🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃

2K Posts • 1M views
*நாளை_சனிக்கிழமை* *தேய்ய்பிறை* *அஷ்டமி* 🌺🙏🌹 பைரவரை_இப்படி_வழிபட்டால்_வீட்டில் நிம்மதியும்_செல்வமும்_சேரும்_ நாளை சித்திரை மாதம் சனிக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியும் வருகிறது. சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானையும், பைரவரையும் வழிபட இல்லத்தில் நிம்மதியும், சுபிட்சமும் உண்டாகும் என்பது நியதி. தேய்பிறை அஷ்டமி மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாளாகும். இந்நாளில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீர ஈசனை vதரிசனம் செய்து அவருக்கு அபிஷேகம் செய்வதற்கு உரிய அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலமும் சிறப்பான பலன்களை பெறலாம். மேலும் பஞ்ச எண்ணெய்களைக் கொண்டு பஞ்ச தீபங்களை ஏற்றி வழிபடுவது இன்னும் சிறப்பான பலன்களை கொடுக்கும். ☘️ உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி செல்வம் செழிக்க நாளை தேய்பிறை அஷ்டமியில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு பஞ்ச தீபத்தை ஏற்றி வழிபட்டு வரலாம். புதிதாக வாங்கிய ஐந்து sஅகல் விளக்குகள் கொண்டு செல்லுங்கள், அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று வகையான விளக்கு ஏற்றும் எண்ணெய் ஊற்றி வழிபட வேண்டும். வேப்ப எண்ணெய், விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான பசுநெய் இந்த ஐந்து எண்ணெய்கள் சேர்ந்தது தான் பஞ்ச தீப எண்ணெய் என்று கூறுவார்கள். *இதை தனித்தனியாக ஒவ்வொரு அகல் விளக்குகளில் ஊற்றி தீபமேற்றி* சிவ ஸ்தோத்திரங்களை வாசித்து விளக்கு ஏற்றி வழிபட்டு வர வேண்டும். ☘️ சொத்து தகராறு, நிலத்தகராறு போன்ற பிரச்சனைகளுக்கு தேங்காய் மூடியில் நெய் ஊற்றி சிகப்பு நிற இட்டு தீபம் ஏற்றி வழிபடலாம். மேலும் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடுவதற்கு சிறப்பான ஒரு நாளாகவும் கருதப்படுகிறது. வீட்டில் சொர்ணாகர்ஷண mபைரவர் படத்தை வைத்து அவருக்கு உரிய மந்திரங்களை ஜெபித்து, தயிர் சாதத்தை நிவேதனம் வைத்து தூப, தீப ஆராதனைகள் காண்பித்து வழிபட்டு வரலாம். ☘️ பைரவருக்கும் சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த நிறம் என்றால் அது சிவப்பு ஆகும் எனவே சிவப்பு நிற மலர்கள் கொண்டு இருவருக்கும் அர்ச்சனை செய்து இன்றைய நாளில் வழிபட்டால் சிறப்பான பலன்களை பெற்றுக் கொள்ளலாம். சிவன் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபட்டு வர எத்தகைய தடைகளும் அகன்று சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். மேலும் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளவும் வாய்ப்புகள் அமையும். ☘️ பைரவர் சன்னிதிக்குச் சென்று அங்கு செவ்வரளி மலர்களால் மாலை சாற்றி எள் தீபம் அல்லது மிளகு மூட்டை கட்டி மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் உங்களை சுற்றி இருக்கும் பகைவர்கள் தொல்லை ஒழியும். எம பயம் என்பது நீங்கும். எதையும் துணிச்சலுடன் முடிவெடுக்கக் கூடிய தைரியம் உண்டாகும். குடும்ப நிம்மதிக்கும், செல்வ செழிப்பை பெறவும் நாளை சித்திரை மாத சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானையும், பைரவர் சந்நிதிக்கு சென்று பைரவரையும் வழிபட்டு, வீட்டிற்கு வந்து சிவபார்வதி படம் மற்றும் சொர்ணாகர்ஷன பைரவர் படத்தை வைத்து தயிர் சாதம் நைவேத்தியம் செய்து முறையாக வழிபட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். 🙏ஓம் ஸ்ரீ சொர்ணாகர்ஷண அஷ்டபைரவாய காலபைரவாய நமோ நமஹ🙏 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #✡️தோஷ பரிகாரங்கள்
