திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥

5K Posts • 11M views
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ####motivationalquotes வேலுண்டு வினையில்லை🌸🙏.. 🕉️⚔️முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?🤔🌟.. தெரிஞ்சிக்கலாம் வாங்க.!📖🌈 🔱"சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை" என்றும் "வேலுண்டு வினையில்லை" என்றெல்லாம் கூறுவார்கள்!! 🔱நம் வாழ்க்கையில் அனுதினமும் ஏதேனும் ஒரு பிரச்சனைகளையும், அதனால் மனக்கவலைகளையும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். இந்தப் பிரச்சனைகளும், கவலைகளும் தீர செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கினால் போதும். 🔱நம்முடைய வேண்டுதல்கள் உடனடியாக பலிக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற சிறப்பான பரிகாரங்கள் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 🔱நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம். 🔱முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது. 🔱'வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை' என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல்முருகன் என்ற பெயரும் உண்டு. 🔱சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க தேவி பார்வதி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனை கொண்டு சூரனை வதைக்க சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்திவேல் என்ற பெயரும் உண்டு. முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு? 🔱'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று பொருள்படும். 🔱பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட்சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவமாக உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும். 🔱முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்' என்ற பெயரும் உண்டு. 🔱வேல் உணர்த்துவது என்னவென்றால்... வேலின் அடிப்பகுதி ஆழமாகவும், இடைப்பகுதி விசாலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் திகழ்கிறது. வேலைப்போன்று அறிவானது கூர்மையானதாகவும், அகன்றும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது. வேல் வழிபாடு : 🔱முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். 🔱வேல் வழிபாட்டின் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வடிவமே சக்திவேல் வழிபாடு. சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பராசக்தியையும், தனயன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும். 🔱மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு 'ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க' என்று சொன்னால்; மனம் லேசாகி விடும். 🔱வேல் வைத்திருப்பவர்கள் முறையாக பூஜைகள், அபிஷேகங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் பெரிய வேல் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உள்ளங்கையை விட சிறிய அளவிலான வேல் சக்தி குறைவானது என்பதால் அதில் எந்த தோஷமும் ஏற்படுவது இல்லை. 🔱முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மேலும் ஒவ்வொரு மாதம் வரும் கிருத்திகை, சஷ்டி திதிகளில் முருகனையும், முருகனுடைய வேலையும் வழிபாடு செய்தால் சகல சம்பத்துக்களும், சௌபாக்கியங்களும் உண்டாகும். 🔱பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பஞ்சலோக வேல் விற்பனைக்கு இருக்கும். தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை என்று எந்த உலோகத்திலும் வேல் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அப்படி வாங்கும் பொழுது உங்கள் கைகளால் வாங்காமல் வயதில் மூத்தவர்களை வாங்கிக் கொடுக்கச் சொல்லி அவர்கள் கைகளால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். 