#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் கீழ்க்காணும் படத்தில் முதலில் காண்பது கோயிலில் வணங்கும் நாக நாதர் வழிபாடு,
மற்றொன்று "மருத்துவ குறியீடு".
அது இருக்கட்டும் நம்முடைய ஜாதகத்தில் ராகு,கேது என இரு கிரகங்களை வணங்குகிறோம்.இதை பாம்பாக உருவகப்படுத்துவார்கள்.
பாம்புக்கும்,ராகு கேதுவுக்கும் என்ன சம்பந்தம்?
ஒன்றுமில்லை.ஜாதகத்தில் ராகு,கேதுவின் காரகத்துவம் என்பது நம் உடலில் உள்ள குரோம்சோம்கள் இணைப்புதான்.
ஆணை குறிக்கக்கூடிய 'y"குரோம்சோம்கள்தான் இராகு.
பெண்ணை குறிக்கக்கூடிய "X"குரோம்சோம்கள் தான் கேது.
"Y"குரோம்சோம்களின் வடிவம் மனித தலையுள்ள பாம்பை போல இருக்கும்,"X"குரோம்சோம்களின் வடிவம் தலையில் பாம்பு போல இருக்கும்.
இந்த இரு குரோசோம்கள் இணைந்துதான் ஓர் உயிர் உண்டாகிறது.இரு குரோகசோம்கள் இணைந்து இருப்பது இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்தவை போலவே இருக்கும்.
இதை நாம் நாகநாதர் என்ற பெயரில் வணங்குகிறோம்.
உயிரை கொடுப்பது,காப்பது மருத்துவம் என்பதை காட்டத்தான் இந்த குறியீடை மருத்துவத்துறை வைத்துள்ளது.
நிற்க!
ஜோதிடத்தில் இராகு என்பது தந்தை வழி பாட்டனாரை குறிக்கும்.
கேது தாய் வழி பாட்டியாரை குறிக்கும்.
ஒரு ஆணிடம் உள்ள "Y"குரோசோம்கள் நேரிடையாக தன் மகனுக்கு 75 சதவீதம் போகும்.அதாவது இந்த குரோம்சோம்கள் ஏழு தலைமுறைக்கு மகன் வழி வாரிசுகளுக்கு சதவீதம் குறைந்து,குறைந்து போகும்.
மனிதப்பிறவியில் ஆணுக்கு XY என இரண்டு குரோம்சோம்கள் இருக்கும்.பெண்ணுக்கு XX என இரண்டு இருக்கும்.
ஒரு ஆணை உருவாக்க Y போய் பெண்ணோட் X-ல் சேரணும்.அப்பதான் ஆண் பிறக்கும்.
ஆணை உருவாக்கக்கூடிய Y குரோசோம்கள் ஆணிடம் மட்டும் இருப்பதாலும்,அந்த Y குரோசோம்கள் அவன் பின் ஏழுதலைமுறைக்கு பிறக்கும் ஆண்களுக்கு வருவதால்தான் பண்டைய காலத்தில் இறுதிக்காலம் பண்ணும் உரிமை ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
அதேபோல் குலதெய்வம் வழிபாடு,பெண் திருமணம் செய்து சென்றால் கணவனின் குலதெய்வத்தையே தன் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.
ஜோதிடத்தில் இருக்கக்கூடிய ராகு,கேதுவால் ஏற்படக்கூடிய களத்திர தோசம்,புத்திர தோசம்,மாங்கல்ய தோசம் இந்த Xy குரோசோம்களின் வழியாக வருவதுதான்.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தாலும்,இரட்டை குழந்தைகள் பிறந்தாலும் உங்க குடும்பத்துல இது போல யாருக்கும் சர்க்கரை இருக்கா,இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கா என மருத்துவர்கள் கேட்பது வழிவழியாக வரும் குரோசோம்களின் கட்டமைப்புதான்.
ஒருவன் செயல்கள்,எண்ணங்கள் அவனுடைய குரோசோம்கள் கட்டமைப்பை பொருத்து மாறுபாடும் அதாவது இராகு,கேது அமைப்பை பொருத்து மாறுபடும்.ஒருவன் இந்த பிறவியில் செய்யும் தவறு குரோசம்கள் வழியாக தன் வாரிசுகளுக்கு ஏழு தலைமுறைக்கு செல்லும்.
"எங்க தாத்தா பண்ண பாவத்துக்கு ஏன் சார்!என்னை பாதிக்குது"என இனி கேட்க மாட்டீங்கனு நினைக்கிறேன்😊
இதைத்தான் சுருக்கமா விதி,கர்ம வினை என்கிறோம்.