#🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 வாழ்வருளும் ஆனந்த தாண்டவ தரிசனம்*
♦️ திருக்குற்றாலம் சித்திரசபையிலும், திருநெல்வேலி தாமிரசபையிலும், மதுரை வெள்ளிசபையிலும், சிதம்பரம் கனகசபையிலும், திருவாலங்காட்டில் ரத்னசபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிகிறார்.
♦️ நடராஜரின் பிரம்ம தாண்டவத்தை திருமுருகன்பூண்டியிலும், ஊர்த்வ தாண்டவத்தை அவிநாசியிலும், சுந்தர தாண்டவத்தை மதுரையிலும், அஜபா தாண்டவத்தை திருவாரூரிலும், ஆனந்த தாண்டவத்தை தில்லையிலும் தரிசிக்கலாம்.
♦️திருவிற்கோலம் எனும் தர்ப்பைக்காட்டிலும், திருப்போரூர் எனும் மூங்கிற்காட்டிலும், திருவெவ்வூர் எனும் ஈக்காட்டிலும், திருவெண்பாக்கம் எனும் இலந்தைக்காட்டிலும், திருவாலங்காடு எனும் ஆலங்காட்டிலும் ஆடும் பரம் பொருள், நடராஜர்.
♦️ திருநெல்வேலியில் காளிகா தாண்டவம் (படைத்தல்), திருப்பத்தூரில் கவுரிதாண்டவம் (காத்தல்), குற்றாலத்தில் திரிபுரதாண்டவம் (மறைத்தல்), திருவாலங்காட்டில் ஊர்த்வதாண்டவம் (அருளல்), தில்லையில் ஆனந்த தாண்டவம் எனும் ஐந்தொழில்களையும் புரியும் வடிவில் நடராஜர் விளங்குகிறார்.
♦️ சித்திரை திருவோணம் உச்சிக்காலம், ஆனி உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி வளர்பிறை சதுர்தசி மாலைசந்தி, புரட்டாசி வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி திருவாதிரை உஷத்காலம், மாசி வளர்பிறை காலைசந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும்.
♦️ சிதம்பரம் கருவறையின் வலதுபுறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜப் பெருமான், ஸ்படிகலிங்கம் என மூன்று வடிவங்களில் நடராஜர் அருள்கிறார்.
♦️ சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை.
♦️ உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம். என்ற தேவசபை.
♦️ ஊர்த்வதாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. இது கொடிமரத்தின் தென்புறம் உள்ளது, நிருந்தசபை எனப்படுகிறது.
♦️ ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்குமிடம் ஆயிரம்கால் மண்டபம். இது ராஜசபை.
♦️ புஜங்கலலிதம், காலசம்ஹார மூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகிய நவ தாண்டவ சிற்பங்களை தஞ்சையிலுள்ள திருச்செங்காட்டங்குடியில் தரிசிக்கலாம்.
♦️ ஒரே கல்லால் வடிக்கப்பட்ட நடராஜரின் அற்புத திருவுருவை வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ளது.
♦️ சுந்தரமூர்த்தி நாயன்மாருக்காக நடராஜர் தன் தில்லைத் திருநடனத்தை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிக் காட்டியதால் பேரூர் நடராஜர், குடகத் தில்லை அம்பலவாணன் எனப்படுகிறார்.
♦️ அருணகிரிநாதருக்காக ஆறுமுகன் நடராஜ தாண்டவத்தை ஆடிக்காட்டியதை நினைவுகூற திருச்செந்தூர் ஏழாம் நாள் பெருவிழாவில் ஷண்முகர் சிவப்பு சாத்தி பின்புறம் நடராஜ திருக்கோல தரிசனம் தருகிறார்.
♦️ தேவர்களின் பகல்பொழுதின் கடைசி நேரம், ஆனி மாதம். அந்த மாத உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் நடராஜருக்கு பூஜை செய்வதே ஆனித்திருமஞ்சனம் எனப்படுகிறது.
♦️மதுரையில் நடராஜர் கால்மாறி திருநடனம் புரிவதை பரஞ்ஜோதி முனிவர், திருவிளையாடற் புராணத்தில் 25ம் படலமாக விவரிக்கிறார்.
♦️ நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயிலில் ஐந்து படிகள் அமைந்துள்ளன.
♦️ தேவர்களுக்காக 42, முருகனுக்காக 3, திருமாலுடன் 9, அம்பிகையுடன் 36, தானே ஆடியது 18 என மொத்தம் 108 சிவதாண்டவங்கள் புகழ் பெற்றவை.
♦️ நெல்லை ஆழ்வார்குறிச்சி கோயிலில் உள்ள ஒரே கல்லினாலான நடராஜரின் சிலையை தட்டினால் வெண்கல ஓசை எழுகிறது.
♦️ ஆனித்திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கி வைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி.🌹