அகம் நாஸ்தியானால் உடனே நாத்திகம் என்று கிடையாது. சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு சென்று வந்த பிறகு ஒரே டார்ச்சர். இந்த டார்ச்சர் ஏன் எங்கிருந்து வருகிறது என்று கொஞ்சம் தத்துவ ரீதியாக ஆராயலாம் என்று நினைத்தேன். எதனால் துன்பம் ஏற்படுகிறது? நாம் செய்யும் தவறுகளாலா? (என் நிலையில் அப்படியிருக்க வாய்ப்பில்லை.) இயற்கை விதிகளை மனிதர்கள் மீறுவதினாலா? அதுவும் இல்லை. அல்லது புத்த மதம் கூறுவது போல் துன்பம் தான் உலகத்தின் இயற்கையா?! (Default state of the world is sufferings). இது குறித்த புத்தகங்கள் ஏதாவது உண்டா என்று ஜெமினி ஏஐயை கேட்ட போது, ஒரு புத்தகம் லிஸ்டில் வந்தது. அது சிமோன் வேய் (simone weil) என்ற பிரான்ஸ் நாட்டு பெண்மணி எழுதிய Gravity and Grace (புவியீர்ப்பும் இறையருளும்) என்ற புத்தகம். இவர் ஒரு மிகவும் வித்தியாசமான பெண்மணி. அவர் தன்னுடைய டைரியாக எழுதி வைத்ததை அவர் இறந்த பின் புத்தகமாக வெளியிடப்பட்டு பிறகு புகழ் பெற்றது. அவர் நம் நாட்டில் இருந்து அந்த நாட்டில் பிறந்து அவர்களிடம் (invisibles) மாட்டிக் கொண்டு பெரும் துன்பம் அனுபவித்தார் போலிருக்கிறது. அவர் வாழ்க்கை முழுவதும் துன்பம்!! (நான் கூட ஒரிஜினலாக நான் எந்த நாட்டை சேர்ந்தவன்?! எதற்காக இந்த நாட்டில் பிறந்து இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறேன் என்று யோசித்த போது இந்த புத்தகம் அறிமுகமானது!!😄). ஏழை தொழிலாளர்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அவர் கடைசியில் பட்டினி கிடந்தே 36 வயது போல் இறந்தாராம்!! ************************************************ அந்த புத்தகத்தில் முதல் சில பக்கங்கள் படித்தேன். அப்போது தான் "நாஸ்தி + அகம்" பற்றி தோன்றியது. தொடர்ந்து மிகவும் துன்பம் அனுபவித்தால், உள்ளே எல்லாம் அழிந்து ஒரு வெற்றிடம் (void) உருவாகும். அதையே நாஸ்தி அகம் என்று கூறினேன். அந்த வெற்றிடத்தை நாம் நிரப்பாமல் விட்டால் அங்கு இறையருள் வந்து குடி கொள்ளும் என்று அவர் கூறுகிறார். என் அகத்தில் அந்த வெற்றிடத்தை நாத்திக elements குடிகொண்டு விட்டது என்று நினைக்கிறேன்!! இறைவன் இல்லாத உலக நிலையே துன்ப நிலை என்று அவர் கூறுகிறார்!! ***************** நம் அனைவருக்குள்ளும் இறைவன் இருக்கிறான். அவன் வெளிப்பட விடாமல் உள்ளத்தில் மற்றவற்றை போட்டு நிரப்பினால், அதைத் தான் பவளம் வெளிப்படுத்தும். இறைவனை வெளிப்படுத்த எங்கோ செல்ல வேண்டியதில்லை. இங்கே நம் உள்ளேயே அவன் இருக்கிறான். இரும்பை அடிக்கடி காந்தத்தின் அருகே எடுத்துச் சென்றால் தான் அது காந்தமாகும். நம் உள்ளத்தில் அருளை நிரப்ப மீண்டும் மீண்டும் இறைவன் அருகில் செல்வது , வழிபடுவது அவனையும் அவன் அருளையும் வெளிப்பட வழிவகை செய்கிறது!! *********************************************** அது போல், இயற்கையாகவே நம் எல்லாரிடமும் மாணிக்கம் உண்டு; அந்த மாணிக்கத்திற்கு இயற்கையான ஒளியும் உண்டு; அந்த ஒளியை தூண்டும் பிரேயரே காயத்ரி மந்திரமோ?! **********************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம