♦️♦️ஸ்ரீ ராம நவமி (27.03.2026,) சிறப்பு பதிவு
**************************************************
🌹நவமி திதியில் ராமர் பிறக்க காரணம் என்ன?
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராம அவதாரம் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. ராமபிரான் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளை தான் ராம நவமி என்று கூறுகிறோம். அந்த வகையில் ராம நவமி 27.03.2026 அன்று வருகிறது.
🌹ராமர் பிறந்த வரலாறு :
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் வெற்றிக்கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
தசரத சக்கரவர்த்தியின் குருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம்? என்ற ஆலோசனை யை கேட்டார்.
முனிவர் சொன்ன ஆலோசனைபடி தன்னுடை ய அரண்மனையில் புத்ரகா மேஷ்டி யாகத்தை நடத்த முடிவு செய்தார். யாகம் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டி ருந்த சமயத்தில், யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரத சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார்.
அந்த குடுவையில் இருக்கும் பாயாசத் தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்ற கட்டளையையும் இட்டார் யக்னேஸ்வரர். தசரதனின் மனைவிகளு ம் பாயாசத்தை அருந்தினார்கள். அதன் பின்பு பங்குனி மாதம் நவமி தினத்தில் கோசலை ராமபிரானை பெற்றெடுத்தாள் கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள்.
🌹ராமரின் சிறப்புகள் :
🔹ராமர் வசிஷ்ட முனிவரிடம் வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர்.
🔹ராம பானத்திற்கு இணை வேறு ஏதும் இல்லை.
🔹ராமர் வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர்.
🔹இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும்? என்பதற்கான உதாரணமாக வும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதற்கு உதார ணமாகவும் வாழ்ந்தவர் தான் ராமபிரான்.
🌹ராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை உங்களுக்கு தெரியுமா?
🚩பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மகாவிஷ்ணு விடம் சென்று முறையிட்டன.
🚩விஷ்ணுபகவான் அவைகளுக்கு ஆறுதல் அளித்தார். உங்கள் இருவரையு ம் போற்றக் கூடிய நாள் வரும், அதுவரை நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். இதன் படியே அஷ்டமி திதி அன்று எம்பெரு மான் கிருஷ்ணர் அவதாரத்தையும், நவமி திதி அன்று ராமர் அவதாரத்தையும் எடுத்தார்.
இதன் அடிப்படையில் நாம் எல்லோரும் கோகுல அஷ்டமியும், ராம நவமியும், அஷ்டமி, நவமி திதியில் கொண்டாடி வருகின்றோம்.
🌹ஸ்ரீ ராம சீதா ஜெயம்...
🌹ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா...
🌹22.03.2026... நேசமுடன் விஜயராகவன்....
#🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏ஸ்ரீ ராமரின் ஓவியங்கள்🖌 #🏹ராமாயணம் 📚 #🏹ராம நவமி விரைவில்🌸 #🌻🌻காலை வணக்கம்🌻🌻