திருநீற்றுச் சுவடு
561 views •
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏நந்தி பகவான் 🙏 இரண்டு
ஆன்மீக தகவல்கள் : 03
உயிரோட்டமுள்ள நந்தி:-
சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில்.
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.
ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான்.
சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான்.
சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது.
மனோரஞ்சிதம் மாலை....
மனோரஞ்சிதம் அரிதானது என்பதுடன், சுவாமி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது.
பூக்களுக்கான கவர்ச்சியான வண்ணம் இல்லாவிட்டாலும், தன் ரம்மியமான மணத்தால், அனைவரையும் மயக்கும் அற்புதம் மனோரஞ்சிதம் மலருக்கு உண்டு.
மலர்களில் வாசம் அதிகம் கொண்டது மனோரஞ்சிதம்.
இந்த பூ நுகரும் போது, நாம் நினைக்கும் பழத்தின் வாசனை வரும் என்றும் கூறப்படுகிறது.
இலை போன்ற தோற்றத்தில் பச்சை வண்ணத்தில் பூத்து, பின், வெளிர் மஞ்சள் நிறத்திற்கு இந்த பூ மாற்றம் அடையும்.
பூக்கும் போது, இலையை போன்றே காணப்படும்.மாலை நேரத்தில் மட்டுமே பூக்கக்கூடியது இது.
மனோரஞ்சிதம் பூத்தால், 200 அடி சுற்றளவிற்கு பூவின் வாசம் இருக்கும்.
மிகவும் அற்புதமான இதன் வாசம், மனதை மயங்கச் செய்யும்.
நீர் நிரப்பிய பாத்திரத்தில், ஒரு மனோரஞ்சிதம் பூவை வைத்தால், அந்த அறை முழுவதும் சுகந்தமான மணம் வீசும்.
இதன் மணத்திற்கு ஈடு இணையே கிடையாது.
மனதை மயக்கும் என்பதாலும், மனதில் நினைக்கும் பழத்தின் வாசத்தை தரும் என்பதாலேயே, இது மனோரஞ்சிதம் என, அழைக்கப்படுவதாக தெரிகிறது.
இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது.
உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
9 likes
14 shares