SHEIK 🌺KSN🌺
514 views
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் தங்கி இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். -உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘நிதானமாகச் செல்லுங்கள். இவர் என் மனைவி ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்’ என்றார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், ‘அல்லாஹ் தூயவன் இறைத்தூதர் அவர்களே! தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான்.. அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்… என்று நான் அஞ்சினேன்’ என்றார்கள். அறிவிப்பாளர் : ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) (புகாரி: 3281) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️