🔱வேல் வழிபாடு செய்பவர்கள் பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு சிவப்பு பட்டு துணி விரித்து அதில் வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் பச்சரிசி நிரப்பி வேலை அதில் சொருகி வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை வேல் பூஜை செய்யும் பொழுதும் காய்ச்சாத பசும் பால், பன்னீர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் சாதாரண தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். 🔱பின் வேல் விருத்தம் பாடலை பாடிக்கொண்டு பூஜை செய்வது இரட்டிப்பு பலன்களை கொடுக்கும். வேல் விருத்தம் முருகன் கையில் வைத்திருக்கும் வேலை பற்றி புகழ்ந்து பாடுவது ஆகும். அருணகிரிநாதர் அருளிய வேல் விருத்தம் முதல் தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. இப்பாடலை பாடி வேலுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி அபிஷேகம் செய்து, அவல், பொரி, கற்கண்டு நைவேத்தியம் வைத்து முருக மந்திரங்களை உச்சரித்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சகல செல்வங்களையும் வாரி வழங்கக்கூடியதாக அமையும். வேலை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் : 🙏காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும். 🙏வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி, எடுத்த காரியங்கள் வெற்றியடையும். 🙏கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும். 🙏வியாபாரத்தில் லாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். 🙏சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். 🙏சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும். 🙏கடன் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும். 🙏வெற்றிவேல், வீரவேல் என முழங்கும் இடத்தில் வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும். 🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏
32 likes
1 comment 30 shares
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #💎ராசிக்கற்கள் பரிகாரங்கள்... கோவிலில் பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் கொடுக்காதீர்கள் கோயிலில் போய் நீங்கள் சம்பாதித்து வருவது மகா புண்ணியம் அதை நீங்கள் வெளியே வந்தவுடன் சனிபகவான் அம்சத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் வாங்குவதற்கு சரியாக காத்துக் கொண்டு இருப்பார்கள் உங்களுடைய புண்ணியம் அவர்களுக்கு போய் விடும் நீங்கள் கொடுக்கும் பிச்சையினால் இது செய்ய கூடாது உணவுக்காக பிச்சை எடுத்தது தான் ஆதிகாலம் தொட்டு இருந்தது. நீங்கள் யாருக்கும் பிச்சையாக முடிந்தவரையில் பணத்தை கொடுத்து ஊக்கப்படுத்த கூடாது உண்மையிலேயே அவர்கள் உங்களுடைய பிச்சையை தொழிலாக செய்யும் பொழுது நீங்கள் ஒரு ஊதாரியை ஊக்குவிக்கின்றீர்கள் இது மகா பாவம் புண்ணியத்தில் சேராது அதே போல பணம் பிச்சை இடும் வழக்கம் நம் சோம்பேறித்தனத்தாலும் அவர்களுடைய பேராசையாலும வந்தது பணத்தை பிச்சை போடுபவர்களுக்கு அந்த பிச்சைக்காரர்கள் நிலைப்படி தரித்திரம் கூட பிடிக்கும் ஒரு பிச்சைக்காரனுக்கு தேவை உணவு இங்கே அந்த விஷயமே நிறைய பேருக்கு புரிவதில்லை கோயில் உள்ளே நுழையும் முன்பே கொடுத்து விட்டு நீங்கள் கை கால்களை கழுவி முகம் கழுவி விட்டு கோயில் உள்ளே செல்ல வேண்டும் பிச்சைக்காரர்கள் சனிபகவான் அம்சம்தான் முதலில் வருவார்கள் அதிலேயே விதவிதமான பிச்சைக்காரர்கள் இருக்கின்றார்கள் காவி உடை அணிந்து திருவோடு வைத்து பிச்சை எடுப்பவர்கள் சனி+கேது அம்சத்தில் வருவார்கள் இன்றைய காலகட்டத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்பவர்கள் அதிகம் உண்டு ஊனமாக இருப்பவர்கள் மாற்று திறனாளிகளுக்கு பிச்சை உணவுகள் கொடுங்கள் பணம் கொடுப்பதை முடிந்தளவுக்கு தவிர்க்க வேண்டும் ஒரு பிச்சைக்காரனை நீங்கள் ஊக்குவிக்கும் பொழுது உங்களுக்கும் தரித்திரத்தை பரிசளிப்பார்கள் பாத்திரம் அறிந்து பிச்சை ஈடு என்ற பழமொழி உண்டு அதாவது