பறிக்கும் தமது ஆயுதத்துக்கு திருமங்கை மன்னருடைய பெயர்களுள் ஒன்றான அருள்மாரி என்று பெயரிட்டார். திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த வைகுண்ட ஏகாதசித் திருவிழாவையும் ராப்பத்து உற்சவத்தையும் ஏற்படுத்தினார். ராப்பத்து உற்சவத்தில், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்களை இசையுடன் ஓதி பத்து நாட்கள் விழா எடுத்தார். அதற்காக தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு ஊர்வலமாகக் கொணர்ந்து மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடினார். பின்னர் ஸ்ரீரங்கத்திலேயே ஆழ்வார்களுக்கு விக்கிரகங்கள் அமைத்துக் கோயில் எழுப்பப்பட்டது. திருவாலி நகரத்தில் திருமங்கையாழ்வார்-குமுதவல்லி க்கு தனி சன்னதி உள்ளது துணையுடன் கோவில் கொண்ட ஒரே ஆழ்வார் திருமங்கையாழ்வார். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.. ➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️