🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿
📖 *தேவ வசனம்*
*“யெப்தா கர்த்தருக்குப் பொருத்தனை செய்து: ‘நீர் அம்மோனின் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால், நான் அம்மோனின் புத்திரரிடமிருந்து சமாதானமாய் திரும்பிவரும் போது என் வீட்டின் வாசலிலிருந்து என்னை எதிர்கொள்ள வருகிறவன் எவனாகிலும் கர்த்தருக்குரியவனாக இருப்பான்’ என்றான்.”*
— *நியாயாதிபதிகள் 11:30-31*
🎙️ *செய்தி*
*யெப்தா போருக்குச் செல்லும் முன் தேவனிடம் ஒரு பொருத்தனை செய்தான். அவன் வெற்றியை வேண்டி தேவனை நாடினான்*. *தேவன் அவனுக்கு வெற்றியையும் கொடுத்தார்.*
*ஆனால் இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான ஆவிக்குரிய பாடத்தை கற்பிக்கிறது.*
தேவனுக்கு நாம் சொல்லும் வார்த்தை மிகவும் பரிசுத்தமானது.
நாம் தேவனிடம் ஜெபிக்கும் போது, துன்பத்தில் அல்லது தேவையை நினைத்து பல நேரங்களில் பொருத்தனை களை, வாக்குத்தத்தங்களைச் சொல்லலாம். ஆனால் வேதாகமம் சொல்லுவது என்னவென்றால்:
தேவனுக்கு செய்யும் பொருத்தனை கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி பெருக்கில் அல்லது செய்ய கடினமான, நிறைவேற்ற முடியாத, நமக்கு இழப்பை, பாதகத்தை உண்டு பண்ணும் பொருத்தனை செய்ய வேண்டாம்,
பொருத்தனை செய்தால் அதை உண்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
தேவனுக்கு சொன்ன வார்த்தையை லேசாக எண்ணக்கூடாது. யெப்தா செய்த பொருத்தனையால் தன் முன் வெற்றியை கொண்டாட வந்த மகளை பொருத்தனை நிமித்தம் இழக்க நேரிட்டது.
இன்றைய நாளில் நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் தேவன் முன் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொருத்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அது நமக்கு சாபமாகவும் மாறும். அதனால்
விசுவாசத்துடனும், பொறுப்புடனும் தேவனை நாடுவோம். தேவ நன்மையை ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளுவோம்.
🙏 *ஜெபம்:*
கர்த்தாவே, உம்முன் பேசும் எங்கள் வார்த்தைகள் பரிசுத்தமாக இருக்க உதவிசெய்யும். நாங்கள் செய்யும் வாக்குத்தத்தங்களை உண்மைபாய் நிறைவேற்றும் கிருபையை தாரும்.ஒரு வேளை நாங்கள் தவறும் பட்சத்தில் அது எங்களுக்கு சாபத்தை வருவிக்காமல் அதை மன்னித்து எங்களை ஆசீர்வதியும், நிறைவேற்றக் கூடிய பொருத்தனைகளை செய்ய ஞானத்தையும் நிதானத்தையும் தாரும்.ஆமேன்.
— ✍️*சகோ சுதாகர் காட்வின்*
🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்*
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்