ராகு சகுனி...கேது நாரதர்...
சகுனியின் நன்மை கூட தீமையில் முடியும்.
நாரதரின் கலகம் கூட நன்மையில் தான் முடியும்.
ராகுவினால் கிடைத்தது.
தீயவர்களாலும்
தீய வழிகளினாலும்
தீய விஷயங்களுக்காகவும்
தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
கேதுவினால் கிடைக்காதது.
தீயவர்களாலும்.
தீய வழிகளினாலும்.
தீய விஷயங்களுக்காகவும்.
தீங்கு விளைவிக்க கூடியதிலிருந்து தடுக்கும்.
ராகுவின் குணத்தை தாழ்த்தியும்
கேதுவின் குணத்தை உயர்த்தியும்
சொல்வதற்கு காரணம் உண்டு.
ராகு போக காரகன்
கேது ஞான காரகன்
ராகு கொடுத்தால் போகத்திற்காகவே கொடுப்பார்.
போகம் நிலையற்றது.
போகம் புறநிலை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
போகத்தினால் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உண்டோ.!!
அதே அளவிற்கு தீமையும் உண்டு.
கேது தடுத்தால் ஞானத்திற்காகவே தடுப்பார்.
ஞானம் நிலையானது.
ஞானம் அகநிலை மகிழ்ச்சியையே
தரும்.
ஞானம் கிடைக்கப்பெறும் போது
எந்த அளவிற்கு துன்பம் உண்டாகிறதோ.?
அதைவிட அதிகமாக ...
இறுதியில் இன்பம் உண்டாகும்.
உன்னதமான மனிதப் பிறவியின் லட்சியங்களை மறக்க வைத்து போகத்தில் திழைக்க வைத்து.
ராகுவின் பிரம்மாண்ட
குணங்களால்..
மாயத்திரை போட்டு ஜாதகரின்
இயல்பு நிலையை மறக்க வைத்து
குறுக்கு வழிகளில் சென்றேனும்....
வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதும்
பிரபலப்படுத்துவதும்
ராகு பகவான்.
மனித பிறவியின் உன்னதமான லட்சியமான மோட்சத்தை அடைவது ஒன்றையே குறிக்கோளாக கொள்வதற்கும்...
மாயத்திரையை அகற்றுவதற்கும்
பேருதவி புரிவதே ...
கேது பகவான்.
அதனால்தான் ...
ராகு சகுனி.
கேது நாரதர்.
சுருக்கமாக...
ராகு தரும் மகிழ்ச்சி....
சகுனியின் சூழ்ச்சியின் மூலம்
உண்டாகக்கூடிய
நிலையற்ற மகிழ்ச்சி.
கேது தரும் மகிழ்ச்சி....
நாரதரின் கலகத்தின் மூலம்
உண்டாகக்கூடிய
நிலையான மகிழ்ச்சி.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628