யாருக்கு பிச்சை அளிக்க வேண்டும் யாருக்கு அளிக்க கூடாது என்று முக்கியம் ஒரு ஏமாற்றுக்காரன் பிச்சை எடுத்து உங்களுடைய பணத்தை கொண்டு போய் டாஸ்மாக்கில் குடித்து அதனால் அவனுக்கு நோய் வந்தாலும் கூட நீங்கள் அதற்கு காரணமாக ஆகி விடுவீர்கள் தர்மம் வேறு தானம் வேறு பிச்சை வேறு இலவசம் வேறு உதவி வேறு ஓசியில் மங்களம் பாடுவது வேறு இதுவே நிறைய பேருக்கு புரியாது இந்தியர்களும் தமிழர்களும் நிறைய இந்த இலவசம் பிச்சை போன்ற விஷயங்களை அனுபவிக்க காரணம் சனிபகவான் தான். ஏனெனில் இந்தியா மகரம் இராசியில் வரும் மகரம் பத்தாம் பாவகத்தில் வரும் நீங்கள் கோயில்களுக்கு செல்வதால் புண்ணியங்கள் கிடைக்கும் புனித நதிகளில் நீராடினால் கிடைக்கும் அன்னதானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் நீங்கள் பணத்தை கொடுப்பதை காட்டிலும் ஒரு பொட்டலம் சாதம் வாங்கி கொடுங்கள் அவர்களுக்கு வயிற்றுக்கு பிச்சை எடுக்கின்றார்களா வருமானத்திற்கு எடுக்கின்றார்களா வாழ்க்கைக்கு எடுக்கின்றார்களா வசதிக்கு எடுக்கின்றார்களா பொழுதுபோக்குக்கு எடுக்கின்றார்களா இதை முதலில் தெரிந்து கொள்ளாமல் நீங்கள் பிச்சையளிக்க கூடாது ஆதிகாலத்தில் பிச்சை என்பது தானியங்கள் மட்டுமே வழங்கி வந்தனர் அதை அவர்கள் கொண்டு போய் சமைத்து சாப்பிட்டு வந்தார்கள் அதன்பிறகு அவர்களுக்கும் சோம்பேறித்தனம் மக்களும் சோறு குழம்பு போட ஆரம்பித்து அவர்களை வளர்த்து விட்டார்கள் அதன்பிறகு வீட்டில் ஏது மீதியானலும் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பது வழக்கம் நாளடைவில் காசு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் இதுதான் இன்றைய நிலைப்பாடு பணம் என்பது உங்களுடைய ஐசுவரியம் நாலு காசு சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து எத்தனை பேரிடம் என்னவெல்லாம் கேட்டு வாங்கி அதை வீட்டிற்கு கொண்டு வர பாடுபடுகின்றீர்கள் அந்த இலட்சுமியை பிச்சைக்காரனுக்கு கொடுக்க வேண்டும் என்று எந்த வேதத்தில் சாஸ்திரத்தில் விதியில் சொல்லப்படவில்லை பணக்காரர்கள் வாழும் நாடுகளை பாருங்கள் அங்கே பிச்சை எடுப்பது குற்றமாகும் சிங்கப்பூர் மாதிரியான நாடுகளில் பிச்சை எடுத்தாலும் பிச்சை போட்டாலும் சிறையில் அடைத்து விடுவார்கள் அல்லது அபராதம் விதிப்பார்கள் பரிகாரங்களுக்காக பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் கொடுத்து உதவுங்கள் ஆனாலும் அது உண்மையாக இருக்க வேண்டும் நடிப்பவர்களுக்கும் ஏமாற்றுபவர்களுக்கும் பிச்சை அளித்தல் பாவம் தான் தர்மம் என்பது நீங்களும் அந்த நபர்களிடம் எதையுமே எதிர்பார்க்காமல் செய்வது அவர்களும் உங்களை எதிர்பார்த்து காத்திருக்காமல் இரத்த சொந்தம் இல்லாதவர்களுக்கு செய்வது உங்களிடம் ஒருவர் வந்து கேட்டு பெற்றால் அது தர்மத்தில் சேராது தானம் அல்லது உதவியாகத் தான் இருக்கும் இதில் கீழ்த்தரமான செயல்பாடுகள் இலவசமாக எதையுமே பெற வேண்டும் என்று நினைப்பது தனக்கு கூட செலவுகள் செய்ய யோசிப்பது இப்படி நிறைய உள்ளது இவையெல்லாம் பிச்சைக்காரத்தனம்தான் இதனால் இப்படிப்பட்ட நபர்கள் கடைசி வரைக்கும் அப்படியேதான் இருப்பவர்கள் மாறவே மாறாது மாறவும் முடியாது பிச்சைக்காரத்தனம் இருந்தால் கண்டிப்பாக பணக்காரர்கள் ஆகவே முடியாது.
16 likes
11 shares
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 ###motivationalquotes #💪Motivational Quotes தேடித் தேடி சோர்வடைந்து* *விட்டீர்களா? இதோ உங்களுக்கான* ஒரு எளிய பரிகாரம் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும். செவ்வாய் ஹோரையில்: காலை 6-7 மணி, மதியம் 1-2 மணி, இரவு 8-9 மணி. 1. பித்தளைத் தட்டில் துவரம் பருப்பை பரப்பவும். 2. அதன் மேல் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றவும். 3. முருகனை மனதார நினைத்து பிரார்த்திக்கவும் 6 வாரங்கள் தொடர்ந்து வழிபடவும். விரைவில் நல்ல வேலை கிடைக்கும் திருச்சிற்றம்பலம் ஓம் சரவணபவ #✡️ஜோதிட பரிகாரங்கள்
14 likes
8 shares