10 likes
15 shares
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #💥ஓம் ந ம சி வா ய💥 மனதை ஆட்டும் 'பாம்பாட்டி சித்தர்'! வரலாறு | "இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே!" மனித உடலின் நிலையாமையை இதைவிட எளிய தமிழில் யாராலும் விளக்கிவிட முடியாது. உலகத்து பாம்புகளை ஆட்டியவர், பின்னாளில் மனித மனதுக்குள் இருக்கும் குண்டலினி எனும் பாம்பை ஆட்டி சித்தர்களின் வரிசையில் உயர்ந்தவர் தான் "பாம்பாட்டிச் சித்தர்". பாம்பாட்டி சித்தர்? கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் காடுகளில் கொடிய பாம்புகளைப் பிடிப்பதும், அவற்றின் விஷத்தை எடுத்து விஷமுறிவு மருந்துகள் தயாரிப்பதும் இவருடைய தொழிலாக இருந்தது. கோவைக்கு அருகிலுள்ள மருதமலையில் விஷமுறிவு ஆய்வுக்கூடம் அமைத்து மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். சட்டைமுனி சித்தரின் சந்திப்பும் ஞானமும்: ஒருமுறை மருதமலையில் நவரத்தினப் பாம்பு (தலைப்பகுதியில் மாணிக்கம் கொண்ட பாம்பு) இருப்பதாகக் கேள்விப்பட்டு, அதைத் தேடி காட்டிற்குள் சென்றார். அங்கே திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பியபோது, பேரொளியுடன் சட்டைமுனி சித்தர் காட்சியளித்தார். "வெளியே திரியும் பாம்பைத் தேடாதே! உனக்குள்ளேயே உல்லாசத்தைத் தரும் 'குண்டலினி' என்ற பாம்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை விழித்தெழச் செய்" என்று உபதேசித்தார். அந்தப் பேரறிவை உணர்ந்த பாம்பாட்டியார், சட்டைமுனி சித்தரைத் தன் குருவாக ஏற்று தவம் செய்யத் தொடங்கினார். குண்டலினி யோகமும் சித்துகளும்: தொடர் யோக சாதனையால் இவருக்குக் குண்டலினி யோகம் கைகூடியது. அஷ்டமாசித்திகள் உள்ளிட்ட பல்வேறு வித்தைகளை கற்றறிந்தார். இவர் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையிலும் வல்லவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. ஆடுபாம்பே பாடல்களும் தத்துவமும்: வாழ்வின் நிலையாமை, உலக மாயை, உடலின் தன்மை ஆகியவற்றை எளிய தமிழில் பாடினார். தன் பாடல்களின் இறுதியில் "ஆடுபாம்பே" என்று முடித்து, எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வது போல, மனித மனதுக்குள் இருக்கும் குண்டலினிக்கு உபதேசம் செய்தார். 'சித்தாரூடம்' என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். ஜீவசமாதி: இவர் தவம் செய்த குகை மற்றும் சுயம்பு சிவலிங்கம் கோவை மருதமலை முருகர் கோவில் வளாகத்தில் இன்றும் பக்தர்களால் வழிபடப்படுகிறது. இவருடைய ஜீவசமாதி பீடங்கள் துவாரகை, மருதமலை, விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் கூறப்பட்டாலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மேற்குக் கோபுர வாசல் அருகேயுள்ள புளியங்குடி சாலையில் அமைந்துள்ள ஜீவசமாதி பீடம் மிக முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று இவருக்குக் குருபூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. உலகத்து மாயை என்னும் பாம்பை அடக்கி, நம் மனதை நல்வழிப்படுத்த இந்த சித்தர் பெருமானின் தத்துவங்களைச் சிந்திப்போம்!
12 likes
13 shares