#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
பங்குனி உத்திரம்...
பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத நாள் என்பது அனைவருக்கும் தெரியும்.
பங்குனி மாத வளர்பிறையில் வரும் உத்திரம் நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் சேர்ந்த நாளையே பங்குனி உத்திரம் நாளாக கொண்டாடுகிறோம்.
பல தெய்வீக திருமணங்கள் இந்த நாளில் நடைபெற்றதால் இந்த நாள் சிறப்புக்குரியது என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற நாள் என்பதை தாண்டி பல சிறப்புகள் இந்த பங்குனி உத்திரம் திருநாளுக்கு உண்டு.
பங்குனி உத்திரம் நாளுக்குரிய சிறப்புகள் இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன், ரதியின் வேண்டுதலால் மீண்டும் உயிர்பெற்றது இந்த நாளில் தான்.
மதுரை மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கு திருமணம் நடைபெற்றது இந்த நாளில் தான்.
முருகனை மணப்பதற்காக தவம் செய்த வள்ளி, நம்பியின் மகளாக அவதரித்தது இந்த நாளில் தான்.
காஞ்சி காமாட்சி ஆற்று மணலில் லிங்கம் செய்து வழிபட்டு, சிவனின் அருளை பெற்றது இந்த நாளில் தான்.
மஹாபாரதத்தில் அர்ஜூனன் அவதரித்தது பங்குனி உத்திர நாளில் தான்.
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதர், ரங்கநாயகி தாயாருடன் திருமண கோலத்தில் காட்சி தருவதும் இந்த நாளில் தான். வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய திருக்காட்சியை காண முடியாது.